search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjaamai"

    • கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

    1.ஆடு ஜீவிதம்

    மலையாள முன்னணி நடிகர்களுல் ஒருவர் பிரித்விராஜ். இவர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் பிளெசி இயக்கினார். இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலும் ஆடு ஜீவிதம் என்ற நாவலை தழுவி இயக்கப்பட்டதாகும். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதுவரை 160 கோடி உலகளவில் இத்திரைப்படம் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டுவருடம் ஒருவன் பாலை வந்த்தில் அடிமையாக வாழ்ந்து அங்கு இருந்து அவன் தப்பித்தானா இல்லையா என்பதே இப்படத்தின் கதைக்களமாகும். இப்படம் தற்பொழுது பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ்- இல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

    2. அஞ்சாமை

    நீட் தேர்வினால் நடுத்தர குடும்பமும், மாணவர்களும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்ற கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படம் அஞ்சாமை. இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் இன்று சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    3. ரயில்

    பாஸ்கர் சக்தி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ரயில், வட மாநிலத்தவர் புலம் பெயர்ந்து பிழைப்பிற்காக தமிழ் நாட்டிற்கு வருவதையும், அவர்கள் படும் கஷ்டத்தையும் இதனால் தமிழனின் மனப்பான்மை அவர்களின் மீது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், சிந்திக்கும் வகையில் இயக்கி இருக்கிறார். இப்படம் இன்று டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    4. லாந்தர்

    விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம் சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    5. தி அக்காலி

    முகமத் ஆசிஃப் ஹமீத் இயக்கத்தில் நாசர், தலைவாசல் விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா, ஜெயகுமார் ஜானகிராமன் நடிப்பில் வெளிவந்த தி அக்காலி திரைப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    6. காடுவெட்டி

    ஆர்கே சுரேஷ் நடிப்பில் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியானது காடுவெட்டி திரைப்படம். இப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் இல் வெளியாகியுள்ளது.


     



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஓமை கடவுளே...', 'லாக்கப்', 'மலேசியா டூ அம்னீசியா', 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு', 'லவ்' போன்ற படங்களில் நடித்தவர், வாணி போஜன்.
    • 50 வயது தாண்டியும் நான் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை.

    ஓமை கடவுளே...', 'லாக்கப்', 'மலேசியா டூ அம்னீசியா', 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு', 'லவ்' போன்ற படங்களில் நடித்தவர், வாணி போஜன். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

    இந்தநிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாணி போஜன் பேசும்போது, "என்னிடமே சிலர், 'என்னங்க... 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கிறீங்களே...' என்றெல்லாம் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் தயக்கப்பட்டிருந்தால், ஒரு நடிகையாக நான் இருப்பதற்கு அர்த்தமே இல்லை.

    50 வயது தாண்டியும் நான் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. என்னை பொறுத்தவரை நடிகைகளுக்கு தயக்கம் தேவையில்லை. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கும் துணிச்சலே தேவை. அதுதான் நம்மை பேச வைக்கும்.

    ஒரு படம் நடிப்பது என்பதே பலருக்கு பெரும் கனவு. அதேவேளை எடுத்த படத்தை ரிலீஸ் செய்வது என்பதும் கஷ்டம். நாங்களெல்லாம் நடிப்போம், சம்பாதிப்போம். அடுத்தடுத்த படங்கள் நோக்கி போய்க்கொண்டே இருப்போம். ஆனால் உயிரை கொடுத்து படத்தை எடுக்கும் இயக்குனர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்.

    படம் நன்றாக ஓடுமா, ஓடாதா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நடிக்கும் ஒவ்வொரு படத்தை விரும்பி, ரசித்து நடிக்கிறேன்'' என்று கூறினார்.

    வாணி போஜன் தற்பொழுது விதார்த்துடன் இணைந்து எஸ்.பி சுப்புராமன் இயக்கத்தில் அஞ்சாமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். நீட் கொடுமையையும் அதனால் மாணவர்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசக்கூடிய படமாக இது உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
    • எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம் சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. படம் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அதனால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும், இதனால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கிறது, அரசு மாணவர்களின் நிலமை மற்றும் எப்படி கல்வி வியாபாரமாக ஆகியுள்ளது போன்ற சமூக பிரச்சனையை பேசக் கூடிய காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.

    படத்தின் அறிவிப்பு தேதி தற்பொழுது வெளியாகியுள்ளது. படம் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
    • இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம் சுதர்சன் மேற்கொண்டுள்ளார்.

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம் சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

    இந்நிலையில் தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படம் நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், அதனால் ஏற்படும் தற்கொலைகள் பற்றியும், இதனால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கிறது, அரசு மாணவர்களின் நிலமை மற்றும் எப்படி கல்வி வியாபாரமாக ஆகியுள்ளது போன்ற சமூக பிரச்சனையை பேசக் கூடிய காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.

    படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டுள்ளது.
    • எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    அஞ்சாமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விதார்த், வாணி போஜன் குழந்தைகளுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படமும், இவர்களின் பின்னணியில் நீட் கொடுமையை எடுத்துரைக்கும் செய்தி அடங்கிய செய்தி தாள் தீயில் எரியும் படமும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம்சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

    இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் நீட் பரிச்சையின் மூலம் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். தற்பொழுது சூழ்நிலையில் கல்வி எப்படி வியாபாரமாக்கப் படுகிறது என்பதை மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படமாகும் என இயக்குனர் எஸ்.பி சுப்புராமன் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஞ்சாமை படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தில் விதார்த், வாணி போஜன் நடித்துள்ளனர்.

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு "அஞ்சாமை" என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்.பி. சுப்புராமன் இயக்கும் இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    அஞ்சாமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விதார்த், வாணி போஜன் குழந்தைகளுடன் அமர்ந்து இருக்கும் புகைப்படமும், இவர்களின் பின்னணியில் நீட் கொடுமையை எடுத்துரைக்கும் செய்தி அடங்கிய செய்தி தாள் தீயில் எரியும் படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    இப்படத்திற்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கார்த்திக் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ராம்சுதர்சன் மேற்கொண்டுள்ளார். ஜி.சி. ஆனந்தன் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் பாடலக்ளை அறிவுமதி, கார்த்திக் நேத்தா, எஸ்.பி. சுப்புராமன் மற்றும் அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×