search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amanthullah Khan"

    • நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்.
    • அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    புதுடெல்லியின் ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆம் ஆத்மி கட்சி அமானதுல்லாகான் உள்ளார். இவர் டெல்லி வக்பு வாரியத்தின் தலைவ ராக இருந்த போது சட்ட விரோதமாக ஆள் சேர்ப்பு செய்ததாகவும், ரூ.100 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தாகவும் புகார் எழுந்தது.

    இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக ஓக்லாவில் உள்ள அமானதுல்லாகான் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு டெல்லி போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவரது வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய தாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அமானதுல்லாகான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க. அரசு தன்னையும், மற்ற ஆம் ஆத்மி தலைவர்களையும் குறி வைப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று காலை சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில், அவரது கைப்பாவை யான அமலாகத்துறையினர் என் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக போலி வழக்குகளை பதிவு செய்து அமலாகத்துறை துன்புறுத்துகிறது. அமலாக்கத்துறை எனக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கும் சில பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இப்போது தேடல் வாரண்ட் என்ற பெயரில் என்னை கைது செய்ய அமலாகத்துறை எனது வீட்டிற்கு வந்துள்ளது.

    மக்களுக்கு நேர்மையான சேவை செய்வது குற்றமா? இந்த சர்வாதிகாரம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

    என் மாமியார் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்கள் என்னை கைது செய்து எங்கள் வேலையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்களை சிறைக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் இந்த முறையும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறினார்.

    இதற்கிடையே அமானதுல்லாகானின் வீட்டு முன்பு ஆம் ஆத்மி தலைவர்கள் திரண்டனர். அவர்கள் கூறுகையில், அமானதுல்லாகானை கைது செய்ய முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.கட்சியின் அரசியல் பழிவாங்கல் காரணமாக அமான துல்லாகான் குறி வைக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அமானதுல்லாகான் வீட்டில் சோதனை நடத்திய அதே நேரத்தில் அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தினர். சுமார் 6 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    ×