என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Water treatment plant"
- இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருக்கிறது.
- இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10 முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே சூரங்குடி கிராமத்தில் சிலோன் காலனி என்ற பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மக்கள் புகார்
இப்பகுதியானது கடற்கரை சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள நிலத்தடிநீர் பெரும்பாலும் அதிகளவு உப்பாக இருக்கிறது. எனவே இங்குள்ள மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் நீரையே நம்பியுள்ளனர்.
ஆனால் அவ்வாறு வழங்கப்படும் சீவலப்பேரி குடிநீ2ரும் மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக தங்களது அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1 குடம் தண்ணீர் ரூ.10முதல் ரூ.15 வரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
சுத்திகரிப்பு நிலையம்
இந்த சூழ்நிலையில் இம்மக்களின் நலன் கருதி கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 14-வது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பில் சிலோன் காலனியில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நிலையம் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மெத்தனப்போக்கினால் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் வேலிச்செடிகள், குப்பைகள் என புதர்மண்டி வெறும் காட்சிப்பொருளாக காட்சியளித்துக் கொண்டி ருக்கிறது.
எனவே சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருதோடு மட்டுமின்றி மாதத்திற்கு 2 முறை மட்டுமே விநியோகிக்கப்படும் சீவலப்பேரி கூட்டு குடிநீரையும் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்க கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது
- புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியுமான சாமி சத்தியமூர்த்தி தனது சொந்த செலவில் மாணவர்களின் நலன் கருதி ரூ.1.05 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும், புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியுமான சாமி சத்தியமூர்த்தி தனது சொந்த செலவில் மாணவர்களின் நலன் கருதி ரூ.1.05 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார். விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு சுத்திகரிப்பு எந்திரத்தை இயக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேலு, நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பாளர் சீனிவாசன், தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்