search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery of lands"

    • நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம்தோறும் கோவில் நிலங்களை மீட்க தனி வட்டாட்சியர் உள்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதிகாரிகள் கோவில்களில் ஆய்வு செய்து நிலங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாவூத்து உதயகிரி நாதர் கோவில் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலுக்கு சொந்தமாக 349 ஏக்கர் புஞ்சை நிலங்கள், 39 ஏக்கர் நஞ்சை நிலங்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கோவில் பெயரில் நிலங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தற்போதைய கோவில் அறங்காவலர் ரூபாபாய் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து தனி வட்டாட்சியர் மாரிமுத்து, நில அளவையர், இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நிலங்களை ஆய்வு செய்து வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அளவீடு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கொப்பம்பட்டியில் ரூ.18 கோடி மதிப்பிலான 60 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது
    • வருகின்ற 14ந் தேதியன்று பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீகுங்குமாம்பிகை உடனுறை ஸ்ரீசப்தரீஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு சொந்தமான மானிய நிலங்கள் கொப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ளன. அவ்வாறு உள்ள விளை நிலங்களில் சுமார் 60 ஏக்கர் நிலங்களின் குத்தகை பணம் முறையாக கட்டப்படாமல், ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிய வந்தது.

    அதனையடுத்து திருச்சி இணை ஆணையர் செல்வராஜ் உத்தரவின்படி பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் தலைமையில் பெரம்பலூர் தனி வட்டாட்சியர் பிரகாசம், சரக ஆய்வாளர் தமிழரசி, திருக்கோயில் செயல் அலுவலர் சௌந்தரபாண்டியன், எழுத்தர்கள் செல்வராஜ், சதாசிவம், கோயில் பணியாளர்கள் மற்றும் நில அளவையர் அஜித்குமார், லால் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் உதவியுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து நிலங்களை மீட்கும் பணி தொடங்கியது.

    சுமார் ரூ.18.15 கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான 60.51 ஏக்கர் விளைநிலங்கள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கண்ட விளைநிலங்களை இந்து அறநிலையத் துறையினர் முறையாக ஏலம் விட அறிவித்ததன் பேரில் வருகின்ற 14ந் தேதியன்று பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


    ×