search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Consultation"

    • ஜூலை 8- முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.

    சென்னை:

    ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் (ஜூலை) 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளத்தில் கடந்த மாதம் (மே) 13-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

    அந்தவகையில் தொடக்கக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 35 ஆயிரத்து 667 ஆசிரியர்களும், பள்ளி கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு என 46 ஆயிரத்து 810 ஆசிரியர்களும் என மொத்தம் 82 ஆயிரத்து 477 ஆசிரியர்கள் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர்.

    இவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், சில காரணங்களுக்காக அது மாற்றப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கான புதிய கலந்தாய்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

    அதில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 3-ம் தேதி வெளியாகிறது. அதன்பின் அதில் திருத்தம், முறையீடுகள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டபின், 6-ம் தேதி இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என பிரிக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.

    • மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு மே 31, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
    • முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலை செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம் வணிகவியல் மற்றும் இளநிலை அறிவியல் பிரிவில்பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. இயற்பியல்,பி.எஸ்.சி. கணினி அறிவியல்,பி.எஸ்.சி. கணிதம் ஆகிய 7 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு வருகின்ற 31- ந்தேதி, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

    இதில் 31- ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள், .என்.சி.சி., என்.எஸ்.எஸ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 2- ந்தேதி (வியா ழக்கிழமை) வேதியியல் துறை, கணிணித் துறை. கணிதத் துறை, இயற்பியல் துறைக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் 2- ந்தேதி அனைத்து கலைப்பிரிவு தமிழ் ஆங்கிலம் வணிகவிய ல்போன்ற பாடப்பி ரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

    தமிழக அரசின் இட ஒது க்கீட்டின் விதிமுறைகளின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரி கல்விக் கட்டணம் ரூபாய் 2500(தோராயமாக) செலுத்த வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப படிவத்தை நகல், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், தேசிய வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல், 4 வண்ண புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். மேலும் அனைத்து சான்றிதழ்களும் 2 செட் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வரவேண்டும். கலந்தாய்வுக்கு அலைபேசி . மின் அஞ்சல் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்தவ ர்களுக்கு மட்டும் கனியாமூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×