search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students faint"

    • விஷ வாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.
    • 23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், சூர்யா லங்கா என்ற இடத்தில் விமானப்படை மையத்தின் சார்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது.

    நேற்று காலை பள்ளிக்கு வந்த 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி வகுப்பு நடந்தது. அப்போது அறிவியல் ஆசிரியர் குளோரோபில் மற்றும் எலுமிச்சை, உப்பு கரைசல் மூலம் பரிசோதனை செய்து மாணவர்களுக்கு காண்பித்தார்.

    சில குறும்பு பிடித்த மாணவர்கள் ஆசிரியர் செய்து காண்பித்த கரைசலுடன் காப்பித்தூள், சர்க்கரை, உப்பு, சானிடைசரை கலந்தனர்.

    அப்போது மாணவர்கள் செய்த கலவையில் இருந்து திடீரென விஷ வாயு உருவாகி ஆய்வகம் முழுவதும் புகைப்பரவி அருகில் இருந்த 7-ம் வகுப்பறைக்குள் சென்றது. விஷ வாயுவை சுவாசித்த 25 மாணவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக விமானப்படைத்தள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் வெங்கட் முரளி சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். ஆஸ்பத்திரியில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 23 மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    2 மாணவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

    • இடியுடன் கூடிய கனமழை
    • சிகிச்சை முடிந்து பத்திரமாக வீடு திரும்பினர்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

    அப்போது சம்பத்துராயன்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது மின்னல் தாக்கியபோது அவ்வழியே சென்ற 8-ம் வகுப்பு படிக்கும் கோதாவரி, 6 -ம் வகுப்பு படிக்கும் செல்வி, குருபிரசாத் ஆகியோர் கீழே விழுந்து மயக்கமடைந்தனர்.

    இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் 3 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு சிகிச்சை முடிந்து 3 பேரும் பத்திரமாக வீடு திரும்பினர்.

    • அரசு உதவி பெரும் பள்ளியான இந்த பள்ளியில் விடுதி உள்ளது.
    • உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அரசு உதவி பெறும் பிரபல பள்ளி செயல்பட்டு வருகிறது.

    அரசு உதவி பெரும் பள்ளியான இந்த பள்ளியில் விடுதியும் உள்ளது. அங்கு ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு தங்கி இருக்கும் மாணவர் ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த சத்துமாவை தானும் சாப்பிட்டு சக மாணவர்களுக்கும் கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் சத்து மாவை சாப்பிட்ட 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சத்து மாவுடன் தேங்காய் எண்ணையை கலந்து மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர். இந்த தேங்காய் எண்ணையில் பேன் எண்ணை கலந்திருந்ததே மயக்கத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

    வீட்டில் இருந்து சத்து மாவை வாங்கி வந்து சக மாணவர்களுக்கு கொடுத்த மாணவனின் தலையில் அதிகமாக பேன் இருந்துள்ளது. இதையடுத்து பேன் சாவதற்காக தேங்காய் எண்ணையில் பேன் எண்ணையை கலந்து பெற்றோர் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள்.

    இது தெரியாமல் மாணவன் அந்த எண்ணையை சத்து மாவில் கலந்து சாப்பிட்டதே மாணவவர்கள் மயக்கம் அடைய காரணமாக அமைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ×