என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Azadi Ka Amrit Mahotsav"
- அமிர்த பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மூன்று இலக்குகளை நிர்ணயித்திருந்தார்.
- இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான பாதையை வகுக்க வேண்டும்.
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்ட அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, 10 பெண்கள் உட்பட 120 பேர், 75 மோட்டார் சைக்கிள்களில் 75 நாட்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். 18,000 கிமீ தூரம் பயணித்து, தேசிய தலைநகருக்குத் அவர்கள் திரும்புகிறார்கள். இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லியில் நடைபெற்ற ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரைடர் பைக் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பிரதமர் மோடியின் தலைமையில், நாடு விடுதலையின் அமிர்தப்பெருவிழாவை கொண்டாடுகிறது. இதை சுதந்திரத்துடன் தொடர்புபடுத்தியதோடு,பல பரிமாணங்களாக மாற்றியது, பிரதமரின் புதிய சிந்தனையை காட்டுகிறது.
அமிர்தப்பெருவிழாவைவையொட்டி பிரதமர் மோடி மூன்று இலக்குகளை நிர்ணயித்திருந்தார். முதலாவதாக, புதிய தலைமுறை, இளைஞர்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு நமது சுதந்திரப் போராட்டம் மற்றும் உயிர்நீத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை அறிமுகப்படுத்துவதும் ஆகும்.
அடுத்ததாக 75 ஆண்டுகளில் நமது நாடு செய்த சாதனைகளைப் பற்றிய பெருமித உணர்வை ஏற்படுத்துவதே இதன் இரண்டாவது குறிக்கோள் ஆகும். மூன்றாவதாக, 2047ல் நாம் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது இந்தியாவுக்கான இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும்.
இந்தியா அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கான பாதையை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி கூறியுள்ளார். அமிர்த பெருவிழாவை மக்களிடம் கொண்டு செல்வதில் பிரதமர் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்