search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New development projects"

    • கழிப்பறை வசதி இல்லாத பைன் மரக்காடுகள் பகுதியில் வரும் 15-ந் தேதிக்குள் பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும். வத்தலக்குண்டு சாலையில் உள்ள மயிலாடும்பாறை சுற்றுலா இடம் திறக்கப்பட்டு கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும்.
    • நகரில் உலா வரும் காட்டு மாடுகளைபொதுமக்கள் கூடும் பகுதிகளில் வராமல் தடுப்பதற்காக வனத்துறையைச்சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் உலக அளவில் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு புதியதாக யோகேஷ்குமார்மீனா மாவட்ட வன அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் வனப்பகுதி சுற்றுலா இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் குறிப்பாக கழிப்பறை வசதி இல்லாத பைன் மரக்காடுகள் பகுதியில் வரும் 15-ந் தேதிக்குள் பயோ கழிப்பறைகள் அமைக்கப்படும். வத்தலக்குண்டு சாலையில் உள்ள மயிலாடும்பாறை சுற்றுலா இடம் திறக்கப்பட்டு கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் அமைத்து தரப்படும். மூடப்பட்டுள்ள பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி போன்ற பல்வேறு இடங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகரில் உலா வரும் காட்டு மாடுகளைபொதுமக்கள் கூடும் பகுதிகளில் வராமல் தடுப்பதற்காக வனத்துறையைச்சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அதே போல பேரிஜம் ஏரி பகுதியிலும் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன என தெரிவித்தார்.

    • புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
    • தாராபுரம் அமராவதி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதை அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    தாராபுரம் :

    தாராபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

    தாராபுரம் ஒன்றியம், கொங்கூா் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ஆச்சியூா் முதல் கொங்கூா் சாலை வரை ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்தல், உண்டாரப்பட்டி முதல் கொங்கூா் சாலை வரை ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல், கவுண்டச்சிப்புதூா் ஊராட்சியில் கவுண்டச்சிப்புதூா் முதல் பூளவாடி சாலை வரை ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்தல் என ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக, வடகிழக்குப் பருவமழை காரணமாக தாராபுரம் அமராவதி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதை அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.வி.செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கே.கே.ஜீவானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×