search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yawn"

    • ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
    • அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை மூட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஜென்னா சினாட்ரா என்ற 21 வயது இளம்பெண் அந்த வீடியோவில் தனக்கு நேர்ந்த வேதனையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரது தாடை திறந்த நிலையில் இருப்பதும், அதற்காக அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொண்டதை பற்றி விளக்கும் காட்சிகளும் உள்ளது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது எப்படி நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை. கொட்டாவியின் தீவிரம் காரணமாக எனது தாடை அப்படியே பிடித்துக்கொண்டது. இதனால் என்னால் வாய் பேச முடியாமல் தவிப்பிற்குள்ளானேன். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை நாடினேன். பின்னர் எக்ஸ்ரே எடுத்து உரிய சிகிச்சைகளை அளித்தனர். அதன் பிறகு தான் சரியானது என அவர் கூறி உள்ளார்.


    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பிரேயரில் ‘கொட்டாவி’ விட்டதற்காக மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    குழந்தைகள் தங்களது பெற்றோர்களையும் தாண்டி அதிக நேரம் பள்ளி ஆசிரியர்களுடனே இருக்கிறார்கள். குழந்தைகள் அவர்களது குழந்தை தன்மையை இழந்தால் மட்டுமே பள்ளிகளில் படிக்க முடியும் என்கிற சூழ்நிலையை தற்போதைய தனியார் பள்ளிகள் உருவாக்கி விட்டன.

    அந்த நிலை தான் சரியானது எனும் மாய பிம்பைத்தை பெற்றோர்களிடமும் ஏற்படுத்திவிட்டன. குழந்தைகளை அவர்களின் இயல்பான குணங்களை விடுத்து, புத்தகம் கற்கும் கணினிகளாக பள்ளிகள் வளர்க்கின்றன. அதனை மீறும் குழந்தைகள் கடுமையாக தாக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.

    அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலம் தானேவில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் காலை பிரேயரின் போது 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கொட்டாவி விட்டதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அவரை அடித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை அந்த தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, ஆசிரியர்களை மதிக்காமல் செயல்பட்டால் தண்டனை அளிக்கப்படும் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை, நயாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த தலைமை ஆசிரியை மாணவர்களை மிரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தனது புகார் மனுவில் சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளி ஆசிரியை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×