search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raging bulls"

    • ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
    • பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன

    மேலூர்

    மதுரை அருகே உள்ள சக்குடியில் முப்புலி சாமி கோவில் உற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவ விழா கடந்த சில நாட்களாக விமரிசையாக நடந்து வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட வாடிவாசலில் சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியவுடன் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யப்பட்ட மாடுகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    இதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்தனர்.

    சில காளைகள் சீறிப்பாய்ந்து வீரர்களின் பிடியில் சிக்காமல் நழுவியது. சிறப்பாக மாடுபிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், பாத்திரங்கள், கட்டில், பீரோ, தங்க காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போட்டியில் 10 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கும் முன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடக்க விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், பூமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    • 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்பு
    • மாடுகள் சிலரை முட்டியது

    வேலூர்:

    வேலூர் ரங்காபுரத்தில் இளைஞர்கள் கூட்டத்தின் நடுவே காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்தப்படும். அதன்படி இந்த விழா மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. சில இடங்களில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வேலூர் ரங்கா புரத்தில் மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது.

    இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாடுகளின் உரிமையாளர்கள், மாடுகளை குளிப்பாட்டி மாட்டுக்கு அலங்காரம் செய்து, வீதிகளில் அழைத்து வந்தனர். அப்போது பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் மாடுகளை இளைஞர்கள் உற்சாகமாக அழைத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து பிள்ளையார் கோவில் தெருவில் ஒன்றன்பின் ஒன்றாக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. அப்போது மாடுகள் கூட்டத்தின் நடுவே சீறி பாய்ந்து ஓடியது. சுற்றியிருந்த இளைஞர்கள் கைகளால் மாடுகளை தட்டி உற்சாகப்படுத்தினர். சில மாடுகள் திமிறிக்கொண்டு அங்கிருந்த பார்வையாளர்களை முட்டுவதுபோன்று வேகமாக ஓடியது. மாடுகள் சிலரை முட்டியது. சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். மாடுகளும் மோதிக்கொண்ட சம்பவமும் நடந்தது.

    இந்த விழாவைக்கான வேலூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் ரங்காபுரத்தில் குவிந்தனர். அவர்கள் வீட்டின் மாடியில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

    சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாடுகள் ஓட விடப்பட்டது. இந்த விழாவால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • குடியாத்தம் அடுத்த குட்லவாரிபல்லி கிராமத்தில் 108-வது ஆண்டாக நடந்தது
    • 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீரிசெட்டிபல்லி ஊராட்சி குட்லவாரிபல்லி கிராமத்தில் 108-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது.

    இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 150 க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன.

    காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்க ப்பட்டிருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன.இந்த காளை விடும் திருவிழாவிற்கு கே. ராமரத்தினம், ஏ.முனிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தாசில்தார், எஸ்.விஜயகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    வருவாய் ஆய்வாளர் பலராமபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.40 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.30 ஆயிரம் உள்ளிட்ட மொத்தம் 40 காளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த காளை விடும் திருவிழாவில் காளைகள் முட்டியதில் காய மடைந்தவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பலத்த காயமடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் குட்லவாரிபல்லி ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    குட்லவாரிபல்லி கிராமத்தில் காளை விடும் திருவிழாவில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதி களைச் சார்ந்தவர்களும், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்க ணக்கானோர் திரண்டு வந்து காளைகள் சீறிப்பாய்வதை கண்டு மகிழ்ந்தனர்.

    ×