search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Petition"

    • அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம்.
    • அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசியில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம். ஒரு அறை 2 கழிவறை உள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனால் கடும் சிரமம் அடைந்து வருகின்றோம். இதனால் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. பல நேரங்களில் தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதையும் சரி செய்வதில்லை.

    இந்த நிலையில் விடுதியை காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் கூறி வருகிறார். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    கடந்த 13-ந்தேதி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் எங்களையும், பெற்றோரையும் தரக்குறைவாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டினார். விசாரணை என்ற பேரில் குற்றவாளிகளை போல் நடத்தினார்.

    இதனால் எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் எங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெண் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன.
    • தேசிய தேர்வு முகமை பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    நீட்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன.

    நீட்தேர்வு தொடங்கு வதற்கு முன்பே பீகார் மாநில மையத்தில் இருந்து வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடந்ததாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தேர்வர்களுக்கு ஜூன் 23-ந்தேதி மறு தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீட் தேர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரி வித்தது. நீட் தேர்வு தொடர்பாக ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

    ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை ஐகோர்ட்டுகளில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தேசிய தேர்வு முகமையின் மனுவை ஏற்று இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

    இதேபோல மேகாலயாவில் நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு 45 நிமிடங்கள் குறைவாக வழங்கப்பட்டதாக கூறி சில மாணவர்கள் மறுதேர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கருணை மதிபெண்களை வழங்கிய 1,563 மாணவர்களுடன் தங்களுக்கும் மறுதேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

    இது தொடர்பாக மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நீட் தேர்வு தொடர்பான வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் ஜூலை 8-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    ×