என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Puppet show"
- 18 வயது வரை அவசியம் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
- ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கண்டுகளித்தனர்.
அவினாசி :
பள்ளி இடைவிலகி பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு அவதியுறும், பல்வேறு இன்னலுக்கு ஆளாக வாய்ப்புள்ள 15 வயது முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பெண் குழந்தைகள் மத்தியிலும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தினரிடையேயும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'வளரிளம் பெண்களின் தொடர்கல்வி மற்றும் பாதுகாப்பு' குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் புனிதவதி வரவேற்றார். சி.எஸ்.ஈ.டி அமைப்பின் செயல் இயக்குனர் சி.நம்பி அறிமுகம் மற்றும் நோக்கவுரையில் வளரிளம் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், பெண் கல்வி எந்த அளவிற்கு சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது, தனிமனிதனின் திறன்கள் மேம்படவும், தேசத்தின் மனிதவளம் மேம்படவும் அனைவரும் குறைந்தபட்சம் 18 வயது வரை அவசியம் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம், நகைச்சுவை காட்சிகளுடன், வளரிளம் பெண்களின் தொடர்கல்வியின் அவசியம், அந்த வயதில் வேலைக்கு செல்வதால் ஏற்படும் பிரச்சினைகள், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை பொய்க்கால் குதிரை மற்றும் இதர கிராமிய நடனங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது. இதை ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கண்டுகளித்தனர்.
+2
- வளரிளம் பருவத்தினர் மத்தியில் பள்ளி இடைவிலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும்விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மாணவிகள் ஏறாளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
திருப்பூர் :
மாநகராட்சி பள்ளி சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் மற்றும் பொம்மலாட்ட க்கலைக்குழுவினர் சார்பில்,வளரிளம் பெண்களின் தொடர்கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்டக் கலைப்ப யணமானது திருப்பூர் மாவட்டத்தில் இன்று துவங்கி வருகிற 12- ந் தேதி தேனியில் முடிவடைகிறது.
இதில் திருப்பூர்., கோவை. ஈரோடு., திண்டுக்கல்., தேனி போன்ற தொழில் நகரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் ஆடை உற்பத்தி தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு செல்லும் வளரிளம் பருவத்தினர் மத்தியில் பள்ளி இடைவிலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும்விதமாக, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியின் அவசியத்தை மாணவிகளுக்கு எடுத்துறைக்கும் விதமாக, பொம்மலாட்டம் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை மாணவிகள் ஏறாளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்