என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Neet PG Exam"
- நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ந்தேதி நடைபெற இருந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நீட் முதுநிலை தேர்வு கடந்த மாதம் ஜூன் 23-ந்தேதி நடைபெற இருந்தது. இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது.
இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு அடுத்த மாதம் ஆகஸ்ட் 11-ந்தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
- மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டேஜ் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இத்தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது.
தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்?
தனியார் பயிற்சி மையங்களையும், தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடுதான் நீட் தேர்வு என்று நாங்கள் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது.
மருத்துவராகும் கனவுடன் புறப்படும் ஏழை, எளிய பிள்ளைகளை மரணக்குழுயில் தள்ளும் நீட் அநிநீக்கு, மத்திய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் சலுகை அறிவிப்பு.
- நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
"நீட் முதுகலை படிப்புகளுக்கான தகுதி சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் தங்களின் விருப்பங்களை திருத்த அனுமதி வழங்கப்படும்."
மேலும், "முதுநிலை கலந்தாய்வுக்கான 3-வது சுற்றுக்கான புதிய அட்டவணை விரைவில் மருத்துவ கலந்தாய்வு குழு வலைதளத்தில் வெளியிடப்படும்," என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்