search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mullaiperiyar dam"

    • கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • மத்திய அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்.

    முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை பரிசீலனைக்கு மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MOEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளேன்.

    தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.

    தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.

    பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.

    இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்படும்.

    எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிவிட வேண்டும்.

    எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தற்போது பருவமழை யால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • கசிவுநீர் அளவு 62 லிட்டர் என நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனை அணை மிகுந்த பலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

    தற்போது பருவமழை யால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வள ஆணையர் செயற்பொறி யாளர் சதீஷ் தலைமையில் தமிழக பிரதிநிதிகள் பெரியாறு சிறப்பு கோட்ட பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகள் கட்டபணை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அணில்குமார், உதவி பொறியாளர் அருண்ராஜ் உள்ளிட்ட குழுவினர் மெயின் அணை, பேபி அணை, கேலரிபகுதி மதகு பகுதிகளை ஆய்வு செய்த னர்.

    கசிவுநீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாலையில் ஆலோசனை க்கூட்டம் குமுளி 1ம் மைலில் உள்ள மத்திய கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இதன் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில்,

    அணையில் உள்ள 13 மதகுகளில் 2,4,5வது மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்பட்டது. மேலும் கசிவுநீர் அளவு 62 லிட்டர் என நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனை அணை மிகுந்த பலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அணையில் வழக்க மான பணிகளை மேற்கொள்ள பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கோரி குழு தலைவரை வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.75 அடியாக உள்ளது. அணைக்கு 1324 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. 635 கனஅடி நீர் வருகிறது. 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 124 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. 30 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 21, பேக்கரி 27.4, கூடலூர் 2.8, சண்முகாநதி அணை 0.8, உத்தமபாளையம் 1 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 700 கனஅடியில் இருந்து அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மழை சற்று ஓய்ந்திருந்தநிலையில் நேற்று மீண்டும் பெய்ய தொடங்கி யது.

    இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1101 கனஅடியாக உயர்ந்தது. நேற்று வரை அணையிலி ருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்பட்டது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அணையின் நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது. வைகை அணையின்நீர்ம ட்டம் 64.60 அடியாக உள்ளது. 769 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 106 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, தேக்கடி 9.2, கூடலூர் 16.2, உத்தம பாளையம் 16.6, சண்முகாநதி அணை 18.4, போடி 11.8, வைகைஅணை 3.8, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 1, வீரபாண்டி 5, ஆண்டிபட்டி 3.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தொடர் மழையால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேக்கடியில் 10 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
    • பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1187 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேக்கடியில் 10 செ.மீ மழையளவு பதிவாகி உள்ளது. இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1187 கனஅடியாக உயர்ந்துள்ளது. நேற்று வரை 800 கனஅடிநீர் தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டது. இன்று காலை நீர்திறப்பு 1000 கனஅடியாக அதிகரி க்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.25 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம்136 அடிவரை உயரும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    வைகை அணை யின்நீர்ம ட்டம் 53.18 அடியாக உள்ளது. அணைக்கு 884 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின்நீ ர்மட்டம் 54.75 அடியாக உள்ளது. 35 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 101.02 அடியாக உள்ளது. 28 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, தேக்கடி 101.4, கூடலூர் 1, உத்தம பாளையம் 3.8, சண்முகா நதிஅணை 2.4, வைகை அணை 3.6, மஞ்சளாறு அணை 18, சோத்துப்பாறை 2, ஆண்டிபட்டி 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.
    • சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டுகிடந்த அணைகள், குளம், கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து 866 கனஅடியில் இருந்து 1128 கனஅடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் அணை யிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 400 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 800 கனஅடியாக உயர்த்த ப்பட்டது. அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக உள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 132 அடிவரை உயரும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வைகைஅணையின் நீர்மட்டம் 52.72 அடியாக உள்ளது. அணைக்கு 710 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    57 உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.60 அடியாக உள்ளது. விரைவில் 55 அடியை எட்டியவுடன் 3-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். எனினும் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 47 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை பகுதியில் பெய்த கனமழை யால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 99.22 அடியாக உள்ளது. அணைக்கு 42 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வன த்துறையினர் அறிவித்தனர். இன்று 2-ம் நாளாக நீர்வரத்து அதிகரித்தே காணப்படுவதால் தடை தொடரும் என தெரிவித்த னர்.

    இதேபோல் வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியிலும் சுற்றுலா பயணிகளுக்கு 2-ம் நாளாக தடை தொடரும் என வன த்துறையினர் தெரிவித்தனர். இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பெரியாறு 7.6, தேக்கடி 3.2, உத்தமபாளையம் 2.8, சண்முகாநதிஅணை 10.8, போடி 9.6, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 2.2, வீரபாண்டி 7.4, ஆண்டிபட்டி 45, அரண்மனைப்புதூர் 24 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது.
    • நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப் படுகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி 14707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரம் திடீரென பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 120 அடியை கடந்தது.

    இதனால் அணை யிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.35 அடியாக உள்ளது. அணைக்கு 680 கனஅடிநீர் வருகிறது. நேற்று முன்தினம் 1200 கனஅடிநீர் திறக்க ப்பட்ட நிலையில் நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.08 அடியாக உள்ளது. 858 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 89.97 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது.
    • 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத தால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை யின்போது 142 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் 2-ம் போக பாசனம் முழுமைக்கும் தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 120 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி 121.55 அடி நீர்மட்டம் உள்ளது. மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது. நேற்று 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.

    பெரியாறு அணையிலி ருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 50.59 அடியாக உயர்ந்துள்ளது. 962 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 53.70 அடி யாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 122 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதி களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி முல்லை ப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.60 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 122 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 2157 கன அடியாக உள்ளது. திறப்பு 1022 கன அடி. இருப்பு 2945 மி.கன அடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.98 அடியாக உள்ளது. நீர்வரத்து 509 கன அடி. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1862 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. அணைக்கு 11 கன அடி நீர் வருகிறது. இருப்பு 405. 22 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 49.43 மி. கன அடியாக உள்ளது.

    பெரியாறு 14.2, தேக்கடி 9, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் முல்லைப்பெ ரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியில் இருந்து 300 கன அடியாக சரிந்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 400 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.97 அடியாக உள்ளது. அணைக்கு 286 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.80 அடியாக உள்ளது. 64 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. ேசாத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.19 அடியாக உள்ளது. 21 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 1.4, மஞ்சளாறு 11, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது.
    • லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குறைந்து கொண்டே வந்த அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று காலை 1091 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1321 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    மேலும் நேற்று 120.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 120.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து 400 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2786 மி.கனஅடியாக உள்ளது.

    கேரளாவில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் உயரும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையிலிருந்து 400 கனஅடி திறக்கப்படுவதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரம் உள்ள வைகைஅணையின் நீர்மட்டம் 49.25 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாவட்ட குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1895 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 76.32 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 16, தேக்கடி 12.2, சோத்துப்பாறை 4, கூடலூர், உத்தமபாளையம், சண்முகாநதிஅணை பகுதிகளில் தலா 1 மி.மீ என மழை பதிவாகி உள்ளது.

    • பைப் லைனில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
    • இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. மேலும் அணையின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அவர்களுக்கு உதவியாக துணைக்குழு அமைக்கப்பட்டு பருவமழையின்போது அணையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.

    தற்போது தென்மேற்கு பருவமழை அவ்வப்போது மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 119.85 அடியாக உள்ளது. 613 கன அடி நீர் வருகிறது. அணையின் ஷட்டர் பகுதியில் இருந்து போர்பே டேம் சுரங்கப்பாதை மற்றும் அங்கிருந்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் வரை உள்ள பைப் லைனில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.66 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக உள்ளது. நீர் வரத்து மற்றும் திறப்பு இல்லை.

    பெரியாறு 1.4, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 2, சண்முகாநதி அணை 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
    • தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது.

    கூடலூர்:

    கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இதனால் முதல்போக நெல்சாகுபடிக்கு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா என கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்த்தி ருந்தனர்.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது. நீர்மட்டமும் 119.75 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 49.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 22, தேக்கடி 15.4, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை யளவு பதிவாகி உள்ளது.

    ×