search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advises on"

    • பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
    • கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராய ன்பாளையத்தில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீரை ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. அளவிற்கு குழாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நீரேற்று திட்டம் தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம்.

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 1756 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் 106 கிமீ தொலைவிற்கு குழாய் அமைத்து 3 மாவட்டங்களில் உள்ள 1045 குளம் குட்டைகளை நிரப்பும் வகையில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த திட்டத்திற்காக 6 இடங்களில் நீரேற்று நிலையங்களும. அமைக்கப்பட்டன. பணிகள் 98 சதவீதம் முடிந்துள்ள நிலையில், நீரேற்று நிலையங்களில் ராட்சத மின் மோட்டார்களை இயக்கி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு செல்லும் சோதனை ஓட்டத்தை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டார்.

    ×