search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palaruvi Express"

    • மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக முடிந்தது.
    • இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

    நெல்லை,ஜூலை.28-

    ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெரும்பாலான இடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கும்போது ரெயிலில் பழுது பார்ப்பு, எரிபொருள் செலவு என்பது நிலக்கரி மற்றும் டீசல் என்ஜின் ரெயில்களை விட குறைவாக இருந்ததன் காரணமாக தமிழகத்திலும் பல வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டது.

    அந்த வகையில் கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் நிலக்கரி என்ஜின் மூலம் இயங்கிவந்த செங்கோட்டை-புனலூர் ரெயில் பாதையை மின்மயமாக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கேரள மாநிலம் எடமன் மற்றும் தமிழகத்தில் பகவதிபுரம் இடையே மின்மயமாக்கும் பணி தொடங்கியது. மலை குகை பகுதிகளிலும், பாலங்களிலும் சுமார் 34 கிலோமீட்டர் தூரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, புனலூரிலும், செங்கோட்டையிலும் 110 கிலோ வோல்ட் ரெயில்வே துணை மின் நிலையங்கள் தலா ரூ.28 கோடியில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அவை வெற்றிகரமாக முடிந்ததால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் மின்சார ரெயில்களாக இயக்கப்படும் என தென்னக ரெயில்வே சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதன்படி வண்டி எண் 16101/16102 சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் முழுமையாக மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது. வண்டி எண்.16791/16792 நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16327/16328 மதுரை-குருவாயூர் இடையேயான எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை-செங்கோட்டை இடையேயான பயணிகள் ரெயில் உள்ளிட்டவை இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

    இந்த மின்வழித்தடத்தில் 25 ஆயிரம் கிலோவோல்ட் மின்சாரம் வரும் என்பதால் பொதுமக்கள் அந்த இடத்தை பாதுகாப்பாக கடக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் காரணமாக 2 மீட்டர் தூரத்திற்கு மின்சார வேகம் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக உயரம் கொண்ட பொருட்களுடன் வாகனங்களை ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்காக கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    செங்கோட்டை அருகே ரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடப்பதை தூரத்தில் வரும் போதே என்ஜின் டிரைவர் பார்த்து ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    செங்கோட்டை:

    ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த மீட்டர் கேஜ் ரெயில்கள் நிறுத்தப்பட்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இதற்காக கடந்த 2010-ம் ஆண்டு ரெயில்சேவை நிறுத்தப்பட்டது.

    ஆரியங்காவு உள்ள பகுதிகளில் குகை மற்றும் மலை பகுதிகளாக காணப்பட்டதால் அகல ரெயில் பாதை பணிகள் தாமதமானது. இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்ககோரி பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்த கோரிக்கைவிடுத்துவந்தனர்.

    இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 30-ந் தேதி முதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டைக்கு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்னர் பயணிகள் ரெயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனலூர் ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து அகலப் பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

    இதையடுத்து நெல்லையில் இருந்து கேரளாவுக்கு தென்காசி, செங்கோட்டை வழியாக கூடுதல் ரெயில் இயக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட‌து.


     

    அதன்படி புனலூர்- பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டித்து தென்னக ரெயில்வே அறிவித்தது. இந்த ரெயில் கடந்த 9-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கொல்லத்தில் இருந்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 12.30-க்கு புறப்பட்டு அதிகாலை 3.50-க்கு செங்கோட்டை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

    இந்நிலையில் வழக்கம் போல் கொல்லத்தில் இருந்து புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை பகவதிபுரம் அருகே உட்கோணம் என்ற காட்டுப் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் ஒரு ராட்சத மரம் விழுந்து கிடந்தது. இதைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். இதுகுறித்து பகவதிபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்டு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து கடும் போராட்டத்திற்கு பின்னர் மரம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் புறப்பட்டது. அதிகாலை நேரம் என்பதாலும், காட்டுப்பகுதியில் ரெயில் நின்றதாலும் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.

    ரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடப்பதை தூரத்தில் வரும் போதே என்ஜின் டிரைவர் பார்த்து ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக அதிகாலை 3.50மணிக்கு செங்கோட்டை வரவேண்டிய பாலருவி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக காலை 6.50 மணிக்கு வந்தது. பின்பு அங்கிருந்து நெல்லைக்கு புறப்பட்டது.

    கேரளாவின் பாலக்காடு - புனலூர் இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    சென்னை:

    கேரளாவின் பாலக்காடு முதல் புனலூர் வரை தினமும் இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டை வழியாக நெல்லை வரை நீட்டிக்கப்பட உள்ளது. முழுவதும் பொதுப்பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் வரும் 9-ம் தேதி முதல் நெல்லை வரை தனது சேவையை நீட்டிக்க உள்ளது.

    செங்கோட்டை - புனலூர் இடையே அகலரெயில் பாதை பணிகள் முடிவடைந்து சமீபத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது வாரம் இருமுறை கொல்லம் - தாம்பரம் இடையே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், பாலருவி எக்ஸ்பிரஸ் நெல்லை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மிகுந்த பயன் தரும் என கூறப்படுகிறது.

    கொல்லம் - எடமன் வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பாசாஞ்சர் ரெயிலும் விரைவில் நெல்லைக்கு நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 
    ×