search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noida Cricket Stadium"

    • இந்தியா- நியூசிலாந்து இடையிலான போட்டி ஐந்து நாட்களும் விளையாடாமல் கைவிடப்பட்டுள்ளது.
    • இங்கிலாந்து போட்டி இதேபோன்று நான்கு முறை விளையாடாமல் கைவிடப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு இந்திய மைதானங்களை அவர்களுடைய சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடத்த இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் முடிவு செய்தன.

    அதன்படி இந்தியாவின் டெல்லி அருகில் உள்ள கிரேட் நொய்டாவில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 9-ந்தேதி போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக கிரேட் நொய்டா மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    மழை நீர் வெளியேறுவதற்கு வழியில்லாததால் முதல் நாள், இரண்டாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. எப்படியாவது போட்டியை நடத்திவிட வேண்டும் என்ற முனைவில் மின் விசிறி கொண்டெல்லாம் ஆடுகளத்தை சூடுபடுத்தினர்.

    இருந்தபோதிலும் ஆடுகளம் மற்றும் அவுட் பீல்டு மோசமாக இருந்ததாலும், தொடரந்து மழை பெய்ததாலும் 3-வது மற்றும் நாளாவது ஆட்டங்கள் ரத்து செய்ப்பட்ட நிலையில், இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐந்து நாட்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

    போர் போன்ற அசாதாரண சூழ்நிலை அல்லது பெருந்தொற்று போன்ற இக்கட்டான நிலையில்தான் ஐந்து நாட்கள் ஆட்டமும் கைவிடப்படும் நிலை ஏற்படும். ஆனால் மழையால் ஒரு டெஸ்ட் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.

    மேலும். இதுபோன்று ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படும் 8-வது போட்டி இதுவாகும். இதற்கு முன் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட் போட்டிகள் விவரம்:-

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மான்செஸ்டரில் 1890-ல் கைவிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மான்செஸ்டரில் 1938-ல் கைவிடப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து போட்டி மெல்போர்னில் 1970-ல் கைவிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து- பாகிஸ்தான் இடையிலான போட்டி டுனெடினில் 1989-ல் கைவிடப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து இடையிலான போட்டி கயானாவில் 1990-ல் கைவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான்- ஜிம்பாப்வே இடையிலான போட்டி பைசாலாபாத்தில் 1998-ல் கைவிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து- இந்தியா இடையிலான போட்டி டுனெடினில் 1998-ல் கைவிடப்பட்டுள்ளது.

    • ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 9-ந் தேதி தொடங்க இருந்தது.
    • நொய்டாவில் பெய்து வரும் மழை காரணமாக போட்டி தொடங்க முடியாமல் உள்ளது.

    நொய்டா:

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் 9-ந் தேதி தொடங்க இருந்தது. முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது.

    2-வது நாள் ஆட்டத்தில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்றைய 3-வது நாளில் மழை பெய்ததால் 3-வது நாள் ஆட்டமும் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் மழை காரணமாக 4-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

    • 2-வது நாளில் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
    • மைதானத்தில் தேங்கும் தண்ணீரை துரிதமாக அகற்றுவதற்கு நவீன வசதி வாய்ப்புகள் இங்கு இல்லை.

    நொய்டா:

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷகித் விஜய் சிங் பதிக் ஸ்டேடியத்தில் நேற்றுமுன்தினம் தொடங்க இருந்தது. முந்தைய நாள் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. 2-வது நாளான நேற்றைய தினம் மழை பெய்யாவிட்டாலும் ஈரப்பதமான மைதானம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    மைதானத்தில் தேங்கும் தண்ணீரை துரிதமாக அகற்றுவதற்கு நவீன வசதி வாய்ப்புகள் இங்கு இல்லை. இதனால் மைதானத்தை சீக்கிரமாக காய வைக்க முடியவில்லை. அங்காங்கே காணப்பட்ட ஈரப்பதத்தை மின்விசிறியால் உலர்த்த ஊழியர்கள் முயற்சித்தனர். சில இடங்களில் புற்களை பெயர்த்து எடுத்து, அதற்கு பதிலாக பயிற்சி பகுதியில் இருந்து புற்களை கொண்டு வந்து வைத்தனர். ஆனாலும் மோசமான அவுட்பீல்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்ய முடியவில்லை.

    இன்றைய 3-வது நாள் போட்டியாவது நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் மழை காரணமாக 3-வது நாள் ஆட்டம் டாஸ் கூட போடமுடியாமல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

    • மழை பெய்யாமலே முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.
    • கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

    நொய்டா:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் கூட இல்லை. அதனால், ஆப்கானிஸ்தான அணி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவை சொந்த மண்ணாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. பிசிசிஐ அவ்வப்போது ஆப்கானிஸ்தான் ஆடும் போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி அளித்து வருகிறது. அப்படி செய்யும் உதவி சரியானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள விமர்சனத்துக்கு முக்கிய காரணம்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட திட்டமிட்ட ஆப்கானிஸ்தான் அணி பிசிசிஐ-இடம் உதவி கேட்டது. பிசிசிஐ-யும் இந்தியாவில் போட்டியை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தது. அதற்காக நொய்டா மைதானத்தை தேர்வு செய்து அளித்தது. இந்த போட்டி நடக்கவிருந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. அதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பயிற்சி செய்ய முடியாமல் தவித்தன.

    இந்த நிலையில் நேற்று முதல் நாள் போட்டி நடைபெற இருந்தது. காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால் நிச்சயமாக போட்டி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மைதானத்தின் அவுட் ஃபீல்டு பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கி இருந்தது.

    பந்துவீச்சாளர்கள் ஓடிவந்து பந்து வீசும் பகுதிகளிலும் நிறைய மழைநீர் தேங்கி இருந்தது. அந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அவற்றை விரைவாக நீக்க முடியாமல் மைதான ஊழியர்கள் அவதிப்பட்டனர். முதல் நாள் ஆட்டத்தில் ஒரு சில ஓவர்களையாவது வீசி விடலாம் என மாலை 4 மணி வரை நடுவர்கள் முயற்சி செய்தனர்.

    ஆனால், மைதான ஊழியர்களால் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதை அடுத்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டமாவது திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    நொய்டா மைதானத்தை தேர்வு செய்த பிசிசிஐ மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. நொய்டா மைதானத்தில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட நடத்தப்பட்டதில்லை. அங்கு மழை நீர் வடிகால் வசதி இல்லாதது மட்டுமின்றி, கழிவறை வசதி மற்றும் பிற அடிப்படை வசதி குறைபாடுகளும் இருந்ததாக பத்திரிக்கையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இந்தியாவில் சிறந்த வசதிகளை கொண்ட மைதானத்தை ஆப்கானிஸ்தான் அணிக்கு அளித்து இருக்கலாம். அதுவே அந்த அணிக்கு செய்யும் சிறந்த உதவியாக இருக்கும்.

    இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரி கூறியதாவது:-

    இது ஒரு பெரிய குழப்பம். நாங்கள் இங்கு திரும்பி வரமாட்டோம். வீரர்களும் இங்குள்ள வசதிகளால் மகிழ்ச்சியடையவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் முன்கூட்டியே பேசினோம், எல்லாமே ஒழுங்காக இருக்கும் (ஊடக வசதிகளுடன்) என்று ஸ்டேடியம் தோழர்களால் உறுதியளிக்கப்பட்டது.

    என்று அவர் கூறினார்.

    கிரேட்டர் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மைதானத்தில், 2016 -ல் இளஞ்சிவப்பு பந்து துலீப் டிராபி போட்டி நடைபெற்றது.

    இருப்பினும், கார்ப்பரேட் போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் காரணமாக செப்டம்பர் 2017-ல் பிசிசிஐ தடை செய்தது. பிசிசிஐயுடன் இணைந்த எந்தப் போட்டியும் இங்கு நடத்தப்படவில்லை. இந்த மைதானம் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானின் சொந்த மைதானமாக செயல்பட்டது.

    "நாங்கள் இங்கு வந்ததில் இருந்து எதுவும் மாறவில்லை, இது கொஞ்சம் கூட முன்னேறவில்லை" என்று மற்றொரு ஏசிபி அதிகாரி கூறினார்.

    ×