search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "withdrawal"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால்.
    • சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தடையை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் நீதிமன்றத்தில் தனது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் விஷயத்தில் அடுத்தடுத்து பரபரப்பான வகையில் காட்சிகள் மாறி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.  மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது.
    • ஏதும் பிரச்சினை நடந்ததாக எனக்கு தகவல் வரவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் தேதி, மாா்ச் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. மத்திய, மாநில அரசுகள் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவோ, அரசு சாா்பில் நிகழ்ச்சிகளை நடத்தவோ தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    வாக்கு எண்ணிக்கையின் போது, மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததாகவோ அல்லது வேறு காரணங்க ளுக்காகவோ, அரசியல் கட்சிகளிடம் இருந்து தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு புகாா்கள் எதுவும் வரவில்லை.

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது. ஏதும் பிரச்சினை நடந்ததாக எனக்கு தகவல் வரவில்லை.

    தோ்தல் முடிவுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து இந்திய தோ்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதை அனை வருமே பாா்க்க முடியும். மக்களவைத் தோ்தல் முடிவு களை இந்திய தலைமை தோ்தல் ஆணையா், டெல்லியில் ஜனாதிபதியிடம் வழங்குவாா். அதன் பின்னா் மத்தியில் புதிய அரசு ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும். தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந்தேதிவரை அமலில் இருக்கும். பின்னா் அது திரும்பப் பெறப்படும் .

    இவ்வாறு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

    • கருணாகரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர் ஆசிரியர் கருணாகரன் (வயது 32). இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், மாணவர்கள் சக ஆசிரியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆகியோர் உறுதியளித்தனர். தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆசிரியரை விடுவிக்க கோரி மனு கொடுக்க விழுப்புரம் சென்றனர். அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவிட்டார். மேலும், ஆசிரியரை விடுவிக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளி க்கு அனுப்பமாட்டோமென பெற்றோர்கள் கூறிவிட்டு அங்கிருந்து வந்தனர்.

    இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் தனித்தனியே ரகசிய விசாரணை நடத்தினார். இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். தவறான புகார் கொடுத்த பள்ளி ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து முன்கூட்டியே கல்வி துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கபடவில்லை என முறையான விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் புஷ்பராணி மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்த நிலையில் நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட 13 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுக்க சென்றனர். அவர்களிடம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோர் கூறியதாவது:-

    போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இனிமேல் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் தான் முடிவு தெரியும். நாங்கள் யாரும் அது பற்றி முடிவு செய்ய முடியாது. கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து கல்வி கற்க செய்யுங்கள் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த அவர்கள், கிராம பஞ்சாயத்தார் மற்றும் மற்ற பெற்றோர்களுடன் கலந்தாலோசித்தனர். இதில் வரும் 4-ந் தேதி திங்கட்கிழமையில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதென முடிவு செய்தனர். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது பா ர்த்துக் கொள்ளலாமெனவும் முடிவெடுத்தனர். இந்த முடிவினை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாக்கூர் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக நடந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

    • மே 10 அன்று 'ரூபாய் 2000' நோட்டுக்களை திரும்ப பெற்று கொள்வதாக ஆர்.பி.ஐ. அறிவித்தது
    • 93 சதவீத நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதாக செப்டம்பர் 1 அன்று ஆர்.பி.ஐ. அறிவித்தது

    பல்வேறு காரணங்களால் மத்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் புழக்கத்தில் இருந்த '500 ரூபாய்' மற்றும் '1000 ரூபாய்' நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட 2016 நவம்பர் மாதமே, மத்திய ரிசர்வ் வங்கியால் '2000 ரூபாய்' நோட்டுக்கள் புதியதாக புழக்கத்தில் விடப்பட்டன. அந்த புதிய நோட்டுக்களை அச்சிடும் பணியும் 2018-19 காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், புழக்கத்தில் உள்ள '2000 ரூபாய்' நோட்டுக்களை திரும்ப பெற்று கொள்ள போவதாக கடந்த மே 10 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்கு இறுதி நாளாக செப்டம்பர் 30 வரை காலக்கெடு வைத்திருந்தது.

    இதனையடுத்து, இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் அனைவரும் வங்கிகளில் இதனை செலுத்தி ஈடாக வேறு மதிப்பில் ரூபாய் நோட்டுக்களை பெற்று கொள்ள தொடங்கினர். சுமார் 4 மாதத்திற்கும் மேலாக கால அவகாசம் இருந்ததால் வங்கிகளில் முண்டியடித்து கொள்ளாமல் மக்கள் அன்றாட வங்கி அலுவல்களிலேயே இந்த பரிமாற்றத்திற்கு ஒத்துழைத்தனர்.

    நாட்டில் இருந்த 93 சதவித '2000 ரூபாய்' நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதாக மத்திய ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 1 அன்று அறிவித்தது.

    இந்நிலையில், இன்றுடன் காலக்கெடு நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த காலக்கெடுவை சற்று நீட்டித்து மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி, வரும் அக்டோபர் 7 வரை '2000 ரூபாய்' நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளவோ அல்லது தங்களது வங்கி கணக்கில் செலுத்தவோ அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7-க்கு பிறகும் கூட மத்திய ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஆர்.பி.ஐ. விதித்த இந்த 'ரூபாய் நோட்டு தடை'க்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொது நல மனு, கடந்த ஜூலை 3 அன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர்.
    • மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத் தின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும், சிங்கள கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    சில வாரங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், படகுகளை இலங்கை அரசு அந்த நாட்டுடமையாக்கி விடுகிறது. இதனால் படகுகளை பறிகொடுக்கும் மீனவர்கள் வேறு வழியின்றி மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

    இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் 5 ஆயி ரம் மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து பாதிப்புக்குள்ளாகினர். மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

    இதனைதொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இலங்கை கடற்படையின் அச்சமின்றி மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
    • சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் சாலை மறியல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வருவாய் வட்டாட்சியர் ராமசாமி, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகநாதன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் பொன்னுசாமி சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டுள்ள 3 டாக்டர்களில் ஒருவர் மகப்பேறு விடுதியில் இருக்கிறார். மற்ற டாக்டர்களை உடனடியாக பணியில் சேர அறிவுறுத்துவது, மாற்றுப் பணிகளில் கூடுதல் டாக்டர்களை நியமிப்பது, வருகிற 23-ம் தேதி முதல் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க செய்வது, மேலும் 2 டாக்டர்களை நியமிக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்புவது, டயாலிசிஸ் எக்ஸ்ரே போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுப்பது, வாரம் ஒரு முறை மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராமு உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெருவதாக எம்.எல்.ஏ. சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
    • தமிழக அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

    சிவகங்கை

    தமிழக அரசால் கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தினை திரும்ப பெறக் கோரி சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் மாவட்ட கவுரவத்தலைவர் ஆதிமூலம் தலைமையில், விவசாயிகள் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு 100 ஏக்கர் தொடர்ச்சி யாக பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பொது பயன் பாட்டில் உள்ள நிலங்கள், குளம், கண்மாய், நீர்வழிப் பாதைகள், வழிபாடு தலங்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மேலும் தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் திடீர் வாபஸ் பெறப்பட்டது
    • பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு

    திருச்சி,

    சாலை பணியாளர்களை தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரிகளை கண்டித்தும், சாலை பணிகள் மேற்கொள்வதற்குரிய கருவி, தளவாடங்கள், காலணி, மழைக்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரியும்தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் திருச்சி துறையூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சாலை பணியாளர்களை திட்டிய சாலை ஆய்வாளர் உள்ளிட்டவர்களிடம் கோட்டப்பொறியாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உதவி கோட்ட பொறியாளர் வாயிலாக பரிந்துரை செய்வது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    • கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட போவதாக் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட தலைந கரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே மாநிலத் தலைவர் ஜெயசந்திரனை தாக்கியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்த னர். இதையடுத்து நியாய விலைக்கடை பணியா ளர்கள் தங்கள் போராட் டத்தை வாபஸ் பெற்றனர்.

    சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கணே சன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில பொருளா ளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை தொடர்ந்து மாநில துணைத்தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடராக கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்று மாலைக்குள் கைது செய்வதாக உறுதி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது. நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • மதுக்கூர் முக்கூட்டு சாலையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்திருந்தனர்.
    • பொதுமக்களுக்கு அந்த பாதையை சாலையாக அமைத்து தருவது என்று உறுதி கூறியதையொட்டி சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே புலவஞ்சி கிராமத்தில் அரசுக்கு ெசாந்தமான தரிசு பாதை நிலம் தனி நபரால் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இது பற்றி காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி போஸ் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தையும், வருவாய் துறையின் மெத்தனப் போக்கையும் கண்டித்து காவிப்புலிப்படை சார்பில் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் சாலை மறியல் செய்ய முடிவு செய்திருந்தனர்.

    இதுகுறித்த செய்தி ஏற்கனவே மாலைமலரில் வெளியாகி இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போஸ், அரசு தரிசு நிலத்தை அடைத்திருந்த தனிநபர் இன்ஸ்பெக்டர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரசு தரிசு நிலத்தை அடைத்த பாதையை திறந்து விட வேண்டும், பொதுமக்களுக்கு அந்த பாதையை சாலையாக அமைத்து தருவது என்று உறுதி கூறியதையொட்டி சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • பெரியபட்டினத்தில் வீடுகளை காலி செய்ய பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
    • யூனியன் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கமிஷனர் ராஜேந்திரன் வரவேற்றார். அலுவலக உதவியாளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணைத் தலைவர் சிவலிங்கம்: மாயாகுளத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. அதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தில் 100 நாட்கள் பணியாளர்களை வைத்து கூட்டம் நடத்துகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

    பைரோஸ்கான்: பெரியபட்டினம் ஊராட்சியில் ஜலாலியா நகர், தங்கையா நகர் ஆகிய பகுதிகளில் 2011-ம் ஆண்டு 80 பேருக்கு அரசு இலவச பட்டா வழங்கி உள்ளது.இந்த இடத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த மக்களை வீடுகளை விட்டு காலி செய்யுமாறு ஊராட்சி தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

    கமிஷனர்: இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி: காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கழுநீர்ஓடை, அலை வாய்க் கரைவாடி, ஸ்ரீநகர், கோகுலம் நகர், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வருவதில்லை. அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கலாராணி: இந்த யூனியன் கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கோரிக்கையை யாரும் முழுமையாக கேட்பதி ல்லை. எங்களின் குரலை கேட்டால்தான் மக்களின் குரலை நிவர்த்தி செய்ய இயலும். அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருமுருகன்: ஆலங்குளம் கண்மாயில் அடர்ந்து வளர்ந்த கருவேல் மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மழைக்காலங்களில் நீரை தேக்க வழி இல்லாமல் உள்ளது. ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

    சுமதி ஜெயக்குமார்: முத்து ப்பேட்டை ஊராட்சியில் ஏராளமானோருக்கு டெங்கு நோய் பாதிப்பின் அறிகுறி உள்ளது. கொசு மருந்து அடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரியபட்டினம் கவுன்சிலர் பைரோஸ் கான்: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூ. 2,883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பி.டி.ஓ. கணேஷ் பாபு நன்றி கூறினார்.

    • புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு நேற்றும், இன்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படவில்லை
    • கோட்டைப்பட்டினத்தில் இருந்து தினமும் கடலுக்கு செல்லும் 300 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு விசைபடகுக்கு மாதம் 1,800 லிட்டர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த டீசல் பற்றாக்குறையாகவே இருந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சராசரியாக ஒரு விசைப் படகுக்கு மாதம் 3,200 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. 12 முறை கடலுக்கு செல்வதால் அரசு வழங்கும் மானிய விலையிலான டீசல் பற்றாக்குறையாக இருப்பதால் வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து டீசல் வாங்கும் நிலைக்கு விசைப்படகு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே குறைந்தது ஒரு விசைப்படகுக்கு மாதம் 3 ஆயிரம் டீசலாவது மானிய விலையில் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கு நேற்றும், இன்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படவில்லை.

    அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று புகார் தெரிவித்துள்ள விசைப்படகு மீனவர் கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து தினமும் கடலுக்கு செல்லும் 300 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங் கப்பட்டதால் ஸ்டிரைக் வாபஸ் ஆனது.

    ×