search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Amritraj"

    • சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம்பெற்றனர்.
    • இதில் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் பெயர்கள் இடம்பிடித்தனர்.

    புதுடெல்லி:

    சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் டென்னிஸ் ஹால் ஆப் பேம் பட்டியல் இடம் பெறும்.

    இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 2024-ம் ஆண்டின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன.

    இதன்மூலம் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆப் பட்டியலில் இடம்பெற்ற ஆசிய டென்னிஸ் வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.

    விஜய் அமிர்தராஜ் 1970 முதல் 1993-ல் ஓய்வுபெறும் வரை விளையாடினார். 15 ஏடிபி ஒற்றையர் பட்டங்களையும், 399 போட்டிகளையும் வென்று உலகில் 18-வது இடத்தைப் பிடித்தார். மேலும் 1974 மற்றும் 1987 இல் டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றார்.

    லியாண்டர் பயஸ் டென்னிஸ் அரங்கில் ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவராக இந்திய முன்னாள் முன்னணி டென்னிஸ் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான விஜய் அமிர்தராஜ் தேர்வு செய்யப்பட்டார். #VijayAmritraj
    சென்னை:

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் 92-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் 2018 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்திய முன்னாள் முன்னணி டென்னிஸ் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான 64 வயது விஜய் அமிர்தராஜ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    துணைத் தலைவர்களாக ஏ.வெள்ளையன், கார்த்தி சிதம்பரம், விஜய் சங்கர், ஹரேஷ் ராமச்சந்திரன் ஆகியோரும், செயலாளராக பிரேம்குமார் கண்ணாவும், பொருளாளராக விவேக் ரெட்டியும், உறுப்பினர்களாக ஜாஸ்பர் கொர்னிலியஸ், எம்.சந்தர், ஷிவ்குமார் பழனி, கே.வித்யாசங்கர், டி.வி.சுப்பிரமணியம், முரளி பத்மநாபன், பி.வெங்கடசுப்பிரமணியம், கே.சுரேஷ், சாய் ஜெயலட்சுமி, அனுராதா ரவிசங்கர், ஜி.வைரவன், கே.மதுபாலன், மனோஜ் சந்தானி, டாக்டர் கே.ஷிவராம் செல்வகுமார் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விஜய் அமிர்தராஜ் அளித்த பேட்டியில், ‘2020-ம் ஆண்டுக்குள் ஆண்கள் அல்லது பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியை (ஏ.டி.பி. அல்லது டபிள்யூ.டி.ஏ) சென்னையில் நடத்துவதே எங்கள் இலக்காகும். அத்துடன் பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர்களை அழைத்து காட்சி ஆட்டம் நடத்துவதுடன், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    சென்னையில் டென்னிஸ் போட்டிக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. இங்குள்ளது போல் பிற மாவட்டங்களிலும் வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இளம் வீரர்களின் உடல் தகுதியை வளர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.  #VijayAmritraj
    ×