search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Ministry of Education"

    • ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.
    • நெட் தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.

    அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.

    ஆனால் தேர்வு நடைபெற்ற அடுத்த நாளே திடீரென நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது.

    அதில், 'தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதிசெய்வதற்காக நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இந்த தேர்வு தொடர்பான முழுமையான விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சிப் படிப்புக்கான யுஜிசி நெட் மறுதேர்வுகளுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது.

    ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகள் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வு பேனா பேப்பர் கொண்டு எழுத்து முறையில் நடைபெற்ற நிலையில் தற்போது நடைபெறவுள்ள நெட் தேர்வு கம்ப்யூட்டர் முறையில் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கம்ப்யூட்டர் முறையில் நடைபெறும் NCET தேர்வு ஜூலை 10 ஆம் தேதியும் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.
    • நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்க கூடாது.

    தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எந்த ஒரு பயிற்சி மையமும் பட்டப்படிப்பை விட குறைவான தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது. பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது.

    மாணவர்களைச் சேர்ப்பதற்காக பயிற்சி நிறுவனங்கள் தவறான வாக்குறுதிகளை அளிக்கவோ, ரேங்க் அல்லது நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்கவோ கூடாது.

    பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், பயிற்சி மையத்தால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தொடர்பான எந்தவொரு தவறான விளம்பரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×