search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati dam water level rises"

    • இடைவிடாமல் பெய்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.
    • நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 4 மணி முதல் தூரலுடன் மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    இரவு 9 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப ட்டது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    இடைவிடாமல் பெய்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதன் காரணமாக மாநகர் பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

    திருப்பூர் மற்றும் கோவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


    திருப்பூர் ஆண்டி பாளையம்-கல்லூரி சாலை பகுதிகளை இணை க்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

    இதனைத்தொடர்ந்து தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு போலீசார் தடுப்புகள் அமைத்து பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கடந்த ஒரு வாரமாக அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு சீரடைவதுமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக தொடர் மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று 3-வது நாளாக தடை நீடிக்கிறது.

    இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து திரும்பி செல்கின்றனர்.

    உடுமலை அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மறையூா், காந்த லூா், கோவில்கடவு உள்ளி ட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் ஓரிரு நாள்களில் அணை மீண்டும் நிரம்பும் என்று எதிா்பார்க்கப்படுவதாக பொது பணித்துறையினா் தெரிவித்துள்ளனா்.

    90 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை 6 மணி நில வரப்படி நீா்மட்டம் 81.17 அடியாக உள்ளது. அணைக்கு 1266 கனஅடி நீா்வரத்து உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

    திருப்பூர் வடக்கு-25, கலெக்டர் முகாம் அலுவலகம்-55, திருப்பூர் தெற்கு-36, கலெக்டர் அலுவலகம்-30, அவி னாசி-40, ஊத்துக்குளி-59, பல்லடம்-17, தாராபுரம்-19, மூலனூர்-37, குண்டடம்-37, உப்பாறு அணை-50, நல்லதங்காள் ஓடை-25, காங்கயம்-54, வெள்ள கோவில் ஆர்.ஐ. அலுவலகம்-47, வட்டமலை கரை ஓடை அணை-56.40, உடு மலை-5, அமராவதி அணை-6, திருமூர்த்தி அணை-5, திருமூர்த்தி அணை ஐ.பி.,-4, மடத்துக்குளம்-5. மாவட்டம் முழுவதும் 612.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது
    • பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது அமராவதி அணை. மொத்தம் 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் இருந்து திருப்பூர் , கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் குடிநீர் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்தது. அக்டோபர், நவம்பர் மாதம் துவங்கும் வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்ததால் அணை முழு கொள்ளளவை அடைந்து பாசன வசதிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பி இருந்தனர்.

    அக்டோபர் மாதம் ஓரளவு மழை பெய்த போதும் நவம்பர் மாதம் துவக்கத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரலுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்து வந்தது. இதே போல கொடைக்கானல் பகுதியிலும், கேரளப்பகுதிகளிலும், சின்னாறு ,பாம்பாறு, கூட்டாறு ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளிலும் நீடிக்க துவங்கியதால் அணை நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியது.

    கடந்த 10-ந்தேதி அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 1400 கன அடியாக அதிகரித்து இருந்ததை தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர துவங்கியது. தொடர் மழை காரணமாக 11-ந் தேதி அணை நீர்மட்டம் 71 .23 அடியாகவும், 12ந் தேதி அணை நீர்மட்டம் 72.88 அடியாகவும், 13ந் தேதி 73. 33 அடியாகவும், 14-ந் தேதி 74 .12 அடியாகவும் உயர்ந்தது.

    இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் அணை வேகமாக தனது முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழியும் என பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உடுமலை , மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது சாரலுடன் மழை நீடிப்பதால் தென்னை, மக்காச்சோளம் ,கரும்பு, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×