search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutritious"

    • ஸ்ட்ராபெர்ரி பழத்தில் போலேட், போலிக் அமிலம் உள்ளது.
    • ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பாலிபீனால்கள், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன.

    பழங்கள் பல்வேறு வண்ணங்களில் விளைகின்றன. ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு விதமான சத்துக்களை கொண்டிருக்கின்றன. பழங்களின் வண்ணத்தை பொறுத்தும் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். அந்த வகையில் சிவப்பு வண்ண பழங்கள் சிலவற்றை பற்றியும், அவற்றின் சத்துக்கள் பற்றியும் பார்க்கலாம்.

    மாதுளை

    மாதுளையில் பாலிபினால்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் மிகுந்துள்ளன. அவை புற்றுநோய், இதய நோய் அபாயத்தை தடுக்கக்கூடியவை.

    ஸ்ட்ராபெர்ரி

    ஸ்ட்ராபெர்ரி பழத்தில் போலேட், போலிக் அமிலம் உள்ளது. இதுவும் இதய ஆரோக்கியத்தை காக்க துணை புரியும். ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி போன்றவையும் உள்ளடங்கி இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

    ஆப்பிள்

    ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பாலிபீனால்கள், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. அதிலிருக்கும் நார்ச்சத்து எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.

    செர்ரி

    வைட்டமின் சி, பொட்டாசியம் மட்டுமின்றி நார்ச்சத்து நிரம்பப்பெற்றது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

    தர்பூசணி

    92 சதவிகிதம் நீர்ச்சத்து கொண்ட தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லைகோபீன் போன்றவையும் அதிகம் உள்ளன. எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். இதன் மூலம் இதய நோய் அபாயத்தை தவிர்க்கலாம்.

    பிளம்ஸ்

    வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் இந்த பழத்தில் அதிகம் உள்ளன. பல்வேறு நாள்பட்ட நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.

    கிரேப் புரூட்

    இந்த பழத்தில் வைட்டமின் சியும், பெக்டினும் அதிகமாக உள்ளன. இவை கொழுப்பைக் குறைக்க உதவும். ஏதேனும் நோய்க்கு மாத்திரை உட்கொள்பவர்கள் டாக்டரின் பரிந்துரையின் படியே கிரேப் புருட் சாப்பிட வேண்டும். ஏனெனில் மருந்துகளுடன் எதிர்வினை புரியக்கூடும்.

    திராட்சை

    இதில் வைட்டமின் பி, ஏ அதிகம் உண்டு. நீர்ச்சத்தும், லுடீன் ஜியாசாந்தைன் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகளும் நிறைந்திருக்கும். சிவப்பு திராட்சை பழ தோலில் பைட்டோ கெமிக்கல் ரெஸ்வெராட்ரோல் என்னும் சேர்மம் உள்ளது. இது நாள்பட்ட நோய் அபாயத்தை தடுக்க உதவும்.

    • தா.பேட்டையில் வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
    • மேலும் கண்காட்சியில் சிறப்பாக சிறுதானிய உணவு வகைகள் வைத்திருந்த மகளிர் குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தா.பேட்டை

    தா.பேட்டையில் வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியினை தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சர்மிளா பிரபாகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். வட்டார இயக்க மேலாளர் செல்லப்பாப்பா அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டாரம்) ஸ்ரீதேவி, (ஊராட்சிகள்) குணசேகரன் ஆகியோர் சிறுதானிய உணவு வகைகள் குறித்து சிறப்புரை ஆற்றினர். அப்போது கம்பு, சோளம், கேழ்வரகு, கருப்புகவுனி, கற்றாழை, முடக்கத்தான் கீரை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகள் மகளிர் குழுவினர் தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    மேலும் கண்காட்சியில் சிறப்பாக சிறுதானிய உணவு வகைகள் வைத்திருந்த மகளிர் குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 3 பிரிவினருக்கும் ஒரே மாதிரியான மாவு மட்டுமே வழங்கப் பட்டது.
    • தனித்தனியாக வேறு வேறு பாக்கெட்களில் வழங் கப்பட உள்ளது.

    தாராபுரம் :

    கர்ப்பிணிகள், தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுப்பதற்கான அரசின் திட்டமாக சத்துமாவு வழங்கப்படுகிறது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அங்கன்வாடிகளில் இதுவரை 3 பிரிவினருக்கும் ஒரே மாதிரியான மாவு மட்டுமே வழங்கப்பட்டது.

    பல்வேறு வகையான தானியங்கள், குழந்தைகள் விரும்பி உண்பதற்காக வெல்லமும் இந்த மாவில் சேர்க்கப்பட்டுள்ளது.தற்போது 3பிரிவினருக்கும் ஒரே மூலப்பொருட்கள், ஆனால் வேறுவேறு அளவுகளில் சேர்க்கப்பட்டு புதிய வகையான மாவு தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்த மாவில் வெல்லத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.6 மாதம் முதல் 2 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தனியாகவும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தனி சுவை சேர்த்தும், தனித்தனியாக வேறு வேறு பாக்கெட்களில் வழங்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு பிரிவினரும் மாவை எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் பயனாளிகளுக்கு ஒரு ஸ்பூன் மற்றும் கன்டெய்னர் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்களால் வழங்கப்படும் ஸ்பூனில் எவ்வளவு மாவு எடுக்க வேண்டுமென தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூறுவார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு இந்த வகையில் மாவு வினியோகிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுக்குப்பின் மாவு பயனாளிகளுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×