search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senthil Balaji case"

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது.
    • குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக அக்டோபர் 1ம் தேதி நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    செந்தில் பாலாஜி உள்பட 47 பேருக்கு எதிரான இந்த வழக்கு, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு கடந்த 12 ம்தேதி விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை தொடர அனுமதிக்கும் கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத்துறையிடம் இருந்து கிடைக்கவில்லை எனவே அனுமதி கடிதத்தை சமர்பிக்க 3 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கோரி இருந்தார்.

    ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்தது. ஆனால் தற்போது பழைய காரணத்தை கூறி கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

    பின்னர் விசாரணையை இன்றைக்கு (செப்டம்பர் 18ம் தேதி) ஒத்தி வைத்த நீதிபதி, வழக்கு தொடர அனுமதி அளித்தது தொடர்பான விபரங்கள் மற்றும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்துவதற்கான அரசின் அனுமதி உத்தரவை காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து, வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி ஜெயவேல், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி உள்பட அனைவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    • செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன என கேள்வி.
    • செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்? என கேள்வி.

    செந்தில் பாலாஜி ஜாமின் மீதான மேல்முறையீடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமலாக்கத் துறையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

    ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல், அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து தண்டிக்க சட்டம் அனுமதிக்கிறதா ? என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், ஊழல் வழக்கு விசாரணையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டுவிட்டால் பண மோசடி வழக்கு என்னவாகும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளன எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு, முதல் வழக்கில்21 சாட்சிகளும் 2வது வழக்கில் 100 சாட்சிகளும், 2வது வழககில் 100 சாட்சிகளும் 3வது வழக்கில் 200 சாட்சிகளும் உள்ளதாக அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

    செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை எப்போது நிறைவடையும்? எனவும் நீதிபதிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

    இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வாய்தா கேட்காவிட்டால் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இறுதியில், இந்த வழக்கு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    • நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
    • இதுபோன்ற கேள்வி அமலாக்கத்துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள கூடாது.

    பண மோசடி வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது, செந்தில் பாலஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்ட் டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது என்றும் எளிமையான கேள்விக்கு, எளிமையான பதில் தேவை என்றும் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், சோதனையில் கைப்பற்றிய பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இருந்ததா ? எனவும், கைப்பற்றிய பென் டிரைவில் சர்ச்சைக்குரிய கோப்பு இல்லை என்பதே செந்தில் பாலாஜி தரப்பின் வாதமாக உள்ளதே எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    நாங்கள் எழுப்பிய கேள்விக்கு முதலில் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுபோன்ற கேள்வி அமலாக்கத்துறைக்கு எதிரானதாக எடுத்துக் கொள்ள கூடாது. 15 நிமிடங்களாக உரிய பதில் இல்லையே எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    அப்போது, சோதனையில் கைப்பற்றாத சீகேட் ஹார்ட் டிஸ்க்கை ஏற்கனவே தமிழ்நாடு லஞ்சம் ஓழிப்புத்துறை வசம் இருந்ததாக அமலாக்கத்துறை வாதம் செய்தது.

    கடந்த 2020, பிப்ரவரி 2ம் தேதி சோதனையிட்டபோது, இந்த விவகாரத்தை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் செந்தில் பாலாஜி எழுப்பவில்லை எனவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

    இதற்கிடையே, செந்தில் பாலாஜி ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ளார். இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் கிழப்பது ? என செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறினார்.

    இந்நிலையில், நாளை உரிய பதிலுடன் வர அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

    ×