search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramoji Rao"

    • திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ்.
    • ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்பட்டது.

    ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

    ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தொடர்ந்து இன்று காலை ராமோஜி ராவுக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றது. வீட்டில் இருந்து ஊர்வலமாக ராமோஜி பிலிம் சிட்டி முழுவதும் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஊழியர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


    தொடர்ந்து ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்பட்டது.

    இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ராமோஜி ராவின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார்.

    அவர்களை தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர். இதையடுத்து ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


    • எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன்.
    • பதவியேற்பு விழா முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன்.

    ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

    மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

    இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் இரங்களை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    எனது வழிகாட்டியும் நலம் விரும்புபவருமான ஸ்ரீ ராமோஜி ராவ் அவர்களின் மறைவைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்தவர். அவர் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.

    ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவுக்கு ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அஞ்சலி நேரில் சென்று அஞ்சலி செலுத்தின்ர்.

    ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், "ராமோஜி ராவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. பதவியேற்பு விழா முடிந்ததும் அவரை சந்திக்க விரும்பினேன். கடந்த ஒன்றரை தசாப்தங்களில் அரசுகள் அவரை மிகவும் தொந்தரவு செய்தன, ஆனால் அவர் இன்று வரை மக்கள் பக்கம் நின்றார். அவர் தெலுங்கு திரையுலகிற்கு நிறைய உள்கட்டமைப்புகளை உருவாக்கி இருக்கிறார். அவரது குடும்பத்திற்கு கடவுள் பலம் கொடுக்க ஜனசேனா சார்பாகவும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

    இந்நிலையில் திரைப்பட நடிகரும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அவர் கூறுகையில், "அவரது கனவை அவரது வாரிசுகள் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்றுவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எல்லோரும் அவருக்குள் ஒரு பெரிய மனிதரைப் பார்த்திருக்கலாம், ஆனால் நான் அவரிடம் ஒரு சிறு குழந்தையைப் பார்த்தேன். 2009 இல், நான் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்காக அவரை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுவது வழக்கம்.. தனது கருத்துக்களை டைரியில் பல்வேறு வண்ண மைகளால் எழுதுவார் அவரது குடும்பம் மட்டுமல்ல, தெலுங்கு மக்களும் சிறந்த மனிதரை இழந்துவிட்டார்கள் என்று எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    • ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
    • துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச்சென்றுள்ளார்.

    இத்துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.





    • நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் (87) உடல்நகுறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

    ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ராமோஜி ராவ். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், 'ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருடன் பல முறை உரையாடுவதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி' என்று பதிவிட்டுள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில், மேரு மலையே தலைவணங்கும் அளவுக்கு வாழ்ந்த ராமோஜி ராவின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    ஜுனியர் என்.டி.ஆர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய சினிமாவிலும் பத்திரிக்கைத் துறையிலும் தீர்க்கதரிசியாக விளங்கிய ராமோஜி ராவின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது முதல் படமான நின்னு சூடலனி உருவாக காரணமாக இருந்த அவரை என்றென்றைக்கும் நினைவில் வைத்திருப்பேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இயக்குனர் ராம் கோபால் வர்மா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.
    • ராமோஜி ராவின் மறைவுக்கு தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான ஜி கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ராமோஜி ராவ் ஃபிலிம்சிட்டி, ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமேஜி ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

    மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.45 மணிக்கு காலமானார்.

    ராமோஜி ராவ் ஒரு பெரிய வணிகப் புகழ் பெற்றவர். ஊடகங்களுடன், ராமோஜி ராவ் பல வணிகங்களில் பணியாற்றியுள்ளார். இன்று மார்கதர்ஷி சிட்ஃபண்ட்ஸ், பிரியா ஃபுட்ஸ் போன்ற தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. மேலும், ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவியதன் மூலம் ஐதராபாத் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் ராமோஜி ராவ் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமோஜி ராவின் மறைவுக்கு தெலுங்கானா பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான ஜி கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ×