என் மலர்
நீங்கள் தேடியது "TASMAC"
- டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன.
- செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையானது வெற்றுக் காகிதம் போல் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்திற்கு பட்ஜெட்டுக்கு பதிலாக வெற்றுக் காகிதத்தை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கலாம். தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை நெருங்குகிறது.
தமிழ்நாட்டை விட குஜராத் உள் கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் கொடுக்க கூடி தமிழக அரசிடம் நிதி இல்லை.
1.62 லட்சம் கோடி கடன் வாங்குவது தான் முன்மாதிரி மாநிலமா ? மதுபான போக்குவரத்து தொடர்பாக ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் நடைபெற்றது போல தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாடலில் முறைகேடு நடந்திருந்தாலும் அங்கு நடைபெற்றதைவிட முறைகேடு அதிகம்.
டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன. செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு பதில் சொல்லும் வரை பாஜக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கும் வரை பாஜக போராட்டத்தை தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., பா.ஜ.க உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
- ஆயிரம் கோடி ஊழல் செய்த தி.மு.க அரசுக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, மதுபான முறைகேடு குறித்து சட்டசபையில் விவாதிக்கக்கோரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., பா.ஜ.க உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது :-
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஆயிரம் கோடி ஊழல் செய்த தி.மு.க அரசுக்கு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய தகுதி இல்லை.
தி.மு.க அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர் ஸ்டாலின், ரூபாய் இலட்சினை மாற்றி இருப்பதன் மூலம் அவர் பதவியேற்கும் போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது.
- மோசடியை மறைப்பதற்காகவே தமிழக அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.
சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதன்மூலம், டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.
இதுதொடர்பாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை," டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. சத்தீஸ்கர், டெல்லியில் நடைபெற்றதைவிட தமிழகத்தில் மிகப்பெரிய மோசடியாக இருக்கும்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு வரும் காலத்தில் பூதாகரமாக மாறும். செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது.
மோசடியை மறைப்பதற்காகவே தமிழக அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டாஸ்மாக் தொடர்புடைய போக்குவரத்து டெண்டரில் KYC, DD தரவுகள் ஒத்துப்போகவில்லை. பார் உரிமங்கள் பெறுவதற்கான டெண்டரில் GST, PAN நம்பர் இல்லை.
டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.
பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பாட்டிலுக்கு எம்ஆர்பி தொகையைவிட ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுபாட்டில்களை குடோனுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.100 கோடி முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மது ஆலை நிறுவனங்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ரூ.1000 கோடி முறைகேட்டில் மதுவுக்கான பாட்டில்களை தயாரிக்கும் ஆலைகளுக்கு முக்கிய பங்கு.
ஏலத்தில் காலக்கெடு முடிவதற்குள் டிடி வழங்காமலே சலுகை வழங்கியதும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை ஊதிப்பெருக்கி காண்பித்து, ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- கிராமமக்களின் போட்டி போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் நடவடிக்கை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா வரிக்குடியில் புதிதாக மதுபானக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமுளூர், வடக்கூர், கொங்கரான்வயல், கோணரியேந்தல் ஆகிய கிராம மக்கள் கடையை முற்றுகையிட திரண்டனர்.
அப்போது காவல்த்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பிறகு புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் அதே பகுதியின் அருகே செயல்பட்டு வரும் மற்றொரு மதுபானக்கடையை முற்றுகையிட்டு, கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கலால் உதவி மேலாளர் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் திறக்க வேண்டும் அல்லது 2 கடைகளையும் மூட வேண்டும் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 2 கடைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் திறக்க அனுமதி அளித்தனர். பின்னர் 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இந்த சம்பவம் க ாரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்
- உறையூர் மீன் மார்க்கெட் எதிரே
திருச்சி
திருச்சி குழுமணி ரோடு கோவிந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகராக இருக்கும் இவர் அப்பகுதி விவசாயிகளுடன் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி குழுமணி ரோடு லிங்கம் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த பகுதியில் குடிமகன்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை விவசாயத் தோட்டத்தில் வீசி செல்கின்றனர். இது நாளடைவில் மண்ணுக்கடியில் புதைந்து விடுகிறது. பின்னர் விவசாய கூலி தொழிலாளிகள் வேளாண் பணியில் ஈடுபடும்போது அந்த பாட்டில்கள் அவர்களின் கால்களை குத்தி கிழிக்கிறது. இது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் உறையூர் மீன் மார்க்கெட் எதிரே ஒரு புதிய டாஸ்மாக் மதுபான கடை திறப்பதாக கிடைத்தது. இதனைத் திறந்தால் மேலும் எங்கள் பகுதியை விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி ‘பார்’ நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதனைத்தொடர்ந்து பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக பார் செயல்படுவதாக தகவல் வந்தது. இது தொடர்பாக விசாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமை யிலான தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஜெய்ஹிந்த்புரம் டாஸ்மாக் கடைக்கு அருகில் சட்ட விரோதமாக பார் இயங்கி வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி பார் நடத்தியதாக பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 61), சோலையழகுபுரம், ராமமூர்த்தி நகர் பன்னீர்செல்வம் ( 49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய தினகரன் என்பவரை தேடி வருகின்றனர்.
- கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் அதிசயபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் அதிசயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தென்காசி:
வீர கேரளம் புதூர் அருகே உள்ள ராஜகோபால பேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அதிசயபுரம் கிராமத்தில் புதிதாக அரசு சார்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட இருப்பதாகவும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் அதிசயபுரம் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ கோவில்கள் உள்ளது எனவும் அதனை திறக்க அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறி தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் அதிசயபுரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இப்போராட்டத்தில் ராஜகோபால பேரி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணவேணி, இந்திய நாடார்கள் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் அகரக் கட்டு லூர்து நாடார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கிருபாகரன்,தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும்.
- சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும்.
சேலம்:
தமிழக முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மதுபானங்கள் விற்பனை ஆகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்கும். அதற்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக சரக்குகள் விற்பனைக்கு குவிக்கப்படும்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஆங்கில புத்தாண்டு முதல் நாளில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை அதிகரிக்கும். இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். வரும் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில புத்தாண்டு ஒட்டி மதுபானங்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதால் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 30 சதவீதம் மதுபானங்கள் குவிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கில புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வருகிறது .பொங்கல் பண்டிகையின் போது 3 நாட்கள் மதுபானங்கள் விற்பனை களைகட்டும். இதையொட்டியும் அதிக அளவில் டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.
- திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
- இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் கீழ விடயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 60) விவசாயி.
சம்பவத்தன்று இவர் திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
பின்னர் நடந்து வந்தபோது இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.
இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் மறுக்கவில்லை.
- டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
மதுரை:
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயித்து மது விற்பனையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்தவரையில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மது விற்பனைக்கு எதிராகவும், மதுக்கடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. இருப்பினும் மது விற்பனை அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது.
எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களை விற்கவும், வாங்கவும் லைசென்சு பெறுவது அவசியம் என வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் ஆஜராகி, டாஸ்மாக் விற்பனை நேரத்தை முன்பு இருந்ததை காட்டிலும் தற்போது 10 மணி நேரமாக குறைத்துள்ளோம். மது விற்பனையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கை பலகட்டங்களாக விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
பய உணர்வை ஏற்படுத்துவதற்காக சட்டரீதியான எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனால் இந்த எச்சரிக்கைகள் எல்லாம் மது அருந்தும் விஷயத்தில் மிக குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. குறிப்பாக 21 வயதுக்கு உள்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பது வருந்தத்தக்கது.
எனவே மது விற்பதையும், வாங்குவதையும் கட்டுப்படுத்தி, மது-போதை பழக்கத்தை குறைக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. மது விற்பனை மூலம் மாநில அரசு அதிக வருவாயை ஈட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனை கடைகள் பெருகி வருகின்றன. இதனால் தனிநபர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிக்கிறது.
பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், பெண்கள் என அனைவரும் மதுக்கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கு, உரிமம் வைத்திருப்பவர் மட்டுமே மது வாங்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி மதுபாட்டில்களின் லேபில்களில் உரிய விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். அதேபோல "மது அருந்துவது தீங்கு விளைவிக்கும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்" என்ற வாசகத்தை கொட்டை எழுத்தில் பெரிதாக அதில் பிரசுரிக்க வேண்டும்.
டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் மறுக்கவில்லை. இதனால் மது அருந்துதல் பெருமளவில் குறையவில்லை. மாணவர்களும், 21 வயதுக்குட்பட்ட நபர்கள் கூட மது அருந்துவதால், மாநிலத்தின் சமூக -பொருளாதார சூழல் கணிசமாக பாதித்து, அதன் விளைவாக, குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், சமூக கட்டமைப்பை உடைக்க வழிவகுக்கிறது என நாங்கள் கருதுகிறோம். இளம் தலைமுறையினர் மது அருந்துவது அவர்களுக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் நீண்ட காலத்துக்கு மிகதீங்கானது.
எனவே மதுவினால் ஏற்படும் துஷ்பிரயோகங்களை அடையாளம் கண்டு உடனடியாக அழிப்பது முக்கியம். மது ஒழிப்பை சமூக- பொருளாதார, பொது சுகாதார பிரச்சினையாக கருத வேண்டும். இதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளும் தேவைப்படுகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும்.
அரசாங்கத்தின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதை இந்த கோர்ட்டு மறந்து விடவில்லை. இருந்தபோதும் பொதுநலனை கருத்தில் கொண்டு கீழ்கண்ட பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கிறோம். அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்கவும், வாங்குவதற்கும் உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்குவது, மதுபாட்டில்களில் உரிய விதிமுறைகள் இடம் பெறச் செய்வது, புகார்களை தமிழில் பதிவு செய்வதற்கு மது பாட்டில் லேபிள்களை தமிழில் அச்சிடுதல், விலைப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களையும் அனைத்து வாடிக்கையாளர்களும் அறியும் வகையில் இடம் பெறச்செய்வது.
டாஸ்மாக் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வது, 21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்வது.
மேற்கண்டவற்றுடன் பொது நலன் கருதி, டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
- டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக தாசில்தாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உடன்பாடு ஏற்படாததால் பெண்கள் போராட்ட அறிவித்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அருகில் சமீபத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடத்தினர். ஆய்வுக்கு வந்த டாஸ்மாக் மேலாளரிடம் கடையை மூடக்கூடாது என மது பிரியர்கள் மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
மது கடைைய அகற்றுவது தொடர்பாக நேற்று உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. மாணவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். பேச்சு வார்த்தையின் போது தாசில்தார் கருப்பையா கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைமை தான் உள்ளது. உசிலம்பட்டி- தேனி ரோட்டில் நாடார் பள்ளி முன்பு டாஸ்மாக் கடை உள்ளது. எங்கள் பிள்ளைகளும் அங்கு தான் படிக்கிறார்கள். நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், மது கடைைய அகற்ற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர்.
எங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வேண்டாம். அப்புறப்படுத்த மறுத்தால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்வோம். எங்கள் ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஆகியவற்றை திருப்பி கொடுப்போம் என்றும், உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்றும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.