என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "almsgiving"

    • மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் எஸ்.செந்தில்ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • மதியம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் சந்திரகி ரகணத்தையொட்டிவருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 வரை நடைஅடைக்கப்படும்.

    சந்திரகிரகணம் மாலை 2.39க்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைவதால் நடை சாற்றப்படுகிறது. பின்னர் இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    அதே நேரத்தில் இந்த கோவிலில் மதியம் நடைபெறும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் வழக்கம் போல் பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது
    • கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 14 -வது மாத அன்னதான நிகழ்ச்சி இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சண்முகவேல் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர கூட்டுறவு இயக்குநர் லவராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் அரியமூர்த்தி, மற்றும் மந்திரசூடாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி ெதாடங்கி வைத்தார்.

    அன்னதானத்தை அறக்கட்டளை நிறுவனரும் தொழிலதிபருமான சீனிவாசன் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், கதிரேசன், மாரிமுத்து, தங்கராஜ், செல்வம், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், காளிராஜ், முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பாண்டியன் அறக்கட்டளை சார்பாக தமது நன்றி கூறினார்.

    • சிவானந்தா ஆசிரமத்தில் அன்னதானம் நடந்தது.
    • சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகையை முன்னிட்டு நடந்தது.

    ராஜபாளையம்

    சித்த சமாஜ ஸ்தாபகர் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகையை முன்னிட்டு ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அய்யனார் கோவிலில் அருகே உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் மகா அன்னதானம் நடந்தது.

    ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சித்தவித்தியார்த்திகள் கலந்து கொண்டு சுவாமி சிவானந்த பரமஹம்சரின் அருளுரைகளை எடுத்துக் கூறினர்.

    விழா ஏற்பாடுகளை கார்த்திகை விழா கமிட்டி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வள்ளலார் 200-வது விழா முன்னிட்டு நடந்தது
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டமன்ற மான்யக் கோரிக்கையில் அறிவித்த வள்ளலாரின் தொடர் அன்னதான திட்டத்தை நேற்று 14-ம்தேதி திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கொண்டு தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் உதவி கலக்டர் பிரசாத்சிங், பயிற்சி கலக்டர் ரிஷப்ராணி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போளூர் வட்டாட்சியர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோ கநாதன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வள்ளலாரின் திருஅருட்பா பக்தி பாடல்களை பாடினர்.

    தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். கோவில் சார்பில் தர்மேஸ்வர சிவாச்சாரியார் பிரசாதங்கள் வழங்கினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மு ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன் கணக்காளர் சீனிவாசன் உள்பட கோவில் அலுவலர்கள் செய்து இருந்தனர்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்திருந்தார்.
    • தொடர்ந்து அந்தப்பகுதியில் பொது மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் அ.தி.மு.க. நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் இன்று அனுசரிக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செய லாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து அந்தப்பகுதியில் பொது மக்கள் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், ஜெ பேரவை மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், கூட்டுறவு சங்க தலைவர் வேல்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மாயி, துணைச்செயலாளர் செல்வ குமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தி னம், பொன்.முருகன், பாலா, எம்.ஆர்.குமார், என். எஸ். பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலம் நடந்தது.
    • வீட்டு வாசலில் அனைவரும் வண்ண கோலமிட்டு விளக்கேற்றி வரவேற்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி கிராமத்தில் தர்மா சாஸ்தா பெரும்பாதை ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் 15 ஆம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு தெய்வத்திரு குருசாமிக்கள் கலியமூர்த்தி, சாத்தையன் ஆகியோரின் அருளால் ஐயப்ப சாமியின் மண்டல பூஜை திருவிழா மற்றும் ஐயப்ப ரத ஊர்வலமும் சிறுமிகளின் அகல் விளக்கு ஊர்வலமும் நடைபெற்றது.

    முத்து மாரியம்மன் கோயிலில் கணபதி ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    நேற்று மாலை புலவஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோயில் வரை ஐயப்பன் ரத ஊர்வலம் சென்றடைந்தது.

    பின்னர் ஸ்ரீ காமன் கோவில்களில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பிள்ளையார் கோவில் வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் அகல் விளக்கு ஊர்வலம் நடந்தது.

    இதனை அடுத்து அவர் அவர் வீட்டு வாசலில் அனைவரும் கோலமிட்டு விளக்கு ஏற்றி வரவேற்றனர். இந்த விழாவினை அடுத்து மெய்யன்பர்களும் ஐயப்ப பக்தர்களும் கிராம வாசிகளும் கலந்து கொண்டு அய்யன் அருள் பெற்றனர்.

    மேலும் குருசாமி முருகையன் சுவாமி ஐயப்ப பக்தர்களும் மற்றும் புலவஞ்சி கிராமவாசிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அய்யப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
    • விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

     பொன்னமராவதி அருகே உள்ள மேலச்சிவபுரியில் ஸ்ரீ சுவாமிநாத ஐயப்ப பக்தர்கள் அங்கு உள்ள சுவாமிநாத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். அதனை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தங்களது பயணத்தை தொடங்குவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக சபரிமலை பயணத்தை பக்தர்கள் தொடரவில்லை. தற்பொழுது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து செந்தில்குமார், சின்னையா குருசாமி தலைமையில் சரண கோஷம் முழங்க இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்களது புனித பயணத்தை தொடங்கியுள்ளனர். அதனை முன்னிட்டு அங்கு நடைபெற்ற அன்னதான விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை தெற்கு பள்ளியமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் முதல் கால யாகபூஜை ஆரம்பிக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜை, ஹோமாதா பூஜை, கிராம யஜமான சங்கல்பம், ரக்க்ஷனபந்தனம் நடைபெற்று மாலை பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாக பூஜைகள் மற்றும் தீபாராதனை தொடங்கி யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று மகாசிவராத்திரி விழா சிவாலயங்களில் நடைபெறுகிறது.
    • கும்பகோணம் பகுதியில் உள்ள 14 முக்கிய சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

    கும்பகோணம்:

    ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய் பிறை திரயோதசி பிரதோஷம் நாளில் மகாசிவராத்திரி விழா சிவாலயங்களில் நடைபெறுகிறது.

    அந்த வகையில் இன்று மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.

    திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் சுவாமி, செஞ்சடையப்பர் கோவில், கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி, திருமங்கலக்குடி பிராண நாதசுவாமி, சூரியனார் கோவில் சிவ சூரியபெருமான் காசி விஸ்வநாதர், சோழபுரம் கைலாசநாதர், திருலோக்கி கைலாசநாதர் உள்பட 14 முக்கிய சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது.

     இதையொட்டி இன்று இரவு அர்த்தஜாம பூஜை முதல் மறுநாள் 19ந் தேதி அதிகாலை 5 மணி வரை 4 காலம் சிறப்பு ஹோமம், மகா அபிஷேக ஆராதனைகள், வேதபாராயணம் திருமுறை பாராயணம், நாதஸ்வர மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெறுகிறது.

    அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி தஞ்சை மேம்பாலம் அரசினர் காது கேளாதோர் பள்ளியில் அ.ம.மு.க சார்பில் துணை பொது செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன் முன்னிலையில் காலை உணவு வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, கல்லுக்குளம் ஓசோனம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர், நாஞ்சிக்கோட்டை ஈ.பி.காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து ரெயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் மாவட்ட அவை தலைவர் விருதாச்சலம், அம்மா பேரவை செயலாளர் ராமதாஸ், வர்த்தக அணி முரளி, பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு (எ) வேலாயுதம், செயற்குழு உறுப்பினர் கீதா சேகர், வக்கீல் செந்தில், பூக்கடை பகுதி செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகர மாவட்ட அ.ம.மு.க.வினர் செய்திருந்தினர்.

    • தென்கரை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராம வைகைக்கரையில் அமைந்துள்ள ஆதிகாலத்து உச்சி மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் ேகாவில் நாகேசுவரசிவம், செந்தில் ஆகியோர் தலைமையில் யாகபூஜை நடந்தது. மேளதாளத்துடன் புனித நீர் குடங்கள் எடுத்து கோவிலை வலம் வந்தனர். மகா கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×