search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SIM cards sales"

    • செல்போன் நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும்.
    • ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து விரிவான விளக்கத்தை வணிகவரித்துறையினர் வியாபாரிகளுக்கு நடத்த வேண்டும்.

    பல்லடம் : 

    திருப்பூர் மாவட்ட செல்லுலார் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதன் தலைவர் ஷேக் ஒளி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் பெரியசாமி, கார்த்திக், துணைச் செயலாளர்கள் கார்த்திக், ஆர்.கே. கார்த்திக், பொருளாளர் ரூபேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் லிங்குசாமி வரவேற்றார்.

    இதில் பல்லடம் செல்லுலார் சங்கத்தின் தலைவராக முருகன், செயலாளராக ராம்குமார், பொருளாளராக மாதேஷ், ஒருங்கிணைப்பாளராக சேரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    பின்னர் திருப்பூர் மாவட்டத்தில், சாலையோரங்களில் சிம் கார்டு விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து விரிவான விளக்கத்தை வணிகவரித்துறையினர் வியாபாரிகளுக்கு நடத்த வேண்டும்.

    செல்போன் நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட துணைப் பொருளாளர் சஞ்சய் குமார், ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்சாமி மற்றும் பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த செல்லுலார் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் அசோசியேசன் சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
    • சாலை ஓரங்களில் சிம்கார்டுகளை விற்பதை தடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட மொபைல் போன் ரீடெய்லர் அசோசியேசன் சார்பில் மாவட்ட எஸ்.பி.யிடம் தலைவர் சேக்பரீத், செயலாளர் சேக்பரீத் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    அவர்கள் தெரிவிக்கை யில் நாளுக்குநாள் அதி கரித்து வரும் செல்போன் உபயோகத்தில் சிம்கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த கார்டுகளை நிறுவனங்களில் திண்டுக்கல் மாவட்ட டிஸ்டிரிபியூடர்கள் விற்பனையை மட்டுமே நோக்கமாக கருதி முறை யின்றி சாலையோரங்களில் இலவசமாகவும், குறைந்த விலையிலும் குடைபோட்டு விற்பனை செய்து வரு கின்றனர்.

    இதை பொதுமக்கள் வாங்கி 1 மாதம் மட்டுமே உபயோகித்து விட்டு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறிகின்றனர். இதனை ஒருசிலர் எடுத்து தவறான செயலுக்கு பயன்படுத்துவதால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேறு மாநில நபர்கள் குறிப்பாக வடமாநிலத்தவர் எந்தவித ஆவணங்களையும் காட்டாமல் சிம்கார்டுகளை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே இதுபோன்ற விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றனர்.

    ×