search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchendur sea"

    • பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று பவுர்ணமி தினத்தன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தங்கி அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவிட்டு, இன்று காலையில் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் நேற்று கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்காக இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன பாதையில் கூடுதலாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்துவருவதால் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் நகரில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் நகர் பகுதி மற்றும் நகரின் எல்லைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்தன. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் வழித் தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலை மையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
    • கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. அதேபோல் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியும் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கமாக கோவில் கடலானது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சுமார் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினம் என்பதால் இன்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப் பதிவரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.

    இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. மேலும் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது . இதனால் புனித நீராட வந்துள்ள ஏராளமான பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பதை பார்த்து பக்தர்கள் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.

    • விடுமுறை தினத்தால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்.

    கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது.

    மேலும், கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ×