search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velumani"

    • இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.
    • கழக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்ளதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.

    சென்னை:

    அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை, உயர்மட்டப்பாலம் அமைக்கும் திட்டம் 2010 ஆம் ஆண்டு கலைஞரால் கருத்துரு உருவாக்கப்பட்டது.

    முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்த மனம் இல்லாமல், ஏழு ஆண்டுகாலம் காலதாமதத்திற்குப் பின் 2.4.2018 அன்று பாலப்பணி தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

    7.5.2021 அன்று, திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக ஆட்சிப் பொறுப்பேற்றபோது. 12 சதவீத பாலப்பணிகள் மட்டுமே முடிந்து இருந்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் அறிவுறுத்தினார்.

    என்னுடைய தொடர் நடவடிக்கையின் காரணமாக 88 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டது. இப்பாலப்பணிக்கு சுமார் ரூ.318 கோடி நிதி திராவிட மாடல் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்துள்ளது.

    சாலையைப் பயன்படுத்தக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காலவிரயத்தைத் தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சரால் 9.8.2024 அன்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    இந்த உயர்மட்டப்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. இது குறித்து நாளிதழ்கள் படத்துடனும் பாராட்டியுள்ளதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுமணி, உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை அளித்துள்ளார்.

    "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்ற முது மொழிக்கேற்ப, கழக ஆட்சியால் பல பணிகள் செய்யப்பட்டுள்ளதை பாராட்ட மனமில்லை என்றாலும், குறை சொல்லாமல் இருந்திருக்கலாம்.

    தற்போது, நடைபெற்று வரும் திருச்சி சாலை சுங்கம் பகுதியில், ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கும் பணி 31.8.2024க்குள் முடிக்கப்படும். இப்பணி விரைவில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.
    • எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.பி.வேலு மணி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்தி லிங்கத்தை சந்தித்து பேசி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த 12-ந் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல பலரும் திரண்டு சென்றார்கள். ஆனால் எஸ்.பி.வேலுமணி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வேலுமணி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அரசல் புரசலாக அ.தி.மு.க.வுக்குள் பேசப்பட்ட இந்த விவகாரம் தி.மு.க. அமைச்சரான ரகுபதி கொளுத்திப் போட்ட கருத்துக்கு பிறகு சூடு பிடித்தது.

    அவர் கூறும் போது, தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? வேலுமணியா? என்பது தெரிய வரும். பெரிய பிளவு ஏற்படும் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.

    சொன்னால் நம்புங்க..

    இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, சொன்னால் நம்புங்க நான் ஒரு போதும் அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த மாட்டேன் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.

    அதாவது எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல் செங்கோட்டையனும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார். ஆனால் என்னதான் நடக்குது பார்ப்போம் என்பது போல் தொண்டர்கள் பரிதாபமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    • சூலூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
    • எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார்.

    சூலூர்,

    சூலூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி முன்னிலை வகித்தார். சூலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் கார்த்திகை வேலன் வரவேற்றார்.

    அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநில தலைவர் மற்றும் பூத் கமிட்டி மேலிட பார்வையாளர் சேதுராமன் கல்நது கொண்டார். கூட்டத்தில் பங்கேற்க வந்த எஸ்.பி.வேலுமணிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் 10 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மாலை கிரேன் மூலம் அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

    அமைச்சர் உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் பெண்களு க்கான இட ஒதுக்கீடு குறித்து இப்போது தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு 50 சதவீதம் உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயல லிதா. அதன் மூலம் கோவை மாவட்ட ஊராட்சித் தலைவராக சாந்திமதி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது வரலாறு.

    தற்போதைய தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரப்பட வில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் அதிகமான திட்டங்கள் கோவை மாவட்டத்துக்கும், சூலூர் தொகுதிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது.

    நீட் பெயரை சொல்லி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவர் படிப்பில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக சாலைகள், பாலங்கள் கோவை மாவட்டத்துக்கு புதிதாக கொண்டுவரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் அத்திக்கடவு அவினாசி திட்டம் கொண்டு வரப்பட்டு 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் தற்போது 5 சதவீத பணியை முடிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

    சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என விலை வாசி கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. எனவே எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

    சூலூர் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் நன்றி கூறினார். கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல், வக்கீல் பிரிவு கந்தநாதன், சூலூர் நகர துணை செயலாளர் அங்கண்ணன், சூலூர் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அங்கமுத்து, கலங்கல் ஊராட்சி முன்னாள் தலைவர் நடராஜ், சண்முகம், மீனவரணி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், வக்கீல் பிரிவு பிரபு ராம், கண்ணம்பாளையம் வார்டு உறுப்பினர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் 39 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதிமுக ஆட்சியின்போது கிராமப் புறங்களில் உள்ள தெருவோர விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கின் கீழ் சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது முறையாக எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது.


    ×