search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivian Balakrishnan"

    • பயண தேதி இன்னும் இறுதியாகவில்லை.
    • இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

    பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக விரைவில் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். இந்தியா-சிங்கப்பூா் அமைச்சா்கள் அளவிலான உயர்மட்ட சந்திப்பு கூட்டம் சிங்கப்பூரில் நடந்தது.

    இதில், இந்திய தரப்பில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வா்த்தகம்-தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ரெயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் கொண்ட குழு பங்கேற்றது.

    இக்கூட்டம் முடிந்தபிறகு சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் கூறும் போது, `அமைச்சா்களின் கூட்டம் ஆக்கபூா்வமானதாக இருந்தது. மேலும் பிரதமா் மோடியின் சிங்கப்பூா் பயணத்துக்கு களமாகவும் அமைந்தது. பிரதமர் மோடி விரைவில் சிங்கப்பூருக்கு வர உள்ளார். அவரது பயண தேதி இன்னும் இறுதியாகவில்லை.

    மேம்பட்ட உற்பத்தி, செமி-கண்டக்டா்கள், விமானப் போக்குவரத்து, கடல்வழி இணைப்பு ஆகிய புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதங்களைத் தொடங்கியுள்ளோம்.

    சுமாா் 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாடு இப்போது அதன் விமானப் போக்குவரத்து துறையில் ஒரு பெரிய மேம்படுத்தலைத் தொடங்கியுள்ளது. இச்சூழலில் இந்தியாவுடன் நாங்கள் ஒத்துழைப்பில் இருப்பது மிகவும் சிறந்தது' என்றார்.

    பிரதமர் மோடி யின் சிங்கப்பூர் பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அவரது பயணத்தில் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கபூர் தமிழ் மந்திரிக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் நன்றி தெரிவித்தார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
    சிங்கப்பூர்:

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

    சீனாவுக்கு பின்னர் வட கொரிய ஜனாதிபதியின் 2-வது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    இந்த மாநாடு வெற்றிகரமாக நிகழ சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வம்சாவளி தமிழரான விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் முக்கிய மந்திரியாக இருக்கிறார்.

    தமிழ் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவர் பாலகிருஷ்ணன். 57 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    2001-ம் ஆண்டு அரசியலில் நுழைந்து 2004-ம் ஆண்டில் இணை மந்திரியானார். தொடர்ந்து சுற்றுச் சூழல் மற்றும் நீர்வளத்துறை மந்திரியாகி 2015-ம் ஆண்டில் வெளிவிவகாரத்துறை மந்திரி ஆனார்.

    டிரம்ப் மற்றும் கிம் உடன் கணிசமான நேரத்தை செலவிட்ட ஒரே சிங்கப்பூர் தலைவர் இவராவார்.

    இரு நாட்டு தலைவர்களின் குழுவை இணைப்பதில் முக்கிய பங்காற்றிய பால கிருஷ்ணன், வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க சென்ற போது கிம்முடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.



    அத்துடன் டிரம்ப் சிங்கப்பூர் வந்திறங்கிய போது விமான நிலையம் சென்று டிரம்பை வரவேற்றதும் இவர்தான்.

    தொடர்ந்து இருநாட்டு தலைவர்களிடமும் மாநாட்டை பற்றி விவரித்துள்ளார். இதனை ஒருங்கிணைத்தற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் தனிப்பட்ட முறையில் பாலகிருஷ்ணனிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம்மு தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump
    ×