search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AR Rahman"

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் பல படங்களுக்கு இசையமைப்பதில் பிசியாக உள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்தது.


    ஏ.ஆர்.ரகுமான்

    இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    ஏ.ஆர்.ரகுமான் மகள்கள்

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் புதிதாக எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் "நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.




    • ரஜினியை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் பக்கம் திரும்பிய மணிரத்னம்.
    • மூன்று நிறுவனங்கள் தயாரிக்கும் கமல்ஹாசனின் 234ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இதையடுத்து அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிக ஆவலுடன் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது.

    இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து வீடியோ ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

    கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த வெளியான நாயகன் திரைப்படம் இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. இன்றும் மிகச் சிறந்த இந்திய படங்களில் பட்டியலில் அந்த படத்திற்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
    • இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், 'சுராங்கனி' என்ற பாடலை பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

    ஏ.ஆர்.ரகுமான்

    ஏ.ஆர்.ரகுமான்

     

    மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த தாய் மண்ணே வணக்கம் பாடலின் இந்தி பதிப்பான மா துஜே சலாம் பாடலை ராணுவ வீரர்கள் பாடினர். இதனை பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பதிவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரீ-டுவிட் செய்துள்ளார். அதில், இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கிரிக்கெட் வீரர் சச்சினை சந்தித்துள்ளார்.
    • இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்து வருகிறது.


    ஏ.ஆர்.ரகுமான்

    இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "நண்பர்களின் இலக்கு" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள சச்சின், "இசைப்புயலுடன் ஒரு அருமையான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி 2020-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
    • இந்த மனுவிற்கு ஜி.எஸ்.டி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, ரூ.6.79 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையர் 2019-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம்.


    ஏ.ஆர்.ரகுமான்

    தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ரூ.6.79 கோடி வரி செலுத்தவில்லை என கூறி, ரூ.6.79 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ் டி. நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை.


    ஏ.ஆர்.ரகுமான்

    ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டது. அதை செலுத்தாததால் அபராதம் விதிக்கப்பட்டது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

    • பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    "பொன்னியின் செல்வன்" திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


    பொன்னியின் செல்வன் படக்குழு

    இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியதாவது, "இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறுகிறேன். 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை பார்த்த பின்னர் ஓடிடி தளங்களில் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நமது கலாசாரத்தை 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகவும் அழகாக பிரதிபலிக்கிறது" என்று பேசினார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட அரங்கு அமைத்து இருந்தனர். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு பாடல் மற்றும் டிரைலரை வெளியிட்டனர்.

    ஏ.ஆர்.ரகுமான்

    ஏ.ஆர்.ரகுமான்

     

    இவ்விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, "இந்த படத்துக்காக தோடி உள்பட எத்தனையோ ராகத்தில் பாடலும், இசையும் அமைத்து மணிரத்னத்திடம் போட்டு காண்பித்தேன். ஆனால் அவர் அதை ஏற்கவே இல்லை. சில விஷயங்களை கற்பனை செய்து, தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரத்தை நினைத்து இசையமைத்தேன். இடையிடையே சின்ன சின்ன அரபிக் டச் கொடுத்து இசையமைத்தேன். மணிரத்னத்திடம் போட்டு காட்டினேன். ஒரு மாதம் கழித்து அவர் ஓ.கே. என்றார். அப்படி இந்த படத்துக்கு பார்த்து பார்த்து இசை வடிவம் கொடுத்திருக்கிறோம்" என்றார்.

    • ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'ராவணன்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா.
    • பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார்.

    பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'ராவணன்' படத்தில் இடம்பெற்ற கெடாகறி என்ற பாடல் மூலம் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா. அதன்பின்னர் எந்திரன் 2.0 படத்தில் 'புள்ளினங்காள்', சர்கார் படத்தில் 'சிம்ட்டாங்காரன்', பிகில் படத்தில் 'காலமே', என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.


    பம்பா பாக்யா

    சந்தோஷ் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் "எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…" என்ற பாடல் மிக பிரபலம் ஆனது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'பொன்னி நதி' பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார்.

    இவரது திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாடகர் பம்பா பாக்யா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான்.
    • இவர்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களாக வலம் வருபவர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான். இவர்கள் இருவரும் அண்மையில் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றனர். ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த இளையராஜா சமீபத்தில் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து எடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

    இளையராஜா

    இதனிடையே ஏ.ஆர் ரஹ்மான் கனடா நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை கவுரவிக்கும் வகையில், மார்க்கம் (Markham) நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு 'ஏ.ஆர் ரஹ்மான்' எனப் பெயர் வைக்கப்பட்டது. இது தொடர்பான சில புகைப்படங்களைப் பகிர்ந்து அறிக்கையும் ஏ.ஆர் ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.

    ஏ.ஆர். ரஹ்மான்

    இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    அனைவரின் மனம் கவர்ந்த இரு இசையமைப்பாளர்கள் ஒரே வீடியோவில் தோன்றுவதால் இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
    • இவர் இசையில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1.

    ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

    தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    ஏ.ஆர். ரஹ்மான் தெரு

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இதை நான் என் வாழ்நாளில் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கனடா 'மார்க்கம்' நகரின் (Markham city) மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி, கவுன்சிலர், இந்திய தூதரக ஜெனரல் (அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடிய மக்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


    ஏ.ஆர். ரஹ்மான் தெரு

    ஏ.ஆர்.ரஹ்மான் என்பது என்ற பெயர் என்னுடையதல்ல. இதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது பொதுவான கடவுளின் குணம், நம் அனைவரிடமும் அது உள்ளது. எந்த ஒரு நபரும் இரக்கமுள்ளவரின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, அந்தப் பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.

    என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், நான் உயர உத்வேகத்தை அளித்தனர். சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் பழம்பெரும் ஜாம்பவான்கள் உத்வேகத்தை அளித்தார்கள். நான் கடலில் ஒரு மிகச்சிறிய துளி. மேலும் பலவற்றைச் செய்வதற்கும், சோர்வடையாமல், ஓய்வு பெறாமல், இன்னும் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன்.

    ஒருவேளை நான் சோர்வடைந்தாலும், நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் உள்ளனர், இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
    • இவர் இசையில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1.

    ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.


    ஏ.ஆர். ரஹ்மான்

    தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஏ.ஆர். ரஹ்மான் தெரு

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் வகையில், கனடாவின் மார்க்கம் என்ற நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
    • இவர் அமெரிக்காவிற்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதையடுத்து இவர் அமெரிக்காவிற்கு இசை சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். மேலும், அமெரிக்காவில் இருந்து "பொன்னியின் செல்வன்" மற்றும் "கோப்ரா" படங்களின் பின்னணி இசை பணிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்களை சமீபத்தில் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


    ஏ.ஆர். ரஹ்மான் - நெப்போலியன்

    இந்நிலையில், நடிகர் நெப்போலியன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். இதற்கான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட நெப்போலியன், "ஆஸ்கார் நாயகன் திரு ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் நாஷ்வில்லில் நேற்று இரவு (ஆகஸ்ட் 9 ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..! அதே அன்பான உபசரிப்பு…!" என்று பதிவிட்டுள்ளார்.


    ×