search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mumbai stock market"

    • சென்செக்ஸ் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
    • முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம் கோடி குறைந்துள்ளது

    மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையானது வாரத்தின் முதல் நாளிலேயே வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

    மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,580.46 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.மேலும் தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 698 புள்ளிகள் சரிந்து 24,019.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

    வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை ஒப்பிடுகையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு ரூ. 457.16 கோடியாக இருந்த நிலையில், அதில் சுமார் ரூ.15 லட்சம் கோடி குறைந்துள்ளது.

    உலகளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள்ள போர் பதற்றமும்  வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். மேலும் நிஃப்டி குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடன் வர்த்தகமானது. 

    • நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இன்றைய இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது.
    • இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது.

    நேற்று [ஜூலை 2] மும்பை பங்குச் சந்தை குறியீட்டு [BSE] சென்செக்ஸ் 79,856 என்று சாதனையை எட்டிய பின்னர் 31 புள்ளிகள் குறைந்து 79,441 என்ற புள்ளிகணக்கில் முடிவடைந்தது. மேலும் நேற்றைய தினம் தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் [NSE] நிஃப்டி குறியீடு 24,124 என்ற புள்ளிகணக்கில் நிலைபெற்று முடிவடைந்தது.

    இந்நிலையில் நேற்றைய சாதனைகளை தகர்த்தெறிந்து இன்று [ஜூலை 3] வரலாறு காணாத ஏற்றத்துடன் இந்திய பங்குச்சந்தை தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 574 புள்ளிகள் அதிகரித்து 80,015 புள்ளிகணக்கிலும் நிஃப்டி 172 புள்ளிகள் அதிகரித்து 24,296 என்ற புள்ளிகணக்கிலும் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 80,000 புள்ளிகளைக் கடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     

    HDFC வங்கியால் இந்த உயர்வு ஏற்பட்டு உள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிஃப்டி லாபத்தில் HDFC வங்கி முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றுள்ளன.  

     

    ×