என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nisha Dahiya"
- கடைசி 35 நொடிகள் வரை 8-2 என்ற கணக்கில் நிஷா முன்னிலை வகித்தார்.
- அப்போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவின் கால் இறுதியில் இந்தியாவின் நிஷா தஹியா தென் கொரியாவின் சோல் கம் பாக்கை எதிர்கொண்டார்.
சிறப்பாக விளையாடிய நிஷா 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். கடைசி ஒரு நிமிடம் இருந்த நிலையில் நிஷா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அவர் அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருந்தது. கடைசி 35 நொடிகள் வரை 8-2 என்ற கணக்கில் நிஷா முன்னிலை வகித்தார்.
அப்போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை சுதாரித்து கொண்ட தென் கொரியா வீராங்கனை மிரட்டலாக விளையாடு அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். இறுதியில் 10-8 என்ற கணக்கில் தென் கொரியா வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
கையில் ஏற்பட்ட வலியையும் மனதில் ஏற்பட்ட வலியையும் தாங்கி கொள்ள முடியாமல் நிஷா கண்ணீர் சிந்தினார். காயத்துடன் போராடிய நிஷாக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- 68 கிலோ எடை பிரிவில் நிஷா தஹியா- டெட்டியானா ரிஷ்கோ ஆகியோர் மோதின.
- முதல் பாதியில் இந்திய வீராங்கனை 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார்.
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த நிஷா தஹியா மற்றும் உக்ரைன் வீராங்கனையான டெட்டியானா ரிஷ்கோ ஆகியோர் மோதின.
இந்த போட்டியில் முதல் பாதியில் இந்திய வீராங்கனை 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய நிஷா இறுதியில் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்