என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "An old man who set himself"
- மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார்.
- பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (65). மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.
இந்த நிலையில் கோவிந்தராஜ் கடந்த வாரம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதையடுத்து அவர் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பணம் தர மறுதது வட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திடீரென மண் எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்குசேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்