search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parandhur Airport"

    • பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரம்.
    • சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கியது.

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    5,476 ஏக்கர் பரப்பளவில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயார் செய்ய ஆய்வு எல்லைகளை வழங்கி மத்திய அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு.
    • 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம்.

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அண்டை மாநிலமான ஆந்திரா அரசிடம் தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    தஞ்சம் கேட்டு, வரும் திங்கட்கிழமை சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழு அறிவித்துள்ளது.

    பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ×