search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "northerners"

    • பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை குறைத்து விட்டதாக பயணிகள் குற்றச்சாட்டு.
    • பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    திருப்பதி:

    வட மாநில தொழிலாளர்களையும் ஏழைகளையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றிச் செல்லும் முக்கிய போக்குவரத்து சாதனமாக ரெயில்வே துறை இயங்கி வருகிறது.

    வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பயணம் செய்யும் ரெயில்களில் முன்பை விட தற்போது பொதுபெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு வரும் வட மாநிலத்தினர் நரக வேதனை அனுபவித்து வருவதாக கூறியுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பொதுப்பட்டிகள் குறைவாக இருந்தன.

    பொது பெட்டியில் பயணிகள் நுழைய முடியாத அளவுக்கு வட மாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் அதிக அளவில் இருந்தனர். ஏறும்போதே அவர்களுக்கு கடும் நெரிசல் சண்டை ஏற்பட்டது.

    மிகுந்த சிரமத்துடன் உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் இருக்கையில் அமர்ந்தவர்களால் எழுந்து கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமானோர் தரையிலேயே படுத்து தூங்கினர்.

    இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் காலடிகளுக்கு அடியில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த படியும் பயணத்தை கழித்தனர். பலர் கால் வைக்கக்கூட இடம் இல்லாத இடத்தில் கால்கடுக்க நின்றனர். கழிவறையிலும் பயணிகள் இருந்தனர். அவர்கள் கழிவறையில் நின்று கொண்டு சாப்பிட்டதை காண முடிந்தது.

    பொதுப்பட்டியில் இருந்த பெண்கள், ஆண்கள் என யாருமே கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி பயணம் செய்தனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகளும் அவதி அடைந்தனர்.

    தெற்கு மத்திய ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்களில் 27 சதவீதம் பேர் ஏ.சி. மற்றும் படுக்கை முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்கின்றனர்.

    பொது பெட்டிகளில் 73 சதவீத பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 அல்லது 6 பொதுப்பட்டிகள் இருந்தன. வருவாயை கருத்தில் கொண்டு பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை கணிசமாக குறைத்து விட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்

    பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களை பற்றி ரெயில்வே நிர்வாகம் கவலைப்படவில்லை.

    அவர்களை ஒரு பூச்சிகள் போல நடத்துகின்றனர். பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பல மணி நேரம் நரக வேதனையை அனுபவித்தபடி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கையில் குழந்தைகளுடன் இருந்த கர்ப்பிணி ஒருவர் நெரிசலில் சிக்கி காயம் அடைந்து இறந்தார்.

    தெற்கு மத்திய ரெயில்வேயில் உள்ள பெட்டிகளில் பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என இதுவரை 30 லட்சம் கடிதங்கள் எழுதியுள்ளோம்.

    இதே நிலை தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில ரெயில்களிலும் நீடித்து வருகிறது. நீண்ட தூர ரெயில்களில் பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

    • சாலையோரங்களில் பானி பூரி கடைகள் அதிகரித்துள்ளன.
    • பயிற்சி அளித்து லைசென்சு வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னையில் பெருகி வரும் கையேந்தி பவன் போல சாலையோரங்களில் பானி பூரி கடைகளும் அதிகரித்து உள்ளன. நகரின் எந்த பகுதியில் பார்த்தாலும் முக்கிய இடங்களில் வட மாநிலத்தவர்கள் பானிபூரி விற்பனை செய்வதை காண முடியும்.

    சிறிய முதலீட்டில் நடக் கும் இந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளன. பானிபூரி விற்பனையை முறைப்படுத்தவும் சுகாதாரமாக விற்கவும் உணவு பாதுகாப்புத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டது.

    சாலையோரங்களில் செயல்படும் சாலையோர பானிபூரி கடைகளுக்கு கட்டாயம் லைசென்சு பெற வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கான லைசென்சு கட்டணமாக ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    சென்னையில் நேற்று ஒரேநாளில் 600 வட மாநிலத்தவருக்கு பானிபூரி தொழில் செய்வதற்கான லைசென்சு வழங்கப்பட்டன.

    இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ் குமார் கூறியதாவது:-

    சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் பானிபூரி விற்பனை நடக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கலாம். அவற்றை வரையறைப்படுத்தவும், பானிபூரி தயாரித்து விற்பனை செய்வதில் சுகாதாரத்தை பின்பற்றவும், கலப்படம் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    பழைய எண்ணெய், மீதமுள்ள பழைய உணவுப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது, சுகாதாரமான முறையில் விற்பது குறித்து மாநகராட்சி அம்மா மாளிகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் நாட்களில் வார்டு வாரியாக இந்த பயிற்சி அளித்து லைசென்சு வழங்கப்படும்.

    உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதை முறைப்படுத்தும் நோக்கத்தில் பானிபூரி விற்பனையாளர்களுக்கு லைசென்சு அவசியமாக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வட மாநிலத்தவர்கள் புகுந்ததால் ரிசர்வேஷன் பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை.
    • முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.

    சென்னை:

    வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளை முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமித்து கொள்வதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    கடந்த வாரம் சென்னையில் இருந்து ஹவுரா சென்ற ரெயிலில் முன்பதிவு செய்யாத வட மாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் புகுந்ததால் ரிசர்வேஷன் செய்த பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    வட மாநிலத்திற்கு செல்லும் இளைஞர்கள் அத்துமீறி ரெயில் பெட்டிகளை ஆக்கிரமித்து கொள்ளும் சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

    அதன் அடிப்படையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், தமிழகத்திற்கு உள்ளே ஓடக்கூடிய ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஆர்.பி.எப். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.

    அதன்படி வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் குறிப்பாக அதிக பயணிகள் பயணிக்கும் ரெயில்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் சுற்றித்திரியும் நபர்களிடம் டிக்கெட்டை கேட்டு விசாரித்து முன்பதிவு டிக்கெட் இல்லாதவர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் கீழே இறக்கி பொதுப் பெட்டிக்கு மாறி செல்ல அறிவுறுத்துகின்றனர்.

    பரிசோதகர்களும் விரைவாக டிக்கெட்டை ஆய்வு செய்து சாதாரண டிக்கெட்டுடன் யாரும் பயணிக்கிறார்களா? என்பதை கண்காணித்து வெளியேற்றுகிறார்கள்.

    சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் எல்லா ரெயில்களிலும் போலீசார் பயணம் செய்து முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.

    ரிசர்வேஷன் செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் ரெயில்வே போலீசாரும் டிக்கெட் பரிசோதகரும் பாதுகாப்பு அளித்திட தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    • வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
    • ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, ஈரோடு மாநகர் பகுதி, மொடக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர்.

    குறிப்பாக பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வட மாநிலத்தவர்களின் முக்கியமான பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று உற்சா கமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    இதற்காக ஈரோட்டில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    மேலும் ஈரோட்டில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு முதலே ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் இந்திரா நகர், கருங்கல் பாளையம், கே.எஸ்.நகர், திருநகர் காலனி, வளையகார வீதி, வி.வி.சி.ஆர். நகர், அக்ரஹார வீதி போன்ற பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி னர்.

    ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் ஹோலியை கொண்டாடினர்.

    • கோழிப்பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
    • அரசூரில் நடைபெறும் வாரச் சந்தைக்கு வேனில் குடும்பத்துடன் சென்று, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

    சூலூர்:

    சூலூர் அருகே அரசூர் பகுதியில் செந்தில் கோழிப் பண்ணை உள்ளது. இங்கு பொத்தியாம ்பாளையத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சதாசிவம் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

    இந்த கோழிப்பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் வாராவாரம் அரசூரில் நடைபெறும் வாரச் சந்தைக்கு வேனில் குடும்பத்துடன் சென்று, வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வேனில் சந்தைக்கு சென்று வட மாநிலத்தவர்கள் பொருட்கள் வாங்கி கொண்டு திரும்பி வந்தனர்.

    அரசூர் அருகே அன்னூர் செல்லும் பாதையில் வரப் பிள்ளையார் கோவில் அருகே வந்த போது, வடமாநி லத்தவர்களை, குடிபோதையில் 4 வாலிபர்கள் தடுத்து நிறுத்தினர்.

    மேலும் அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டு தகராறில் ஈடுபட்டதுடன், ஆபாசமான வார்த்தைகளை பேசினர். 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன், தகாத வார்த்தைகால் திட்டி மிரட்டல் விடுத்தனர். பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர்கள் சென்று விட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் மேற்பார்வையாளர் சதாசிவத்திடம் தெரிவித்தனர். அவர் சம்பவம் குறித்து சூலூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். விசாரணையில் வடமாநிலத்தவர்களை மிரட்டியது, சிவானந்தபுரம் சங்கர் அப்பன் தோட்டத்தை சேர்ந்த குமார்(38), காளப்பட்டி நேரு நகரை சேர்ந்த சிவகுமார்(33), சரவணம்பட்டி ஜனதா நகரைச் சேர்ந்த ஆனந்தன் (37), சரவணம்பட்டி பெரிய கவுண்டர் வீதியைச் சேர்ந்த ஹரிஹரன்(52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    ×