search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyappan devotees"

    • சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வனத்துறை அருவியில் நீராட தடைவிதித்த போதிலும் ஆற்றுப்படுகையில் இன்று காலை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி பின்னர் இங்குள்ள கோவிலில் வழிபட்டு சென்றனர்.

    கூடலூர்:

    கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு ள்ளது. கார்த்திகை முதல் நாளன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி இங்குள்ள பூதநா ராயணன் கோவிலில் மாலை அணிந்து ெகாள்வது வழக்கம்.

    ஆனால் வனத்துறை அருவியில் நீராட தடைவிதித்த போதிலும் ஆற்றுப்படுகையில் இன்று காலை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி பின்னர் இங்குள்ள கோவிலில் வழிபட்டு சென்றனர். அருவியில் நீராடுவதற்கு வனத்துறை யினர் தடைவிதித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுருளி அருவிக்கு நீராட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். இதுமட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம். தற்போது மழை நின்றுவிட்டதால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×