என் மலர்
நீங்கள் தேடியது "barrage"
- தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அடுத்துள்ள திரளி சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40), கட்டித் தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஹம்சவர்தணி என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று தனது மகளை கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டு சென்ற குமரேசன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் திரளி கவுண்டமா நதி தடுப்பணை அருகே ஆண் பிணம் மிதந்தது. தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.
இதுதொடர்பாக போலீ சார் விசாரணை நடத்திய போது தடுப்பணை யில் இறந்து கிடந்தது குமரேசன் என தெரியவந்தது. அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
- ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண்வாயல் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் கேசவபுரம், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன.
மேலும் மழை காலங்களில் அதிக அளவில் வீணாகும் தண்ணீரை தடுக்கும் வகையில், கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் பிஞ்சிவாக்கம், புட்லூர் ஆகிய 2 இடத்தில் தடுப்பணை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை 200 மீட்டர் நீளத்தில் அதிகத்தூர்-ஏகாட்டூர் கிராம எல்லை பகுதிகளில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கிறது.
இந்த தடுப்பணை மூலம் அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். மேலும் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அப்பகுதியில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய இந்த புதிய தடுப்பணை உதவும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
- முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.
விழுப்புரம் :
தமிழக சட்டசபையில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி பேசியதாவது:-
எனது கோரிக்கையை ஏற்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்னியூர் பகுதியில் தீயணைப்பு மீட்பு நிலையம் வழங்கி கடந்த திங்கட்கிழமை அன்று காணொலி கட்சி மூலம் திறந்த முதல்- அமைச்சருக்கு எனது சார்பிலும் விக்கிரவாண்டி தொகுதி மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராமங்களில் குறைந்த மின் பற்றாக்குறை உள்ளதால் காணை ஊராட்சி பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைத்து தருமாறு மின்சாரத்து றை அமைச்சரை கேட்டுக்கொ ள்கிறேன்.
கல்பட்டு ஊராட்சியில் இருந்து நத்தமேடு. ஆரியூர் ஊராட்சியில் இருந்து சாணிமேடு, மாம்பழப்பட்டு ஊராட்சியில் இருந்து ஒட்டங்காடுவெட்டி,கெடார் ஊராட்சியில் இருந்து செல்லங்குப்பம், கருவாச்சியிலிருந்து இருந்து புதுகருவாச்சி, பனமலை ஊராட்சியில் இருந்து பனமலைபேட்டை, பனமலை ஊராட்சியில் இருந்து உமையாள்புரம் மற்றும் அய்யூர் அகரம் ஊராட்சியில் இருந்து சிந்தாமணி ஆகிய ஊராட்சிகளை பிரித்து தருமாறு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். விக்கிர வாண்டி தொகுதியில் காணை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்ப ணித்துறை கட்டுப்பா ட்டில் உள்ள பனமலை ஈசா ஏரியை நீர் தேக்கமாக மேம்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
வாக்கூர் ஊராட்சி மேல்பாதியில் பம்பை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தருமாறு நீர்வளத்துறை அமைச்சரை கேட்டு க்கொள்கிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் கல்பட்டு மற்றும் பனம லைபேட்டை ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவும், வேம்பி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகதார நிலையமாக தரம் உயர்த்தி தரவும். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதி (100 மாணவியர்கள்) கட்டிடம் வி.சாலையில் கட்டும் பணிக்கு ரூ.4.10 கோடியும் நிர்வாக ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. இந்த 4 பணிகள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தற்போது 75 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.
- நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் பாதையில் பெரியபள்ளம் பகுதியில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கியது.
இந்த நிலையில் தடுப்பணை கட்டும் பணிகள் விறுவிறுவென நடைபெற்று தற்போது 75 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவு பெற்றுள்ளன.
இன்னும் 10 தினங்களில் தடுப்பணை கட்டும் பணி முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
தோலம்பாளையம் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்டினால் மழைக்காலங்களில் வீணாகும் மழை நீரை சேமித்து வைக்க இயலும்.
இதனால் தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும்.
இதனால் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என தாங்கள் விடுத்த தொடர் கோரிக்கையினை ஏற்று அப்பகுதியில் தடுப்பணை கட்ட அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பகுதியில் நீர் வழித்தடங்கள் புதர் மண்டி காணப்படுகிறது.
இதனை அகற்றினால் மட்டுமே இப்பகுதியில் தடுப்பணை கட்டுவதன் நோக்கம் நிறைவேறும். அதனை செய்யாமல் தடுப்பணை கட்டி என்ன பயன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும்.
- கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும்
கடலூர்:
தமிழக சட்ட சபையில் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் பேசியதாவது:-
கடலூரில் ஒரு தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கித் தர வேண்டும். கடலூரில், தடைப்பட்ட கப்பல் போக்குவரத்து மீண்டும் நடைபெற ஆவண செய்ய வேண்டும். சென்னை-கடலூர் ெரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். ங்கனாங்குப்பம், உச்சிமேடு, முதல் குண்டு உப்பலவாடி இடையே பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைக்க வேண்டும். கடலூர் புதுப்பாளையம் - ஓட்டல் தேவி வரை போக்குவரத்துக் கழகத்தை இணைக்கும் விதமாக கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும். பெண்ணையாறு - கெடிலம் மலட்டாறு போன்ற ஆறுகள் கடலில் கலக்கும் இடமாக கடலூர் உள்ளதால் குறைந்தது கடலிலிருந்து 10 கி.மீ. தூரத்திற்குள்ளாவது ஆற்றின் கரைகளை பலப்படுத்தி ,தேவைப்படும் இடங்களில் சிமெண்ட் சுவர் அமைத்துத் தர வேண்டும். கெடிலம் ஆற்றில் கடலூர் நகரப் பகுதி - கம்மியம்பேட்டை முதல் சாவடி வரை இரண்டு கரைகளையும் பலப்படுத்தி, சுமார் 2 கி.மீ. வரை சாலை அமைத்து, பஸ்பேக்குவத்தைக் தொடர்வசதி செய்து தர வேண்டும். கடலூர் சில்வர் கடற்கரையை சுற்றுலாத் தலமாக ஆக்கிட வேண்டும். செம்மண்டலம் மாதா கோயில் அருகே சுற்றுவட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் பகுதியில், நவீன வசதிகளுடன் வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும். பெண்ணையாற்றின் குறுக்கே - வெள்ளப்பாக்கம் - அழகியநத்தம் ஆகிய இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும். கடலூர் அரசு பெரியார் கல்லூரியில், புதிய பாடப்பிரிவுகள் எம்.எஸ்.சி (மைக்ரோ பயாலஜி), பி.எஸ்.சி (பயோ டெக்னாலஜி) (பயோ கெமிஸ்ட்ரி) போன்ற புதிய பாடப் பிரிவுகளில் பயிலும் வகையில் புதிய வகுப்புகள் தொடங்க வேண்டும். கடலூர் தேவனாம்பட்டினம் , துறைமுகம் பகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் வகையில் 17-ம் நூற்றாண்டில் சுரங்கப்பாதை இருந்ததாக தெரிய வருகிறது. சிதலமடைந்த மாளிகையை, கட்டிடங்களை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தி புதுப்பித்து சீரமைத்து அழகுப்படுத்தி சுற்றுலாத்தலமாக அமைத்து தர வேண்டும்.கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி ஆகியவற்றில் தூண்டில் வளைவு ஏற்படுத்தி, மீனவப் மக்களைப் பாதுகாத்திட ஆவண செய்ய வேண்டும். நாணமேடு, உச்சிமேடு, பகுதியில் குளிர்ப்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும். 2009- ம் ஆண்டு தொடங்கப்பட்ட, பாதாள சாக்கடைத் திட்டத்தை முடித்திட வேண்டும். கடலூர் தொகுதியில், மழைநீர் வடிகால் வாய்க்கால் புதைவட மின்சார பணிகள் முழுமையாக முடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை.
- கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியுள்ளது. தமிழர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.
கோவை:
கோவை காந்திபுரத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
அட்டப்பாடியில் சித்தூர் சாலையில் கூலிக்கடவு என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதன்மூலம், கோவை மாவட்டத்திற்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை. சிறுவாணி அணையை பராமரிக்க கேரளா அரசுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது.
ஆனாலும், சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்லும் பாதையை சீரமைக்காமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வுக்குகூட சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்ல முடியாமல், ஆனைக்கட்டி வழியாக சுற்றி செல்லக்கூடிய நிலை உள்ளது.
இந்நிலையில், கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியுள்ளது. தமிழர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே, கேரளா அரசின் இந்த போக்கை கண்டித்து கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பஸ் நிலையத்தில் நடைபெறும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் வக்கீல் தாமஸ், இந்மிய கம்யூனிஸ்ட் சார்பில் சிவசாமி, ம.தி.மு.க. சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் சுசி. கலையரசன், இலக்கியன், வணிகர் சங்கம் சார்பில் மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்ராகீம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சர்புதீன், எஸ்.டி.பி.ஐ சார்பில் ஆசிப், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஸ்டான்லி உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
- ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெருவில் காவிரியிலிருந்து அரசலாறு பிரிகின்றது.
இந்த காவிரி ஆற்றின் மூலம் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கரும், அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
இந்த காவிரி-அரசலாறு பிரியும் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல்வேறு பணிகளுக்காக பொதுப்பணித்துறை மூலம் நீட்டித்தல், விரிவாக்குதல், புணர மைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்தப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
இந்த நிதியின் ஒரு பகுதியில் காவிரி-அரசலாறு பிரியும் பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவ தற்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரில் தூர்வாரப்பட்டு வரும் வாய்க்காலையும் பார்வை யிட்ட அவர், இந்த வாய்க்கா லில் மீதமுள்ள 800 மீட்ட ரையும் தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.
பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியா ளர்கள் முத்துக்குமார், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23 )இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
- நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினர் சிலர் யுவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23 )இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு
இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அந்த பெண்ணை வேறொரு வருக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த பெண் தனது கணவருடன் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தார்.
தாரமங்கலம் பஸ் நிலை யம் அருகில் உள்ள பேக்கரி ஒன்றின் முன்பு நின்று இருந்த அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்ததாக கருதி அவருடைய அண்ணன்கள் 2 பேர் யுவ ராஜை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மேலும் நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினர் சிலர் யுவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் அண்ணன்கள் 2 பேரை கைது செய்தனர்.
- எப்போதோ தண்ணீர் வரும் கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
- இதன் அடியில் சுமார் 3 அடி உயரத்திற்கு திறப்பு ஷட்டருடன் கூடிய தடுப்பு கட்டி தண்ணீரை சேமித்தால் இப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும்.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மாதவன்குறிச்சி ஊராட்சி அமராப்புரம் வழியாக செல்லும் கருமேனி ஆற்றில் அடிக்கடி தண்ணீர் வருவதில்லை. உடன்குடி பகுதியில் அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பி கடலுக்குச் செல்லும் போது மட்டும் தான் இந்த ஆறு வழியாக தண்ணீர் வரும். தொடர்ந்து சுமார் 3 வருடங்களாக தண்ணீர் வரவில்லை. எப்போதோ தண்ணீர் வரும் கருமேனி ஆற்றின் குறுக்கே அமராபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் அடியில் சுமார் 3 அடி உயரத்திற்கு திறப்பு ஷட்டருடன் கூடிய தடுப்பு கட்டி தண்ணீரை சேமித்தால் இப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். அருகில் உள்ள கடல் நீர்மட்டம் விவசாய நிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்படும். எனவே உடனடியாக தடுப்பு அணைகட்ட வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இதுபோன்ற கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் முழுமையாக கலந்து கொண்டு வளர்ச்சிக்கும், தனிநபரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு வழங்கும் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.
பொதுமக்கள் முக்கிய கோரிக்கையான மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும். அதேபோல் காவேரி கூட்டு குடிநீர் இணைப்பு வரும்வரை ஆழ்துளை கிணறு மூலம் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் கூரியூர் கிராமத்திற்கு பஸ் நிறுத்தம், புதிய நியாய விலைக்கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கிராம சாலைகள் சீரமைக்கவும், தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை மூலம் பொதுமக்களுக்கு தேவை யான திட்டங்களை கால தாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு மேல்முறையீட்டில் உரிமைத் தொகை பெற்று தரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபா கரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தோசம், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, சேவுகப்பெருமாள், செயல் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
- தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருப்பத்தூர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புகழ்பெற்ற பாடலை தந்த கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான "பூங்குன்ற நாடு" என்று அழைக்கப்படும் சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
முன்னதாக ஊராட்சி வரவு செலவு கணக்குகள் கிராம மக்கள் முன்னி லையில் சமர்ப்பிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கணியன் பூங்குன்றனாருக்கு திருப்பத் தூர் பொன்னமராவதி செல்லும் சாலையில் மகிபாலன்பட்டி விலக்கு ரோட்டின் முன்பு அவருக்கென்று நினைவு வளைவு ஒன்றை எழுப்புதல், பிறந்த ஊரான இம்மண்ணில் மணிமண்ட பம் ஒன்று அமைத்தல், மேலும் மகிபாலன் பட்டிய லில் இருந்து வேலங்குடி கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதி பாதையை தார் சாலையாக மாற்றுதல், சமுதாய கூடம் கட்டுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
கொன்னத்தான்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மன்ற தலைவர் அழகு பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கொன்னத்தான் பட்டி மற்றும் துவார் ஆகிய இரு ஊராட்சிகளை இணைக்கும் அயிரக்குடி பெரிய கண்மாயிக்கு பருவ மழை காலங்களில் தண்ணீர் வரும் விருசுளி ஆற்றின் வரத்து கால்வாயின் குறுக்கே ஆயகட்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் புதிய தடுப்பணை கட்டுதல்,சமுதாய கூடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல்,அனைத்துசமுதாயத்தினருக்கான பொது மயான கரையில் தண்ணீர் தொட்டி கட்டுதல், 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொன்னைத்தான் குடிநீர்ஊரணி சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்து அதன் உள்ளே தென்னை மரம் நடுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டங்களில் ஊராட்சி மன்ற செயலர்கள், வார்டு உறுப்பினர்கள், அங்கன் வாடி பணியா ளர்கள், மகளிர் சுயநிதி குழுக்கள், கிராம பொது மக்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவ லர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
- அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
- நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வெளிவரும் தண்ணீரால் வல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி வழிகிறது. அணைக்கட்டு முழுமையாக நிரம்பி சுமார் 1 அடி உயரத்திற்கு 2250 கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது.
இந்த தடுப்பணையில் இருந்து வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்தும், டைவ் அடித்தும், குளித்தும் குதூகலமடைந்துள்ளனர். இந்த அணைக்கட்டில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றின் வழியே எண்ணூர் கடலுக்கு செல்ல உள்ளது. கனமழையால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் வல்லூர் அணைக்கட்டு உள்ளிட்ட நீர்நிலைகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பொன்னேரி ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம் அணைக் கட்டில் இருந்து 900 கன அடி வெளியேறும் மழை நீர் பழவேற்காட்டில் கடலில் கலக்கின்றன. பெய்து வரும் மழையினால் பொன்னேரி பகுதிகளில் 28 வார்டுகளில் மழைநீர் தேங்கியும் பொன்னேரி- மீஞ்சூர் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற முடியாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.
பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட துரைசாமி நகர், ஏ ஏ எம் நகர், பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.