search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reserve"

    • காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    புர்கா அணிந்து வந்த ஒரே காரணத்தால் பெண் ஒருவர் உணவகத்தில் மணிக்கணக்காக காத்திருக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல ஊர்களில் கிளைகள் கொண்டுள்ள கிருஷ்ணா பவன் உணவகத்துக்கு தனது கணவன், 2 வயது மகன் மற்றும் மாமியாருடன் நபீஸா என்ற இஸலாமிய பெண் ஒருவர் நேற்றிரவு உணவருந்த சென்றுள்ளார்.

    ஹோட்டலில் அதிக கூட்டம் இருந்ததால் ஒருவர் பின் ஒருவராக ரிசர்வ் முறையில் காத்திருந்த வாடிக்கையாளர்களை இருக்கைகளுக்கு அனுப்பியுள்ளது ஹோட்டல் நிர்வாகம். நபீஸாவும் தனது குடும்பத்துடன் இருக்கையை ரிசர்வ் செய்ய பெயர் கொடுக்க சென்றுள்ளார்.

    ஆனால் உணவக மேனேஜர் அந்த பெயர்களை குறித்துக்கொண்டதாக தெரியவில்லை. காத்திருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இருக்கைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில் நபீஸா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து இரண்டொரு முறை மேனேஜரிடம் கேட்டும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் பலர் உணவருந்திவிட்டு எழுந்து சென்ற நிலையில் இருக்கைகள் காலியாக இருந்ததாக நபீஸா கூறுகிறார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து நபீஷாவின் கணவர் சென்று கேட்ட பிறகு அவர்களுக்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஆர்டர் செய்த உணவை கொண்டுவர மேலும் 1 மணி நேரம் தாமதம் செய்துள்ளனர். இதுகுறித்து மேனேஜரிடம் கேட்டபொழுது தங்களை துளியும் பொருட்படுத்தாமல் அவர் அங்கிருந்து சென்றார் என்றும் அவர் தாங்கள் முஸ்லீம் என்பதற்காக பாரபட்சமாக செய்லபடுகிறார் என்று வெளிப்படையாக தெரிந்தது என்று நபீஸா கூறுகிறார்.

    இதுகுறித்து நபீஸா தனது பேஸ்புக் பதிவில், பொதுவாக இந்து - முஸ்லீம் பாகுபாடு என்று சொல்லப்படுவதின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் எனது வாழ்நாளில் தற்போது சந்தித்தது போன்ற பாகுபாட்டை சந்தித்ததே இல்லை. என்று தெரிவித்துள்ளார். 

    • 6 மாத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.
    • மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளார் என கூறினார்.

    விழுப்புரம்.ஜூன்.12-

    தமிழகத்தில் முதல் முதலாக 6 மாத ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், செஞ்சி மஸ்தான் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் தொடங்கி ைவத்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் ஜீவன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் இன்று காலை 10 மணியளவில் விழுப்புரத்தில் திரெளபதி அம்மன் கோவில் தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் தொடங்கி வைத்தனர். இதில் எம்எல்ஏக்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவகுமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், விழுப்புரம் சேர்மன் தமிழ்ச்செல்வி, பிரபு மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவி, விழுப்புரம் சேர்மன் சித்திக் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்முடி நிருபர்களுக்கு கூறியதாவது:-

    விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருமை அளிக்கிறது. இதனையடுத்து தற்போது தமிழகத்தில் 1,40,000 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 4,348 குழந்தைகளுக்கு ஊட்டசத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நான் அரசியல் பேச வில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் சண்முகம் என்பவரது வீட்டில் இருந்தார். இந்நிலையில் கருணாநிதி ஆட்சியில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் விழுப்புரம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக மாறும் என்று கூறினார். கடைசியாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நன்றி கூறினார்.

    ×