என் மலர்
நீங்கள் தேடியது "ban"
- இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
- மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதனால், இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, இம்பாலில் கடந்த வாரம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மணிப்பூரில் இணையத்தள சேவைக்கான தடை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
- மீன் பிடிப்பதற்கான குத்தகை நீட்டிப்பை ரத்து செய்தது
திருப்பூர்,:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் 480 ஏக்கர் பரப்பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இக்குளத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கில் பறவைகள் வந்து செல்கின்றன. நீர்வளத்துறையின் கீழ் பவானி வடிநில கோட்டத்தின் பராமரிப்பில் இக்குளம் இருந்த நிலையில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
திருப்பூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு, குளத்தில் இருந்து மீன் பிடிக்க 5 ஆண்டு குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஓராண்டு குத்தகை காலம் வருகிற 30ந் தேதியுடன் முடிகிறது.இக்குளத்தில் மீன் பிடிப்பதன் வாயிலாக, பறவைகளுக்கான இரை இல்லாமல் போய்விடும் என்பதால் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். மீன் பிடி தொழில் என்ற பெயரில் சிலர் பறவைகளை வேட்டையாடுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் குளத்தில் வணிக ரீதியாக மீன் பிடிக்கும் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என திருப்பூர் வனக்கோட்ட ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர், கீழ் பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளருக்கு பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கான குத்தகை நீட்டிப்பை ரத்து செய்து திருப்பூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீன் பிடி குத்தகை உரிமம் தொடர்பாக எவ்வித விண்ணப்பமும் பரிந்துரை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது.
- உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது.
- பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
ரேட்டால் என்ற வணிக பெயரில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எனும் ரசாயனம் வேளாண்மை மற்றும் இதர உபயோகங்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுவாக மக்கள் ரேட்டால் பேஸ்ட்டை எலிகளை கட்டுப்படுத்த வீடுகளில் பயன்படுத்து கின்றனர். இதை குழந்தைகள் பேஸ்ட் என கருதி உப யோகப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு எதிர்வினை மருந்து இல்லா ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதன் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.
பொதுமக்கள் யாரும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரேட்டால் பேஸ்ட்டை விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்த வேண்டாம். பூச்சி மருந்து விற்பனை நிலை யங்கள் மற்றும் இதர கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தால் மாவட்ட நிர்வாகம் அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மைய பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
பூச்சிமருந்து விற்பனையாளர்கள் மற்றும் இதர விற்பனையாளர்கள் மஞ்சள் பாஸ்பரஸ் எலி பேஸ்ட்டை விற்பனை செய்வது தெரிய வந்தால் பூச்சிக்கொல்லி மருந்து தடைச்சட்டம் 1968-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டு உள்ளது.
- 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு விசைத்தறி யில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
- இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக சட்டப்படி தண்டணைக்குரிய செயல், மீறி உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் விசைத்தறியாளர் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்பட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு விசைத்தறி யில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக சட்டப்படி தண்டணைக்குரிய செயல், மீறி உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் விசைத்தறியாளர் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 6 மாத சிறை அல்ல து 5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டணை வழங்கப்படும்.
இது தொடர்பான விவரம் பெற கலெக்டர் அலுலக அறை எண் 408-ல் இயங்கி வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.,
- 2004ம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது.
- 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது.
பிரான்ஸ் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், 19ம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியது. மேலும், வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிக்கவும் போராடியது.
2004ம் ஆண்டில், பள்ளிகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது மற்றும் 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது. இந்த தடை உத்தரவுகள் அங்கு வசித்து வரும் ஐந்து மில்லியன் வலிமையான இஸ்லாமிய சமூகத்தில் சிலரைக் கோபப்படுத்தியது. மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது என்பது பிரான்சில் ஒரு பேரணியாக உள்ளது.
இந்நிலையில், "பள்ளிகளில் இனி அபாயா அணிய முடியாது என்று முடிவு செய்துள்ளேன்" என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூறினார்.
"நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது," என்று அவர் கூறினார்.
- கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
- 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில கடல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு கேரள கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 58 வகை மீன் குஞ்சுகளை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் பலன்களை ஆய்வு செய்ய நிவுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில் கடுமையான தடையை அமல்படுத்தியதன் மூலம் கேரள மாநிலத்தின் மீன்வரத்து கடந்த நிதியாண்டில் 6.9லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
ஆகவே மீன்படி தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையடுத்து 58 வகை மீன் குஞ்சுகள் பிடிப்பதற்கான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு, அதாவது 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை நீட்டித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது.
- பக்தர்கள் கொடுக்கும் சிறிய மற்றும் பெரிய சிவப்பு நிற பாலிஸ்டர் பட்டுப்புடவைகள் ஒவ்வொரு மாதமும் அதிகளவில் சேர்ந்து விடுகிறது.
- பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கான தடை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலை போன்று மிகவும் பிரசித்தி பெற்றது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். எர்ணாகுளம் அருகே உள்ள இந்த கோவிலில் பகவதி வழிபாடு மிகவும் பிரபலமாகும்.
இந்த கோவிலில் பகவதி அம்மன் தினமும் 3 உருவங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். காலையில் சரஸ்வதியாகவும், மாலையில் மகாலட்சுமியாகவும், இரவில் துர்க்கையாகவும் காட்சி தருகிறார். சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகிறார்கள்.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பகவதி அம்மனுக்கு பட்டுப்புடவைகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம். இதற்காக கோவில் அருகே உள்ள கடைகளில் பட்டுப்புடவைகள் விற்கப்படுகின்றன. பக்தர்கள் வழங்கக்கூடிய அந்த பட்டுப்புடவைகள் பாலிஸ்டர் துணியில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
பக்தர்கள் கொடுக்கும் சிறிய மற்றும் பெரிய சிவப்பு நிற பாலிஸ்டர் பட்டுப்புடவைகள் ஒவ்வொரு மாதமும் அதிகளவில் சேர்ந்து விடுகிறது. சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு பக்தர்கள் வழங்கும் பட்டுப்புடவைகள் கோவில் திடலில் புதைக்கப்படும்.
அவ்வாறு புதைக்கப்பட்ட புடவைகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பஞ்சாயத்து அலுவலகம் மூலம் அதிகளவில் அப்புறப்படுத்தப்பட்டது. பாலிஸ்டர் பட்டுப்புடவைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டது. இதனால் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் பாலிஸ்டர் பட்டுப்புடவைகள் வழங்க கொச்சி தேவசம்போர்டு தடை விதித்துள்ளது.
சோட்டானிக்கரை பஞ்சாயத்து ஒத்துழைப்புடன் இந்த அறிவிப்பை தேவசம் போர்டு வெளியிட்டது. பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கான தடை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் கோவில் கவுண்டரில் பருத்தி பட்டுப்புடவைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவிலிலும் பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை.
- சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு.
சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.
இங்கு, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.
இதன் எதிரொலியால், சென்னையில் நாளை முதல் வரும் 17ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
- உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
- கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
- மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
பொன்னேரி:
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக தச்சூரிலிருந்து பொன்னேரி சாலைக்கும் மீஞ்சூர் அத்திப்பட்டு, எண்ணூர் துறைமுகத்தின் சாலையில் இருந்து தச்சூர் கூட்டு சாலைக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
அதனை மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். இதில் பொன்னேரி ஆய்வாளர் சின்னத்துரை மீஞ்சூர் டிராபிக் உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தனியாா் காற்றாலை நிறுவனத்தினா் மின் கம்பங்களை அமைப்பதற்காக, ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனா்.
- நீா் வழிப்பாதைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாராபுரம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் ஓடை நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனத்தின் மின் கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியா் கோவிந்தசாமியிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூா் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளா் ரா.பால சுப்பிரமணியன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் வட்டம், பொன்னிவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லதங்காள் ஓடையின் நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனத்தினா் மின் கம்பங்களை அமைப்பதற்காக, ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனா். ஆற்றின் கரைகளை சேதப்படுத்துதல் மற்றும் தண்ணீரின் போக்கை திசை திருப்புதல் போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே நல்லதங்காள் ஓடை நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்களை அமைப்பதற்கு உடனடியாக விதிக்க வேண்டும். மேலும் நீா் வழிப்பாதைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்டுமான பணிகளால் தரிசனம் பாதிக்கப்படாது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
- அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரே அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும், எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜ கோபுரத்திற்கு எதிரில், அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்படுவது தொடர்பாக சிறப்பு அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
ராஜகோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், கோபுர தரிசனம் தடுக்கப்படும் எனவும் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகளால் தரிசனம் பாதிக்கப்படாது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.