search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private companies"

    • கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
    • கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை.

    சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் பெண்கள் பிரசவகால விடுப்பு தவிர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஜிங்சு மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

    அதோடு நிற்காமல் நேர்முக தேர்வுகளின் போது பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அப்போது பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அறிய கர்ப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை என கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    அதோடு நிற்காமல் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் பற்றியும் கேள்விகள் கேட்கப்ப டுகின்றன. ஏற்கனவே குழந்தைகள் பிறந்து இருந்தால் கண்டிப்பாக குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. இது குறித்து ஆன்லைன் மூலம் அரசு கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றனர்.

    அப்போது 16 நிறுவனங்களில் சட்டவி ரோதமாக 168 பெண்களுக்கு உடற் பரிசோதனை என்ற பெயரில் கர்ப்ப பரிசோதனை செய்தது கண்டுபி டிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதா.
    • கர்நாடகாவில் இருந்த இடம்பெயர விரும்பினால் விசாகப்பட்டினத்திற்கு வரலாம்.

    கர்நாடகாவில் அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அம்மாநில மந்திரிசபை ஒப்புதல் வழங்கியதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

    சித்தராமையா இது தொடர்பான தகவல்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதனால் எக்ஸ் பக்க பதிவை நீக்கினார்.

    பல்வேறு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமும் (Nasscom- National Association of Software and Service Companies) எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக நாரா லோகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய ஏமாற்றத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. விசாகப்பட்டினத்திற்கு உங்களுடைய நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய அல்லது மாற்ற நாங்கள் வரவேற்கிறோம்.

    உங்களுக்க சிறந்த வசதிகளை செய்து தருகிறோம். தடையில்லா மின்சாரம், கட்டமைப்புகள் உருவாக்கி தருகிறோம். உங்களுக்கு தேவையான அறிவு சார்ந்த ஆட்கள் தேர்வுக்கு எந்த தடையும் அரசு விதிக்காது. உங்களை வரவேற்க ஆந்திரா தயாராக உள்ளது. தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்!" எனத் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மசோதாவை நிறுத்தி வைத்துள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • தனியார் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்.
    • தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்த நிலையில் எக்ஸ் பதிவை நீக்கிய சித்தராமையா.

    கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதற்கு தனியார் நிறுவனங்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தன. இந்த முடிவு பாரபட்சமானது. பிற்போக்குத்தனமானது, பாசிச மசோதா என விமர்சித்தன. இதனால் சித்தராமையா அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

    இதற்கிடையே கர்நாடக மாநில தொழில்துறை மந்திரி சந்தோஷ் லாத் "தனியார் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத பதவி (non-management roles) பணிகளில் 70 சதவீதம், நிர்வாகம் தொடர்பான பணிகளில் 50 சதவீத இடங்களும் கன்னட மக்களுக்கு வழங்கப்படும்" என விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த மசோதா பாரபட்சமானது என தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.

    மணிபால் குளோபல் எஜுகேசன் சர்வீசஸ் சேர்மன் மோகன்தாஸ் பாய் "இந்த மசோதா பாகுபாடானது. பாரபட்சமானது. இது விலங்குகள் பண்ணை 'Animal Farm' (the George Orwell novel) போன்ற பாசிச மசோதா" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா இந்த திட்டத்தை வரவேற்றார், ஆனால் "இந்தக் கொள்கையிலிருந்து மிகவும் திறமையான ஆட்சேர்ப்புக்கு விலக்கு அளிக்க வேணடும். தொழில்நுட்ப மையமான எங்களுக்கு திறமையான பணியாளர்கள் தேவை. உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதே நோக்கமாக இருக்கும் அதே வேளையில், இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத்தில் எங்களின் முன்னணி நிலையை பாதிக்கக்கூடாது" என்றார்.

    • கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
    • கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும்

    கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

    கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த மசோதா நாளை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்க ளும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:- 

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெறவிரும்பும் படித்த இளை ஞர்கள் பயன்பெற, சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமும், காலாண்டுதோறும் பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்க ளும் நடத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20-ந் தேதி) சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10-க்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

    விழுப்புரம் மாவட்டத் தைச் சார்ந்த 18 முதல் 30 வயது வரையுள்ள வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம். தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனு தாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுய விவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • இம்முகாமில் 714 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கே.எஸ்.கே.பொறியியலில் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.

    இந்த முகாமில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்சி.வி.கணேசன் ஆகியோர் அரசு தலைமை கொறடாகோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.பி.க்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் வழங்கினர். பின்னர் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கும்பகோணம் கே. எஸ். கே. பொறியியலில் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது .

    முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தனியார் முன்னணி நிறுவனங்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவை கலந்தகொண்டன.

    இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என 4300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதில், 714 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. 416 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 64 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இம்முகாமில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபத்ரா, எம்.எல்.ஏ.க்கள்அன்பழகன், துரைசந்திரசேகரன், கும்பகோணம் மாநகராட்சி மேயர்சரவணன், துணை மேயர்தமிழழகன், மாநகராட்சிஆணையர்செந்தில்முருகன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர்லதா ,மண்டல இணை இயக்குனர்சந்திரன், உதவி இயக்குநர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம்) வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ரமேஷ்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்காயத்ரி அசோக்குமார், கே.எஸ்.கே. பொறியியல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவர்கள் கலந்துகொண்டனர்.

    ஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளை ஒரு வருடத்துக்கு 50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    அரசு துறைகளில் உள்ள 30-க்கும் அதிகமான பிரிவுகளுக்கு இந்த துறை மூலம்தான் தேர்வு நடத்தப்படுகிறது.

    டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, ஆன்-லைன் மூலம் தேர்வுகளை நடத்த இப்போது அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக விருப்பமுள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) கோரப்பட்டுள்ளன.

    மாறி வரும் காலத்துக்கு ஏற்ப புதிய நடைமுறையை புகுத்துவது அவசியம் என்றும், பழைய காலம் போல் பேப்பரில் பரீட்சை எழுதி அதை திருத்தி முடிவுகளை அறிவிக்க கால விரயம் ஏற்படுவதால் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பரீட்சை எழுத விரும்புபவர்கள் குறிப்பிட்ட மையத்துக்கு சென்று கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில்தான் பதில்களை அனுப்ப வேண்டும்.

    பாஸ்போர்ட் அலுவலகங்களில் பல்வேறு பிரிவுகளை தனியாரிடம் ஒப்படைத்திருப்பது போல் தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து ஹால் டிக்கெட்டை சரி பார்ப்பது உள்பட பல்வேறு பணிகளை ஒப்படைக்க உள்ளனர்.


    இந்த டெண்டரை அரசு துறை நிறுவனமான எல்காட் எடுத்து நடத்த முன் வருமா? அல்லது தனியார் கம்ப்யூட்டர் கம்பெனிகள் ஏற்று நடத்த முன் வருமா? என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

    இதுபற்றி சட்டசபையில் உறுப்பினர்கள் பேசும் போது, “தனியாரிடம் இதை ஒப்படைத்தால் நிறைய தவறுகள் நடக்கும். வினாத்தாள் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே நன்மைகளை விட அதிக தீமைகள்தான் ஏற்படும்” என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

    அரசுத் துறையில் வேலையில் சேருவதற்கு பட்டப்படிப்பு படித்திருந்தாலே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதலாம். தற்போது இதை ஆன்-லைனில் தேர்வு எழுத சொல்லும்போது கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    ஏனென்றால் நிறைய மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை சரளமாக பயன்படுத்த தெரியாது. இதனால் தடுமாற்றம் அடைவார்கள்.

    அதுமட்டுமல்ல. கடந்த 2015-ம் ஆண்டு பரீட்சார்த்த முறையில் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத 2 ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ‘சர்வர்’ முடங்கியதால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

    மேலும் வினாத்தாள் வெளியாக அதிக வாய்ப்பும் உருவாகும். ஏனென்றால் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தயாரித்து வழங்குவது மட்டும்தான் தேர்வாணையத்தின் பணி என்றும் அதை கணினியில் ஏற்றி தேர்வை நடத்துவது வரை அனைத்தும் தேர்வு நடத்துவதற்கான தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

    தேர்வு அறையின் மேற்பார்வையாளர் கூட தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். தேர்வாணையத்தில் உள்ள பார்வையாளர் ஒருவர் மட்டுமே இருப்பார் என தெரிகிறது. எனவே இத்தகைய சூழலில் கண்டிப்பாக முறைகேடுகள் நடைபெறும்.

    முக்கியமாக வினாத்தாள்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பணியை செய்வதற்கு 1 நாளைக்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது வினாத்தாள் கசிய அதிக வாய்ப்புள்ளது.

    பல மாநிலங்களில் ஆன்-லைன் தேர்வுக்கான வினாத்தாள் இப்படித்தான் கசிந்தன.

    எனவே தேர்வு நடத்தும் பணியை தனியாரிடம் வழங்காமல் அரசு பணியாளர் தேர்வாணையமே இதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPSC
    ×