search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic Bottles"

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
    • பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.

    மைக்ரோபிளாஸ்டிக்ஸ், நமது உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து உலகம் மாசுபாட்டை எதிர்கொள்கிறது.

    இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. இதனால் இதய பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் ரத்த ஓட்டத்தில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் நுகர்வு குறைவதால் ரத்த அழுத்தம் குறைவதை குறிக்கும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ரத்த ஓட்டத்தில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    ஆய்வின் முடிவுகளின்படி, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும் என்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ரூ.1-க்கு வாங்க கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
    • இன்று ஒரே நாளில் 612 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒரு நபர் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி சார்பில் நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் விதமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பாட்டில்கள்

    அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், வாறுகால் உள்ளிட்ட வற்றில் வீசப்படு வதை தடுக்க புதிய முயற்சியாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ரூ.1-க்கு வாங்க கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

    இந்த திட்டத்தை முதன் முதலாக நெல்லை மண்டலத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டு உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தண்ணீர் பாட்டில்கள் ஒன்றுக்கு ரூ.1 விலை கொடுத்து வாங்கப்பட்டது.

    25 ஆயிரம்

    இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இன்று வரை கொள்முதல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 612 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒரு நபர் கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    ×