search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sattur ramachandran"

    • கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த 2 வழக்குகளையும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு செப்டம்பர் 11-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

    சென்னை:

    தற்போது தமிழ்நாடு நிதி மற்றும் மனித வளம் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தங்கம் தென்னரசு. இவர், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு கோர்ட்டு, வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

    இதேபோல தற்போது வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சிகாலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி மற்றும் அவருடைய நண்பர் கே.எஸ்.பி.சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு கோர்ட்டு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு கோர்ட்டு, இரு அமைச்சர்களையும் விடுவித்து பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தாமாக முன்வந்து வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதுதொடர்பாக இரு அமைச்சர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த 2 வழக்குகளையும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பிக்க உள்ளதாக ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இந்தநிலையில், சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு அளித்துள்ளார்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசு செப்டம்பர் 11-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

    அமைச்சர்கள் இருவரையும் விடுவித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ள சென்னை ஐகோர்ட், சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    20 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார். #satturramachandran #dmk #byelection

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி பாராளுமன்றம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் குழந்தை தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் மல்லி, ஆறுமுகம், முனியாண்டி, நகர செயலாளர் அய்யாவு பாண்டியன், உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

    பொதுமக்கள் நம்மீது கோபமாக உள்ளனர். இவ்வளவு எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் இந்த ஆட்சியை ஏன் மாற்றவில்லை என்று கேட்கிறார்கள்.

    தி.மு.க. கொள்கை மிக்க கட்சி. எதையும் கொள்கைப்படி தான் செய்யும். யாருக்கும் அடிமையாக இருக்காது. 20 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    மோடி மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஆட்சிதான் அமையும். அப்போது இந்த அ.தி.மு.க. ஆட்சி தானாகப் போகும்.

    தேர்தலின் போது அ.தி.மு.க. கொள்ளையடித்த பணத்தை கொண்டு வருவார்கள். மத்தியில் இருந்து பணம் வரும். நாம் வெல்வோம்.

    ஒற்றுமையாக இருந்து இதையெல்லாம் முறியடித்து வெற்றி பெற வேண்டும். கலைஞர் இல்லாத நேரம் தளபதி தலைமையில் தி.மு.க. வலுவாக கட்டுக்கோப்பாக உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு காட்ட வேண்டும்.

    அதிலும் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #satturramachandran #dmk #byelection

    ×