search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Screening"

    • பல திரைப்பட நடிகைகள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
    • உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேலே உயர்த்தி, அதே மாற்றங்களைக் கவனிக்கவும்.

    உலகளவில் அதிகளவு மக்களை பாதித்திருக்கும் நோய் என்றால் அது புற்றுநோய்தான். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகளவு பெண்களை பாதிக்கும் ஒரு பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஒவ்வொரு முறையும் ஒரு பிரபலமான நபர் ஒரு நோயால் கண்டறியப்பட்டால், அதைச் சுற்றி நிறைய சலசலப்பு ஏற்படுகிறது. அந்த நோய் பற்றி தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல திரைப்பட நடிகைகள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

    மார்பக புற்றுநோய் என்பது மார்பக செல்களின் அசாதாரண வளர்ச்சியாகும், இது கட்டிகளை உருவாக்குகிறது. சரியான நேரத்தில் பரிசோதிக்கப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவி உயிரிழக்க நேரிடும். "மார்பக புற்றுநோய் செல்கள் பால் குழாய்கள் அல்லது மார்பகத்தின் பால் உற்பத்தி செய்யும் மடல்களுக்குள் தொடங்குகின்றன. இதன் ஆரம்பநிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல மற்றும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். புற்றுநோய் செல்கள் அருகிலுள்ள மார்பக திசுக்களுக்கும் பரவலாம். இது கட்டிகள் அல்லது தடிப்பை ஏற்படுத்தும் கட்டிகளை உருவாக்குகிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியது. மார்பக புற்றுநோயின் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வும், சுய மார்பகப் பரிசோதனையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் காலத்தின் தேவையாகும். வீட்டிலேயே சுய மார்பக பரிசோதனை செய்வது எப்படி என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

    • ஒவ்வொரு மாதமும் ஒரு சீரான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும், உங்கள் மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு சில நாட்களுக்குப் பிறகு செய்வது நல்லது.

    • உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்து கண்ணாடி முன் நிற்கவும். அளவு, வடிவம் அல்லது தோல் அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என கவனமாக பார்க்கவும்.


    • உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேலே உயர்த்தி, அதே மாற்றங்களைக் கவனிக்கவும்.

    • உங்கள் முதுகை கீழ்வைத்துப் படுத்து, நீங்கள் பரிசோதிக்கும் பக்கத்தில் உங்கள் தோள்பட்டைக்குக் கீழே ஒரு சிறிய தலையணை அல்லது மடிந்த துண்டை வைக்கவும். மார்பகப் பகுதியை முழுவதுமாக மறைக்கும் வகையில், ஒரு வட்ட வடிவில், கடிகார திசையில் மார்பகத்தை உணர எதிர்பக்கம் உள்ள கையைப் பயன்படுத்தவும்.

    • அக்குள் பகுதியையும் பரிசோதிக்க மறக்காதீர்கள். கட்டிகள், தடித்தல், வலி அல்லது அசாதாரண மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்.

    அசாதாரண மாற்றங்கள் எதையும் நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகவும். வீட்டிலேயே சுய பரிசோதனை செய்வதற்கான சில எளிய வழிகள் இவை. இருப்பினும், இன்னும் சந்தேகங்கள் இருந்தால், ஒரு மருத்துவரிடம் உங்களைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. ஏனெனில் சரியான நோயறிதலை ஒரு மருத்துவ நிபுணரால் மட்டுமே செய்ய முடியும்.

    • 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது.
    • இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.

    இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி  கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னதாக படத்தில் பணியாற்றியவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா படம் பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

     

    அந்த பதிவில் அவர் கூறியதாவது, 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அனைத்து மக்களுமே நோயின்றி வாழ்வதையே விரும்புகின்றனர்.
    • நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் நல்லது.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அனைத்து மக்களுமே நோயின்றி வாழ்வதையே விரும்புகின்றனர். நம் உடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றோடு தொடர்புடையது. என்னதான் நாம் சிறந்த உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிவிட்டால் அந்த நோய் வயதிற்கான நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படலாம். இதனைத் தவிர்த்துக் கொள்ள 30 வயதை கடந்த பெண்கள் கீழ்காணும் பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.

     நீரிழிவு நோய் பரிசோதனை:

    நீரிழிவு நோய் என்பது இன்று பலருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. மாறிவரும் நம்முடைய வாழ்க்கை முறையின் காரணமாக பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருக்கிறது. உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றாலும் இந்த நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் நல்லது. எனவே முப்பது வயதை கடந்து விட்டால் ரத்த குளுக்கோஸ் பரிசோதனை மற்றும் ஹெச்ஏஒன்சி ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒன்றாகும்.

     புற்றுநோய் பரிசோதனை:

    30 வயதை கடந்த பெண்களை தாக்கக்கூடிய மற்றொரு நோய் கர்ப்பப்பை புற்று நோயாகும். இந்த நோய் வரும் முன்பே கண்டறிவதற்கு பாப் ஸ்மியர் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். முறையற்ற மாதவிலக்கு சுழற்சி இருக்கும் பெண்கள் கட்டாயம் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்து கொள்வது இந்த நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வழிவகுக்கும்.

     இதயநோய் பரிசோதனை:

    இதய நோய் என்பது இன்று எல்லா வயதினருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே 30 வயதை கடந்து விட்டால் நம்முடைய ரத்த அழுத்தம், ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை ஒரு வருடங்களுக்கு அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    மார்பக புற்றுநோய்:

    30 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தாக்கும் அபாயகரமான நோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். 30 வயதை கடந்து விட்டால் மார்பகப் புற்று நோய்க்கான பரிசோதனையை செய்து கொள்ள தயங்கக் கூடாது. இதற்கான மேமோகிராபி பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும்.

    ×