search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Thyagarajar"

    • திருவொற்றியூரில் தோன்றி திருவிளக்கு ஏற்றும் தொண்டால் சிவத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றவர் கலியநாயனார்.
    • இவர் திருவொற்றியூர் சக்கரபாண்டித் தெருவில், எண்ணை ஆட்டி விற்கும் சொக்கர் குலத்தில் தோன்றியவர்.

    திருவொற்றியூரில் தோன்றி திருவிளக்கு ஏற்றும் தொண்டால் சிவத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றவர் கலியநாயனார்.

    இவர் திருவொற்றியூர் சக்கரபாண்டித் தெருவில், எண்ணை ஆட்டி விற்கும் சொக்கர் குலத்தில் தோன்றியவர்.

    இவர் இயல்பாகவே ஓற்றியூர் கோவில் இறைவன் மேல் சிவபக்தி கொண்டவர்.

    இரவும், பகலும் தானே ஆட்டிய எண்ணையை எடுத்துச் சென்று கோவிலில் விளக்கேற்றும் தொண்டு செய்து வந்தார்.

    இவரின் உண்மையான பக்தியை உலகறியச் செய்ய எண்ணினார் ஒற்றீசர். ஈசனின் திருவிளையாடலால் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த கலியநாயனார் செல்வங்களை இழந்தார்.

    வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். என்றாலும் கடன் பெற்று விளக்கு ஏற்றும் தொண்டினை விடாமல் தொடர்ந்து செய்தார்.

    ஒரு கட்டத்தில் அவருக்கு கடன் கொடுக்க யாரும் முன்வரவில்லை இதனால் கூலி வேலை செய்து பொருள் பெற்றும், தன் வீட்டை விற்றும் கோவிலில் தீபம் ஏற்றினார்.

    மேலும் விளக்கேற்ற பொருள் வேண்டி, தன் அன்பு மனைவியாரையே அடிமையாக விற்க முனைந்தார். இதை யாரும் ஏற்கவில்லை.

    ªபாருளின்றி தொண்டு தடைபட்டு விட்டதே என வருந்தி கோவில் வந்தார். மணி வனத் திருவிளக்கு மாளின் யானும் மாள்யேன் என்று தன் கழுத்தை அறுத்து ரத்தத்ததை எண்ணையாக ஊற்றி விளக்கு ஏற்றமுனைந்தார்.

    கலிய நாயனாரின் ஈடு, இணையற்ற பக்தியைக் கண்டு கருணையுடன் வெளியிட்ட ஒற்றீசர் அவருக்குச் சிவபதம் தந்து பெருந்தொண்டராக ஆக்கிக் கொண்டார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக காட்சி தருகின்றார்.

    • அத்தகைய பட்டினத்தார் முக்தி பெற்ற இடம் திருவொற்றியூர்.
    • இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார். பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்

    சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார், திருவொற்றியூருக்கு வந்து திருவருள் பெற்று கடற்கரை ஓரத்தில் உயிரோடு ஜீவ சாமாதியான சித்தர் ஆவார்.

    காவிரிபூம்பட்டினத்தில் நகரத்துச் செட்டியார் மரபில் தோன்றியவர் திருவெண்காடர், இவர் திருமணமானபின் குழந்தை பாக்கியம் கிடைக்காததால் சிவனிடம் முறையிட்டார்.

    அவர் மீது மனம் இறங்கிய திருவிடைமருதூர் ஈசனே மருதவாணர் என்ற பெயரில் வளர்ப்பு மகனாக வந்தார், வளர்ந்தார், கடல் கடந்து வணிகம் செய்து திரும்பி வந்தார்.

    வறட்டிகளோடு ஒரு கிழிந்த ஒலையையும் தந்தார் மறைந்தார். "காதற்றஊசியும் வாராது காணும் கடை வழிக்கே" என்ற உண்மையை அந்த ஓலை உணர்த்தியது.

    சிவனைத் தவிர எல்லாச் செல்வமும் பொய் என்ற ஞானம் பெற்றார். செல்வம், மனைவி, உறவு யாவற்றையும் துண்டித்துக் கொண்டு துறவு பூண்டார். கோவில் தோறும் இறைவனை வழிபட்டு தான் பெற்ற ஞானத்தை பாடினார்.

    தாயார் மறைந்தபோது தனது பாடல்களால் அவருக்குக் கடமைகளைச் செய்தார்.

    சுவையற்றபேய்க் கரும்பு இனித்த இடமாகிய திருவொற்றியூர் தனக்கு முக்தி தரும் இடம் என அறிந்து இங்கு வந்து கடற்கரை அருகே சித்துக்கள் செய்தார்.

    "பட்டினத்தார் உலகையே துறந்தவர். அவரைபோல அனைத்தையும் துறந்தவர் பூவுலகில் யாரும் இல்லை" என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

    அத்தகைய பட்டினத்தார் முக்தி பெற்ற இடம் திருவொற்றியூர்.

    இங்கு முற்றும் துறந்த ஞானியாகக் கோவணத்துடன் வருகை தந்தார். பக்திரசம் சொட்டச் சொட்ட பல பாடல்கள் பாடினார்.

    திருவொற்றியூரில் தெருவில் நடந்து போனேன் காலடி மண்ணை நெற்றியில் திருநீறாக பூசினால் பிறவி நோய்க்கும் அருமுருந்தாகும் என்று பட்டினத்தார் பாடலில் கூறியுள்ளார்.

    பட்டினத்தார் இந்த ஊரில் மீனவச் சிறுவர்களுடன் விளையாடினார். மணலைத் தோண்டி அதில் தன்னை புதைக்கச் செய்தார். வேறு இடத்தில் இருந்து வெளியில் வந்தார்.

    இதுபோல 2 முறை செய்தார். 3வது முறையும் புதைத்த போது அவர் வெளியே வரவில்லை. தோண்டி பார்க்கும் போது இறைவனடி சேர்ந்து லிங்கமாக காட்சி தந்தார். திருவொற்றியூர் இறைவனை பாடி அர்ச்சனை செய்ய ஏதுவாக 28 போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

    முடிவாக ஜீவ சமாதியாக கடற்கரை அருகில் சிவலிங்க வடிவாகவே ஆனார். இவரது சமாதிக் கோவில் திருவொற்றியூர் கடற்கரை சாலை அருகே இன்றும் உள்ளது. சமீபத்தில் இந்த கோவில் சீர் செய்யப்பட்டு வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது.

    திருவொற்றியூர் பற்றி இவர் பாடிய ஒருபா ஒருவது 11ஆம் திருமுறையில் உள்ளது.

    பட்டினத்தார் முக்தி பெற்றதால் இது முக்தித்தலம் என வழங்கப்படுகிறது. பட்டினத்தார் மரபினராகிய நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டியார் இக்கோவிலை முக்தித் தலமாக இன்றும் போற்றி வணங்கி வருகின்றனர்.

    • தமிழ்த்தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.
    • இம்முருகப்பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்பாலித்து வருகிறார்.

    தனித்தமிழ் அடிகளாய் விளங்கிய மறைமலை அடிகளார் வயிற்று வலி நோயினால் அதிக துன்பம் அடைந்தார்.

    சூலை நோயைத் தந்து திருநாவுக்கரசு ஆட்கொள்வது போல சிவன் இவருக்கு ஆற்றாத வயிற்று நோயைத் நத்தார்.

    தமக்கு ஏற்பட்ட வயிற்று வலி நோய் நீங்குமாறு திருவொற்றியூரில் கோவில் கொண்டுள்ள முருக பெருமானை வேண்டி திருவொற்றி முருகர் மும்மணிக்கோவையை பாடினார்.

    தமிழ்த்தெய்வம், முருகன் பாவலருக்கு உடல் நலத்தைத் தந்து நோயைத் தீர்த்தார்.

    இம்முருகப்பெருமான் இன்றைக்கும் வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்பாலித்து வருகிறார்.

    • ஸ்ரீ தியாகராஜபெருமானது பவனி பற்றியும் ஓட்டம் பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.
    • திருவொற்றியூர் முருகனுக்கு கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

    ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் திருவொற்றியூருக்கு வந்து இறைவனை வணங்கினார். அங்குள்ள தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.

    அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.

    ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி "பெருமான் மாலை" என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என்ற 101 பாடல்களையும் பாடியுள்ளார்.

    ஸ்ரீ தியாகராஜபெருமானது பவனி பற்றியும் ஓட்டம் பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

    திருவொற்றியூர் முருகனுக்கு கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

    "அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே

    திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்

    ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்

    கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.

    • தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள செய்தியால் கவிபாடும் அருள்பெற்றார்.
    • சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒரு பெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

    கம்பர், காளி பக்தர், எனவே தினமும் வட்டபாறை காளியம்மனை வணங்கிய பிறகே ராமாயணத்தை எழுதுவார்.

    இரவில் தமிழில் பாடல் எழுதும் போது வட்டபாறை நாச்சியார், பெயர் வடிவில் வந்து ராமாயணம் எழுதும் கம்பனுக்குத் தீபந்தம் ஏந்தி நின்றதைக் கம்பரே பாடியுள்ளார்.

    ஒற்றியூர் காக்க உறைகின்றகாளியே

    வெற்றியூர்க் காகுத்தன் மெய்ச்சரிதை & பற்றியே

    நந்தாது எழுதற்கு நள்ளிரவில் மாணாக்கர்

    பிந்தாமல் பந்தம் பிடி

    தீப்பந்தம் ஏந்தி நின்று வட்டபாறை அம்மனே கம்பனின் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள செய்தியால் கவிபாடும் அருள்பெற்றார்.

    சதுரானை பண்டித மடத்தில் உள்ள ஒரு பெண் மேல் கம்பன் அன்பு கொண்டு பாடியுள்ளதும் இங்கு அகச்சான்றுகளாய் உள்ளன.

    கம்பர், வான்மீகி ராமாயண வடமொழிகள் மூல படம் கேட்க ஒற்றியூர் சதுரானை மடம் வந்ததும், வட்டபாறையம்மன் அருளால் தமிழில் ராமாயணம் பாடியதும் தனிச்சிறப்புக்குரிய செய்தியாகும்.

    • திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழி பெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.
    • இதற்கான ஆதாரங்களை, கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    தியாகராஜ சுவாமி சன்னதி முன் மண்டபத்து தூணிலே உள்ள ஆஞ்சநேயர் வேண்டியவருக்கு அருளை அள்ளி வழங்கும் வள்ளல்.

    நாம் நினைத்த காரியம் இவரிடம் ஜெயமாகும்.

    ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்.

    கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழி பெயர்த்து எழுத சோழ நாட்டில் இருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார். கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர்.

    இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.

    சோழ நாட்டு திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.

    திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழி பெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.

    இதற்கான ஆதாரங்களை, கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12&ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.

    திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.

    இவர் கேரள நாட்டை சேர்ந்தவர்.

    பல கலைகளையும் பயின்றவர். இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.

    • திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலியை திருமணம் செய்வார்.
    • இத்தகைய இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனி பெருமையாக உள்ளது.

    பிற கோவில்களில் ஒன்றாக இருக்கும். எல்லா அம்சங்களும் இங்கு இரட்டைச் சிறப்புகளாக அமைந்திருக்கிறது.

    இங்குள்ள விருட்சம் அத்தி, மகிழம் & இரண்டு திருக்குளங்கள் நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் & இரண்டு பெருமான் படம்பக்கநாதர், தியாகராஜர் என இரண்டு பேர் உள்ளனர்.

    அம்பிகை ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்டபாறையம்மன் என இரண்டு அன்னையர்கள் உள்ளனர்.

    விநாயகர், குணாலய விநாயகர், பிரதான விநாயகர் என இருவிதமாக உள்ளார்.

    முருகரும், அருட்ஜோதி பெருமான், பிரதானமுகர் என இரண்டு பேர், நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர் என இரண்டு பேர்.

    திருவீதி விழாவில் கூட சந்திரசேகர் வீதி வலம்வந்த பின் இரண்டாவதாக தியாகராஜரும் வீதி வலம் வருவார்.

    பிரம்ம உற்சவம், வசந்த உற்சவம் என சிவனுக்கு இரண்டு உற்சவமும், சிவராத்திரி உற்சவம் வட்டபாறையம்மன் நவராத்திரி உற்சவம் என அம்பிகாவுக்கு இரண்டும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

    திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலியை திருமணம் செய்வார்.

    இத்தகைய இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனி பெருமையாக உள்ளது. 

    • வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
    • ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்த கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.

    மண்ணுக்குச் சோமசுந்தரர் கோவிலும்,

    விண்ணுக்கு ஆகாசலிங்கமும்,

    நெருப்புக்கு அண்ணாமலையார் கோவிலும்,

    காற்றுக்கு காளத்தீஸ்வரரர் கோவிலும்,

    வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்த கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.

    • அதில் பெரும் புகழ்பெற்றது, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.
    • பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பாடல் பெற்ற பழமையான சிவாலயங்கள் மொத்தம் 274 உள்ளன.

    இந்த ஆலயங்களில் சென்னை உள்ளிட்ட தொண்டை மண்டலத்தில் 32 திருத்தலங்கள் உள்ளன.

    அதில் பெரும் புகழ்பெற்றது, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.

    பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது. முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.

    ஆகம விதிபடி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.

    கோவிலில் நுழைந்ததும் 60 அடியில் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காணலாம்.

    இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்டபாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

    இதனால் இத்தலத்தில் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.

    இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.

    உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

    ஸ்ரீ தியாகராஜர் மற்றும் ஸ்ரீ வடிவுடையம்மனை அந்திசாயும் மாலை நேரத்தில் சிவனை வழிபடுவது உகந்தது.

    விளக்கேற்றும் மண்டபத்தில் விளக்கேற்றி அங்கிருந்து கோபுரத்தை கை உயர்த்தி கும்பிடுவது சிறந்தது.

    வள்ளலார் குறிப்பிட்ட இந்த முறையை தான் பின்பற்றினார். எனவே நாமும் இந்த வழிபாட்டு முறையையே பின்பற்ற வேண்டும்.

    ×