என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Professors Scam"
- ஒரு பேராசிரியர் அதிகபட்சமாக 11 கல்லூரிகள் வரை பணியில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
- முதல்கட்ட அறிக்கை அண்ணாபல்கலைக்கழகம் தரப்பில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சமர்பிக்கப்பட்டது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்களை போலியாக பணியில் சேர்த்து கணக்கு காட்டிய விவகாரத்தில் ஒரு பேராசிரியர் 22 கல்லூரிகளில் பணியாற்றியதாக விசாரணையில் பதிவுகள் பெறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை அறிக்கை, விரைவில் கவர்னர் மற்றும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளில் 340 பேராசிரியர்கள் போலியாக பணியில் சேர்ந்ததும், அங்கீகாரம் பெறுவதற்காக ஆய்வின் போது இதுபோன்ற விஷயங்களில் கல்லூரிகள் ஈடுபட்டதும் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஒரு பேராசிரியர் அதிகபட்சமாக 11 கல்லூரிகள் வரை பணியில் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த முறைகேடு தொடர்பாக, பல்கலைக்கழக வேந்தரும் கவர்னருமான ஆர்.என்.ரவி, அண்ணாபல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.
இதுதொடர்பான, முதல்கட்ட அறிக்கை அண்ணாபல்கலைக்கழகம் தரப்பில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த சூழலில், பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை தமிழக உயர்கல்வித்துறை அமைத்தது. இந்த குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பேராசிரியர்களிடமும், கல்லூரிகளிடம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இணைப்பு அங்கீகாரம் பெற போலியாக கணக்கு காட்டப்பட்ட என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒரு பேராசிரியர் 22 கல்லூரிகளில் முழுநேர பேராசிரியராக பணியாற்றியதாக பதிவுகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிகள் விளக்கம் அளிப்பதற்காக கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் தவறு செய்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யவோ, குறிப்பிட்ட காலத்திற்கு மாணவர் சேர்க்கைக்கு தடைவிதிக்கவோ, கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவோ திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் விசாரணை அறிக்கை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக அரசிடமும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
- அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இணைப்பு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி சேர்ந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 189 பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் பணிபுரிந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், இதை விசாரிக்க அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் குமாரவேல், தொழில்நுட்ப கல்வி இயக்கக கமிஷனர் ஆபிரகாம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.டிடி.டி.ஆர்.சி.) இயக்குனர் உஷா நடேசன் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டு இருந்தார். அதன் அடிப்படையில் பேராசிரியர்கள் முறைகேடாக பணிபுரிந்தது தொடர்பான விளக்கங்களை, கவர்னர் ஆர்.என்.ரவியிடம், அண்ணா பல்கலைக்கழகம் சமர்ப்பித்துள்ளது.
மேலும் 3 பேர் கொண்ட குழு இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்கான ஆவணங்கள் அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகம், குழுவிடம் வழங்கியிருக்கிறது.
அடுத்த வாரத்தில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை இந்த குழு நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர், முறைகேடு தொடர்பான அறிக்கையை இந்த குழு தயாரிக்கும் எனவும், அனேகமாக இன்னும் ஒரு வார காலத்துக்குள் இந்த பணிகள் நிறைவு பெற வாய்ப்பு உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்