search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20WC"

    • தன்சித் ஹாசன் 35 ரன்களை சேர்த்தார்.
    • ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் மற்றும் லிட்டன் தாஸ் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். துவக்க வீரராக களமிறங்கிய தன்சித் ஹாசன் 35 ரன்களையும், ஷகிப் அல் ஹாசன் 64 ரன்களையும் குவித்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை அடிக்க வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து சார்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் பிரிங்கில் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    160 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஒ தவுத் முறையே 18 மற்றும் 12 ரன்களையும் சேர்த்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் சைபிராண்ட் முறையே 26 மற்றும் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தன் பங்கிற்கு 25 ரன்களை சேர்த்தார்.

    போட்டி முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.
    • ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக அமெரிக்காவின் எய்சென்ஹோவர் பார்க்-இல் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானம் கட்டமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தின் பிட்ச் சரியாக இல்லை என கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த மைதானத்தின் பிட்ச்கள் வெளியே தயாரிக்கப்பட்டு, அவை மைதானத்திற்குள் பொருத்தப்பட்டன. கிட்டத்தட்ட தற்காலிகமாகவே இந்த மைதானம் உருவாக்கப்பட்டது.


     

    இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்று முடிந்த இந்தியா - அமெரிக்கா அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் முழுமையாக இடிக்கப்படுகிறது. இதற்காக மைதானத்தை சுற்றிலும் புல்டோசர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    மைதானம் மற்றும் பிட்ச்-ஐ உள்ளூர் பயன்பாட்டிற்காக விட்டுவைத்துவிட்டு, மைதானம் முழுமையாக இடிக்கப்பட இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் 75 நாட்களில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்கது. 

    ×