search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Cour"

    • பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின்- ரேவந்த் ரெட்டி.
    • அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்?- உச்சநீதிமன்ற நீதிபதி.

    ஒரு முதல் மந்திரி இப்படி பேசலாமா? நீதித்துறையை மதிக்காவிடில் விசாரணையை வேறு எங்கேயாவது மாற்றுவோம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தள்ளார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் பாரத் ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு (சந்திரசேகர ராவ் மகள்) உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கவிதா திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    கவிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி "பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது'' எனக் கூறியிருந்தார்.

    இதற்கிடையே ரேவ்ந்த் ரெட்டி, கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது தெலுங்கானா சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை மத்திய பிரதேச மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.

    அப்போது, ரேவந்த் ரெட்டியின் கருத்து குறித்து நீதிபதி கவாய் கூறியதாவது:-

    ரேவந்த் ரெட்டி என்ன சொன்னார் என்பதை படித்து பார்த்தீர்களா? முதல்வரின் இத்தகைய அறிக்கைகள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அரசியல்சாசன பதவியில் இருக்கும் ஒருவர் கூறலாமா? அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நீதித்துறையை மதிக்காவிட்டால், விசாரணையை வேறு எங்காவது மாற்றுவோம். நாட்டில் உச்சபட்ச நீதிமன்றம் இதுதான்.

    இவ்வாறு நீதிபதி கவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    "நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது அறிக்கைக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது எனக்கு நிபந்தனையற்ற மரியாதையும் உயர்ந்த மரியாதையும் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்" என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×