என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prize to the students"
- பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
- 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் டாக்டர்.கலைஞர் பிறந்தநாளை யொட்டி 7-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளக்கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டிக்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முது கலை தமிழாசிரியர் கந்த சாமி, நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முது கலை தமிழாசிரியர் குமரேசன்,
விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் கருப்புசாமி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் 86 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
உத்தண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் கோகுல்பிரசாத் முதல் பரிசு ரூ.5,000-ம், வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தமிழ்க்கனி 2-ம் பரிசு ரூ.3000-ம், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி மாணவி இலக்கியா 3-ம் பரிசு ரூ.2000-ம் பெற்றுள்ளனர்.
மேலும் சிறப்பு பரிசாக ஆ.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தேவபாலா ரூ.2000-ம், தவிட்டுப் பாளையம் அரசு உயர்நிலை ப்பள்ளி மாணவி ரிதனிகா ரூ.2000-ம் பெற்றுள்ளனர்.
- புதுவை பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் ‘பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா’ பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
- மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவிகள் 25 பேர் பங்கறே்ற புதுமைப்பெண் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் 'பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா' பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
புரட்சிக் கவிஞர் போற்றிய பாரதியார் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாத விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வேணுகோபால், ராசசெல்வம், கோவிந்தராசு, கிருட்டிணகுமார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்னிலை வகித்தனர். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவிகள் 25 பேர் பங்கறே்ற புதுமைப்பெண் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
மேலும் படைப்பாளி ரமேஷ்பைரவி, பாவலர் சரசுவதிவைத்தியநாதன் நெறியாள்கை செய்தனர். தேர்வுபெற்ற மாணவிகள் 6 பேருக்குத் தொழில் முனைவர் பாவலர் அருள்செல்வம் ெதாகை ரூ.4 ஆயிரம் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
இதில் தமிழறிஞர்கள், கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் வள்ளி, கலைமாமணி செல்வதுரை நீஸ், நாடகக் கலைஞர்மோகன், பாவலர்கள் விசாலட்சி விழா ஏற்பாடுகனைச் செய்திருந்தனர். தொடக்கத்தில் பாவலர் ராஜஸ்ரீமகஷே் வரவேற்றார் முடிவில் நிஷாகோமதி நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்