search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugarvallidheivanai"

    • கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி போடுகிறார்கள்.
    • நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.

    ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணியரை மனம் உருக வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    இதற்கென தனி வழிபாட்டு முறை உள்ளது.

    ஒவ்வொரு மாதமும் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தினத்தன்று இரவு குழந்தை பாக்கியம் பெற விரும்பும் பெண்கள் ஆண்டார் குப்பம் தலத்தில் தங்கி வழிபாடு செய்யவேண்டும்.

    மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து முருகனுக்கு நடக்கும் பால் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    மூன்று கிருத்திகை நாட்கள் தொடர்ந்து இந்த பூஜை செய்து வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டி போடுகிறார்கள்.

    நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.

    • முருகன் முதியவராக வந்து விளையாட்டு புரிதல்,
    • வள்ளி தினைப்புனம் காத்தல், குறிகேட்டல் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

    மூலவர் எழுந்தருளியுள்ள கர்ப்பகிரக விமானத்தின் கிழக்குப்புறம் திருப்பரங்குன்ற முருகன், சூரியன், சந்திரன்,

    தெற்குப் புறம் காமதகன காட்சி, சம்பந்தருக்கு இறைவிபால் அளிப்பது, விநாயகருக்கு அம்மையப்பர் மாம்பழம் அருளுதல்,

    மேற்குப்புறம் பரமபதநாதர், பாற்கடல் நாதரைக்கருடனும், அனுமனும் வணங்குதல், கோபியருடன் கண்ணன்,

    ராமர் அகலிகையின் சாபம் நீக்கும் காட்சி, விசுவாமித்திரர், லட்சுமணர் ஆகிய சிற்பங்கள் உள் வடக்குத்திசையில் விநாயகர் யானையாக வந்து வள்ளி யைப் பயமுறுத்தல்,

    முருகன் முதியவராக வந்து விளையாட்டு புரிதல், வள்ளி தினைப்புனம் காத்தல்,

    குறிகேட்டல் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

    ராஜகோபுரத்திற்கு வெளியே தென்கிழக்குத் திசையில் குமாரசுவாமி குளமும், வடகிழக்கு திசையில் பாலநதியும் (தற்போது பூமியினுள் அந்தர்வாகினியாய் ஓடி) முருகனுக்கு அணி செய்கின்றன.

    • கருவறையில் ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக முருகன் உள்ளார்.
    • அவர் முகம் அருள்மழை பொழிந்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

    கருவறையில் ஆஜானுபாகு உருவத்தில் கம்பீரமாக முருகன் உள்ளார்.

    அவர் முகம் அருள்மழை பொழிந்து பக்தர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

    திருவருள் பெருகும் கண்களுடன் காட்சி தரும் பாலசுப்பிரமணியரை வணங்கிப்பின் வெளியே வருகையில், இடப்புறம் காசி விஸ்வநாதப் பெருமானின் சன்னிதி உள்ளது.

    அதற்கு அருகே பதினாறுகால் மண்டபத்தின் வடபுறம் விசாலாட்சி அம்பாள், சுப்பிரமணியர், சண்முகர், நடராஜர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

    தெற்குப் பிராகாரத்தில் சுவாமிக்கு நிவேதனப் பொருட்களைத் தயாரிக்கும் மடப்பள்ளியும், அடுத்து திருக்கோவில் அலுவலகமும், அதனையொட்டி கல்யாண மண்டபமும் உள்ளன.

    மேற்குப் பிராகாரத்தில் வாகனக் கிடங்கும், அதனையடுத்து உக்ராண அறையும் உள்ளன.

    கோவிலின் வடகிழக்கு மூலையில் யாகசாலை மண்டபமும், அடுத்து நவக்கிரக சன்னதியும், அதற்கு வெளியே சம்வர்த்தன லிங்கமும் உள்ளன.

    • சங்கர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், பழமதிர் சோலை முருகன் முதலான சிற்பங்களும் உள்ளன.
    • அடுத்து அம்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பிரசன்ன விநாயகர் சன்னதி இருப்பதை காணலாம்.

    முருகன் பிரம்மனைச் சிறையில் அடைத்ததன் அடையாளமாக, தாமரைப் பூவின் மீது அரூபநிலையில் பிரம்மன், மூலவரை நோக்கி வணங்கி இருக்கும் அருட்காட்சி, அம்மண்டபத்தின் நடுவே உள்ளது.

    இது அனைவரும் கண்டு வணங்க வேண்டிய ஒன்றாகும்.

    மண்டபத்தின் மேல்முகப்பில் ஆண்டார்குப்பத்து ஐயன், வள்ளித் திருமணக்காட்சி, தெய்வானைத் திருமணக்காட்சி,

    பிரணவ உபதேசக்காட்சி, முருகன் பிரமனின் சிரசில் குட்டும் காட்சி ஆகியனவும்,

    இதர பக்கங்களில் கார்த்திகைப் பெண்கள் தாமரை மலர்களிலிருந்து ஆறு குழந்தைகளை எடுப்பது,

    முருகன் சக்திவேல் வாங்குவது, அருணகிரியாருக்கு மயில்வாகனர் அருளுவது, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்,

    சங்கர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், பழமதிர் சோலை முருகன் முதலான சிற்பங்களும் உள்ளன.

    அடுத்து அம்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பிரசன்ன விநாயகர் சன்னதி இருப்பதை காணலாம்.

    எண்ணிய காரியங்களை ஈடேற்றும் அந்த விநாயகரை வணங்கிச்சென்று பாலசுப்பிரமணியர் சன்னதியை அடையலாம்.

    • போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.
    • இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.

    சுப்பிரமணியப் பெருமான் சூரனுடன் போர்புரிந்த சமயத்தில், இந்திரன் மயிலாக உருமாறிப் பெருமானைத் தாங்கினான்.

    இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கோவில் விழாக்காலத்தில் மயில்வாகனத்தில் பெருமானை எழுந்தருளச் செய்வார்கள்.

    அதில் மயிலின் தலைபாகம் முருகனது இடப்பக்கத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.

    போரில் முருகன், சூரனை வதம்செய்து, பிறகு கருணையால் அவனை ஆட்கொண்டார்.

    இதனால் சூரனின் ஒரு பகுதி சேவல்கொடியாகவும், மற்றொரு பகுதி மயில்வாகனமாகவும் ஆயிற்று.

    இதனை உணர்த்தும்வண்ணம், உற்சவ காலத்தில் சூரசம்ஹாரம் முடிந்தபின், முருகன் மயில்வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார்.

    அப்போது, மயிலின் தலை, முருகனது வலப்பாகத்தை நோக்கி இருக்குமாறு அமைப்பார்கள்.

    அடுத்து மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பெற்ற சிற்பங்களுடன் கூடிய பதினாறுகால் மண்டபம் காட்சி தருகின்றது.

    • அடுத்து கோவிலினுள் நுழைந்தவுடன் காட்சியளிப்பது தங்கம்போல பளபளவென மின்னும் கொடிமரமாகு
    • கோபுர தரிசனம், இறைவனின் பாத தரிசனமாகும். கோபுரம் ஸ்தூல லிங்கம் எனப்படும்.

    கோபுர தரிசனம், இறைவனின் பாத தரிசனமாகும். கோபுரம் ஸ்தூல லிங்கம் எனப்படும்.

    ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் கோவிலில் ஓங்கி உயர்ந்த ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் காட்சியளிக்கின்றது.

    அதில் முழுவதும் முருகனின் புராணங்களை விளக்கும் பல்வேறு கதைச்சிற்பங்கள், உயிரோட்டத்துடன் நிறைந்து, காண்போரைக் கவருகின்றது.

    தட்சனுக்குத் தாட்சாயணி மகளாகப் பிறந்த வரலாறு, முருகனின் அவதாரம், நலவீரர்கள் தோற்றம், சூரானாதியர் வேள்விசெய்தல் மற்றும் வரம்பெறுதல், வீரவாகு தூது மற்றும் போர், தேவர்கள் முறையீடு, தெற்குப்புறத்தில் தட்சணாமூர்த்தி, மேற்குப்புறத்தில் தாருக சிங்கமுக சம்ஹாரம், வடக்குத்திசையில் சூரசம்ஹாரம், மாமரம், மயில் மீது அமர்ந்து சேவல்கொடியேந்திய பெருமானின் அற்புத தரிசகம் முதலான சிற்பங்கள் உயிரோட்டத்துடன் அமைந்துள்ளதைக் காணலாம்.

    அடுத்து கோவிலினுள் நுழைந்தவுடன் காட்சியளிப்பது தங்கம்போல பளபளவென மின்னும் கொடிமரமாகும்.

    இது சூட்சும லிங்கம் என வழங்கப்படுகிறது. அதனையடுத்து பலிபீடம் உள்ளது.

    அதற்கடுத்து மயூரதேவரின் சன்னதி உள்ளது.

    உயிர்கள் ஆணவமலத்தை விட்டொழித்தால் இறைவனின் திருவடியை அடையலாம் என்பதை அது உணர்த்துகின்றது.

    • ஒவ்வொரு தடவையும் 2 மாலை சாத்தி அர்ச்சனை செய்தல்வேண்டும்.
    • இந்த பரிகார பூஜை காரணமாக 6 வாரத்துக்குள் திருமணம் கைகூடி விடும் என்கிறார்கள்.

    திருமணம் கை கூடும்!

    திருமணம் ஆகாதவர்கள் ஆண்டார் குப்பம் ஸ்ரீபால சுப்பிரமணியரை தொடர்ச்சியாக 6 வாரம் வணங்கினால் பலன் கிடைக்கும்.

    ஒவ்வொரு தடவையும் 2 மாலை சாத்தி அர்ச்சனை செய்தல்வேண்டும்.

    இந்த பரிகார பூஜை காரணமாக 6 வாரத்துக்குள் திருமணம் கைகூடி விடும் என்கிறார்கள்.

    குல தெய்வம்

    ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமியை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் குல தெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    அவர்களில் பெரும்பாலானவர்கள் நெல்லூர், சத்யவேடு, சூலூர் பேட்டை, குண்டூர், நாயுடு பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனவே இந்த ஊர் சுப்பிரமணியபுரம் (புரம் ஊர்) என்று வழங்கப்படலாயிற்று.
    • பிற்காலத்தில் அது ஆண்டவர் குப்பம் என்று மாறியது. தற்போது ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகிறது.

    சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் தச்சூர் கூட்டுச் சாலையில் இருந்து, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஆண்டார் குப்பம் எனும் ஊர் பச்சை பசேல் வயல்களுடன் அமைந்துள்ளது.

    திருவள்ளூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலும், பெரியபாளையத்திலிருந்து சுமார் இருப்பது கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் உள்ளது.

    ரெயிலில் சென்றால், சென்னையிலிருந்து பொன்னேரிக்குச் சென்று அங்கிருந்து பஸ் மூலம், தச்சூர் செல்லும் வழியாகச்சென்று ஆண்டார்குப்பத்தை அடையலாம்.

    புராண காலத்தில் பாலசுப்பிரமணிய கடவுள், இத்தலத்தில் உரோம முனிவருக்கும், சம்வர்த்தனருக்கும் காட்சியளித்தார்.

    எனவே இந்த ஊர் சுப்பிரமணியபுரம் (புரம் ஊர்) என்று வழங்கப்படலாயிற்று.

    வணங்கும் அடியார்களை ஆண்டு கொண்டு அருள்புரியும் ஆண்டவன் கோவில் கொண்டுள்ள தலம் என்பதால் ஆண்டிகள் குப்பம் (குப்பம் ஊர்) என்று அழைக்கப்பட்டது.

    பிற்காலத்தில் அது ஆண்டவர் குப்பம் என்று மாறியது. தற்போது ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகிறது.

    • பிறகு பிரம்மனை முருகன் சிறையில் அடைந்தார். இந்த நிகழ்வு நடந்த தலமாக ஆண்டார்குப்பம் கருதப்படுகிறது.
    • இந்த தலத்தில் உள்ள மூலவர் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.

    சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஆண்டார் குப்பம் முருகன் தலமும் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் பெருமைகளைக் கொண்டது.

    படைப்புத் தொழில் செய்து வரும் பிரம்மனின் ஆணவத்தை அடக்க, பிரணவ மந்திரம் சொல்ல சொல்லி அவர் தலையில் முருகன் கொட்டினார்.

    பிறகு பிரம்மனை முருகன் சிறையில் அடைந்தார். இந்த நிகழ்வு நடந்த தலமாக ஆண்டார்குப்பம் கருதப்படுகிறது.

    இந்த தலத்தில் உள்ள மூலவர் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.

    இவர் தன் தொடை மீது இரு கைகளையும் வைத்தப்படி அதிகாரத் தோரணையுடன் பிரம்மனை கேள்வி கேட்பது போல சிலை அமைப்பு உள்ளது.

    இந்த மூலவர், சுயம்புவாக தோன்றிய மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    முருகன் அதிகார தோரணையுடன் இருப்பது, தமிழ்நாட்டில் இந்த தலத்தில் மட்டுமே.

    அந்த வகையில் ஆண்டார்குப்பம் தலம் ஒரு அபூர்வ தலம்.

    இங்கு வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் செய்வது நிறைந்த பலன்களைத் தரும்.

    • ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார்.
    • எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும்.

    ஏதாவது பிரார்த்தனை இருந்தால் வீட்டில் ஒரு இடத்தில் ரோமரிஷியை ஆவாகனம் செய்து பழம், தண்ணீர் வைத்து வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

    ரோமரிஷி சந்திரகிரகத்துக்கு உரியவர் ஆவார்.

    எனவே அவரை வழிபட்டால் சந்திரகிரக தோஷம் இருந்தால் அகன்று விடும்.

    மனதில் தைரியத்தை ஏற்படுத்துவது சந்திரகிரகம்தான்.

    ரோமரிஷியை கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் எந்த அளவுக்கு வழிபடுகிறார்களே....

    அந்த அளவுக்கு மனதில் தெளிவும், தைரியமும் உண்டாகும்.

    முக்கிய பிரச்சினைகளில் முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தால் ரோமரிஷியை மனமுருக வேண்டினால் தெளிவான முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

    எனவே கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் ரோமரிஷியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

    • கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் ரோமரிஷியை மனதில் நினைத்து வீட்டிலேயே வழிபடலாம்.
    • அவருக்குரிய போற்றிகள், மந்திரங்களை சொல்லி வந்தால் ரோமரிஷி பலன் தருவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

    ரோமரிஷி எங்கு ஜீவசமாதி ஆனார் என்பதில் தெளிவான விளக்கங்கள் இல்லை.

    3 கோடி பிரம்மாவின் வாழ்வுக்குப் பிறகே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும் என்று சில நூல்களில் குறிப்பு உள்ளது.

    ஆனால் அது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை கொண்டது என்பதை யாராலும் உறுதிபடுத்த முடியவில்லை.

    இதனால் அவர் தியானம் செய்த இடங்கள் அருள் அலையை தரும் இடங்களாக இருக்கின்றன.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் திங்கட்கிழமை தோறும் ரோமரிஷியை மனதில் நினைத்து வீட்டிலேயே வழிபடலாம்.

    அவருக்குரிய போற்றிகள், மந்திரங்களை சொல்லி வந்தால் ரோமரிஷி பலன் தருவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.

    ரோமரிஷியை வழிபடும்போது வெண்பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபடலாம்.

    • ரோமரிஷி தரிசனம் செய்த இந்த 9 சிவாலயங்களும் நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
    • நவக்கிரங்களுடன் தொடர்புடைய இந்த 9 ஆலயங்களும் சீரும் சிறப்பும் மிக்கவை.

    இதே போன்று தமிழகத்தின் சில சிவாலயங்களில் ரோமரிஷி சித்தரின் தியான பீடங்கள் இருக்கின்றன. அந்த சிவாலயங்களில் தியானம் செய்த காலங்களில் அவரது உடலில் இருந்து விழும் ரோமங்கள் பிரம்மனின் மரணத்தை குறிப்பதாக கருதப்பட்டது. ஒரு தடவை பிரம்மன் மறையும் போது மட்டுமே அவரது உடலில் இருந்து ஒரு ரோமம் விழுந்து லிங்கமாக மாறியதாக சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் ரோமரிஷி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பது உறுதியாகிறது.

    சிவாலயங்களில் தியானம் செய்து திருப்பணிகள் செய்த ரோமரிஷி இறுதியில் சிவனை நேரில் பார்த்து தரிசனம் செய்து சிவமுக்திபேறு பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

    இதற்காக அவர் அகத்தியரின் உதவியை நாடினார்.

    அவருக்கு உதவ முன் வந்த அகத்தியர், "தாமிரபரணி நதியில் நான் ஒன்பது தாமரை மலர்களை விடுகிறேன்.

    அவை மிதந்து சென்று கரை ஒதுங்கும் இடங்களில் லிங்கம் நிறுவி வழிபட்டால் சிவபெருமான் காட்சி தருவார்" என்றார்.

    அதன்படி தாமிரபரணி நதிக்கரையில் பாபநாசம், சேரன்மாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய 9 இடங்களில் சிவாலயம் அமைத்து ரோமரிஷி வழிபட்டார்.

    இறுதியில் தாமிரபரணி நதியும் கடலும் சேர்ந்து சங்கமிக்கும்  இடத்தில் ரோமரிஷிக்கு சிவபெருமான் காட்சி அளித்தார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ரோமரிஷி தரிசனம் செய்த இந்த 9 சிவாலயங்களும் நவகைலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    நவக்கிரங்களுடன் தொடர்புடைய இந்த 9 ஆலயங்களும் சீரும் சிறப்பும் மிக்கவை.

    இந்த தலங்களில் வழிபட்டால் ரோமரிஷி பெற்ற பலன்கள் நமக்கும் கிடைக்கும். அதற்கு ரோமரிஷியை போன்று மனமுருக வழிபட வேண்டியது அவசியமாகும்.

    ×